<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
எங்க ஏரியால தண்ணீர் இல்ல.... ஆனா சென்னைக்கு ஆபீஸ் போன நான் மாட்டிகிட்டேன் வேட்டுக்கு வர முடியாம... கடைசியா வீட்டுக்கு திரும்ப இரண்டு நாள் ஆகிவிட்டது... வியாழன் மாலைதான் வந்தேன்... இங்க வந்தா எந்த நெட்வொர்க் இல்லை... இன்னைக்கு தான் பிராட் பிராண்ட் வேலை செய்கிறது...
|
#12
|
|||
|
|||
Quote:
Quote:
மச்சான் நம்ம ஏரியாவில் நன்றாக இருட்டி கொண்டு மழை பொழிகிறது. |
#13
|
|||
|
|||
அன்பு நண்பர்களே,
வணக்கம். அனைவரும் நலம் என்ற செய்தியைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி . மழை விடாமல் பெய்து தாம்பரத்தில் 49 செ.மீ . என்ற பதிவை கொடுத்ததும் நான் இருக்கும் இடம் நீர் ஓடியதே தவிர தண்ணீர் நிற்க வில்லை. என்ன ஓர் கொடுமை என்றால் பி .எஸ் .என் .எல் . நெட் ஒர்கை கட் செய்து விட்டார்கள் .. பவர் ஒரு நாள் முழுவதும் இல்லை. மற்ற படி சிரமம் இல்லை. நன்றி ..வணக்கம். |
#14
|
|||
|
|||
சென்னையில் லோக நண்பர்கள் மற்றும் அனைவரும் நலம் என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சி.
|
#15
|
|||
|
|||
சென்னை நண்பர்கள் அனைவரும் நலமாக இருப்பதை கேட்டவுடன் நிம்மதியாக உள்ளது. பலரின் தொலைபேசி எண்கள் என்னிடம் இருந்தாலும், அங்கு மின்சாரம் இல்லாததால் நான் அவர்களை அழைக்கவில்லை. சென்னை வாசிகள் உங்களின் இருப்பிடத்தை சுற்றி இருந்த நிலைமையை மட்டுமே பார்த்திருப்பீர்கள், ஆனால் நாங்கள் முழு சென்னையின் நிலையை பார்த்து வேதனை அடைந்தோம். உங்களின் இழப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வர மன திடத்தோடு இருங்கள்.
|
#16
|
|||
|
|||
நீங்கள் மேடான இடத்தில் இருந்ததால் பரவாயில்லை.
உங்களின் வரவு எங்களுக்கும் மகிழ்ச்சி நண்பரே.
|
#17
|
||||
|
||||
நண்பர் "jaya6" சற்று நேரத்துக்கு முன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பத்திரமாக இருப்பதாக கூறினார். அவர் வீட்டை சுற்றி கடந்த 5 நாட்களாக முழங்கால் அளவுக்கு ஒரே தண்ணி மயம்! மின்சாரம் இல்லை ! செல்போனும் வேலை செய்யவில்லை ! இப்போதுதான் செல்போன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது ! இன்னும் பிராட் பேண்ட் முடங்கியிருக்கிறது !
__________________
ராசு |
#18
|
|||
|
|||
சென்னை நண்பர்கள் அனைரும் நலமாக உள்ளார்கள். இன்னலிலிருந்து மீண்டுவிட்டார்கள் என்ற செய்தி மகிழ்சியை கொடுத்தது
|
#19
|
|||
|
|||
அதிர்ஷ்டவசமாக சற்று நேரத்திற்கு முன்பு போனில் புழுவாரை தொடர்பு கொள்ள முடிந்தது. தரை மாடியில் இருந்த அவர் வியாழன் கிழமை வரை முதல் மாடியில் இருந்ததாகவும், இப்போது திருப்போரூரில் இருப்பதாகவும் சொன்னார். வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் நீரில் மூழ்கி விட்டதாக சொன்னார். குடும்பத்தினர் நலம், உடல் நல குறையேதும் இல்லை என்றும் சொன்னார்.
சென்னையில் வசிக்கும் நண்பர் கோடங்கியாருடன்தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1-12-15 க்கு அப்புறம் அவர் தளத்திற்கு வரவில்லை. யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லவும். |
#20
|
|||
|
|||
நண்பர்களின் பதிவுகளை கண்டு நிலைமை அறிந்துக்கொண்டேன். லோகவாசிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன். சென்னை வாசிகளில் நான் தொலைப்பேசி தொடர்பில் இருப்பது திரு ராஜேஷ் அவர்களிடம் மட்டுமே. ஆனால் போன் வேலை செய்யுமோ என்ற காரணத்தினால் பேசவில்லை. லோகத்திலும் சரியாக வந்துபோக முடியவில்லை. கோடங்கியார் நலமுடன் இருப்பார் என்று எண்ணுகிறேன்.
இந்த வெள்ளத்தினை பார்த்ததும் எனக்கு எங்கள் சூரத் வெள்ளம் தான் நினைவிற்கு வந்தது. நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஃபுட்போல் மேட்ச் போல் வந்துபோகும். அப்படி ஒரு முறை வந்த பொழுது தான் ப்ளேக் என்ற மோசமான நோய் வந்தது. நான் இந்தியாவிலிருந்து கிளம்பும்பொழுது கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெள்ளத்தினை பார்த்துவிட்டு தான் கிளம்பினேன். அபார்ட்மெண்ட்டின் மொட்டைமாடியில் நின்றுக்கொண்டு ஹெலிகாப்டரிலிருந்து போடும் உணவிற்கு கையும் ஏந்தியிருக்கிறேன். ம்ம் கசப்பான நிகழ்வுகள்.. தமிழகத்தில் எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். அவர்களிருவருக்கும் ஆபத்தில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன். பாண்டியிலும் வெள்ளம். அநபாயனிடம் யாராவது பேசினீர்களா? ராரா & மச்சான் குமரி பக்கம் எந்த பிரச்சினையும் இல்லையே? தாமிரபரணியிலும் வெள்ளம் என்று கேள்விப்பட்டேன். பச்சி நலமா? |
|
|
|