<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
|
#72
|
|||
|
|||
அனைத்து அன்பு லோக நண்பர்களுக்கு என் இனிய நமது திருநாள் நல் வாழ்த்துக்கள்.
|
#73
|
|||
|
|||
Quote:
பொங்கலையும் எங்களுக்கு அளித்த மஞ்சு அவர்களுக்கு.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#74
|
|||
|
|||
வண்ண விளக்கு அலங்காரங்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாட கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்
வீடுகள் தோறும், அரசுக் கட்டடங்கள் அனைத்திலும் வண்ண விளக்குகள் அமைத்து, சமத்துவப் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ் சமுதாயம் கொண்டாடும் பொங்கல் விழா, சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி உழைப்பையும் உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி தெரிவிக்கும் இனிய பண்பாட்டுத் திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் மகத்தான திருவிழாவாக, தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் கொண்டா டப்படுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என மக்கள் ஒவ்வொருவரையும் நம் உடன் பிறந்தவராக கருதும் உயரிய சிந்தனையை உலகுக்கு தந்த தமிழினம் மனித சமுதாயத்திற்கே பொதுவான திருவிழாவாகக் கண்டுள்ள தனிப்பெரும் திருநாள் பொங்கல் திருநாள். அந்த பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தனிச் சிறப்புடன் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பி கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் திருவிழா மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டதை மகிழ்ச்சியோடு நினைவுகூறுகிறேன். தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளையெல்லாம் தடையின்றி நிறைவேற்றி மக்கள் சமுதாயம் பயன்கண்டு வரும்வேளையில், வானம் வரையாது வழங்கி, தமிழ்நிலம் முழுவதும் விளைச்சல் நிறைந்து, உழவன் உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில், ஏழைப் பாட்டாளி மக்களின் இதயம் குளிர்ந்திடும் வேளையில், தொழிலாளர் சமுதாய தோழர் களெல்லாம் கோரிக்கைகள் கைகூடி களித்திடும் வேளையில் இந்த ஆண்டின் பொங்கல் திருநாளையும் முந்தைய ஆண்டைவிட மிகுந்த மகிழ்ச்சி யோடும் எழுச்சியோடும் கொண்டாடிட தமிழக அரசின் சார்பில் தமிழ் மக்களை அன்போடு வேண்டுகிறேன். இந்த ஆண்டின் பொங்கல் நாளை ஒவ்வொரு வீட்டிலும் வண்ணக் கோலங்களிடுவீர், மாவிலை தோரணங்கள் அழகுற அமைத்திடுவீர். ஊர் பொது இடங்களில் தென்னை, வாழை, ஈச்சங் குலைகளும், தோகை விரிந்த கரும்புகளும், இஞ்சி, மஞ்சள் கொத்துகளும் கொண்டு அலங்கரிப்பீர். பொங்கல் நாளன்று பொது இடங்களில் அழகுபடுத்தி அனைவரும் அங்கு கூடி வீடுகள்தோறும் புதுப் பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடுவீர். மகளிர், இளைஞர் திறம் விளங்க கோலப் போட்டிகளையும் வீர விளையாட்டுகளையும் ஆங்காங்கே நடத்துங்கள். கிராமப்புற நடனங்களும், மற்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தி, விருதுகளும் பரிசுகளும் வழங் கிடுவீர். வணிக நிலையங்களை சாலைகளை சோலைகளை வண்ண விளக்குகளால் ஒளி உமிழச் செய்திடுவீர். கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வீடுகள் தோறும், அரசுக் கட்டடங்கள் அனைத்திலும் பொங்கல் நாளன்று வண்ண, வண்ணமாய் சாரவிளக்குகள் அமைத்து குலுங்கிட செய்வீர். தமிழகம் முழுவதும் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப் பெரும் பண்பாட்டை தரணிக்கு வெளிப்படுத்தும் தமிழர் திருவிழா மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் தமிழகம் எங்கும் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்பட ஊக்கமளிக்க வேண்டும். பொங்கல் விழா கொண்டாடும் வேளையில், புதிய உணர்வுகள் நம் உள்ளத்திலே ஊற்றெடுக்க வேண்டும். சாதி, மத, இன வேறுபாடுகளை அகற்றிடும் அன்பு உணர்வு தழைத்திட வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சிகள் வேறுபாடுகளுக்கு சற்றும் இடம் கொடுத்திடாமல், இந்த பொங்கல் விழா இன உணர்வோடு அனைவரையும் இணைக்கும் அருங்கலை விழாவாக மலர வேண்டும். எனவே, ஒவ்வொரு பகுதியிலும் மகளிர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆங்காங்கே உள்ள அமைப்புகளின் பிரதிநிதிகள், சான்றோர்கள் பொதுமக்கள் என யாவரும் ஒருங்கிணைந்து இந்த ஆண்டின் பொங்கல் விழாவுக்கு மேலும் பெருமை சேர்க்க அணி திரள்வீர். பொங்கல் திருநாளை கொண்டாடி - தமிழகம் எங்கும் மகிழ்ச்சி எழுந்தது - தமிழர் இதயமெல்லாம் இன்பம் செழித்தது என்று ஊரும் உலகும் பேச ஒன்றுபட்டு பொங்கல் விழா கொண்டாட-என்அருமைத் தமிழ் மக்களைஅன்போடு வேண்டுகிறேன்." வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#75
|
|||
|
|||
தலைவர்களின் தமிழர் திருனாள் வாழ்த்துக்கள்
தலைவர்கள் பொங்கல் வாழ்த்து பொங்கலை முன்னிட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் கலைஞர் கருணாநிதி: தைத்திங்கள் முதல் நாள் தமிழர் திருநாள், பொங்கல் நன்னாள் என தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. உழைத்துப் பயன் விளைவிக்கும் உழவர் சமுதாயம் அறுவடை செய்த நெல்லை ஆக்கி உண்பதற்கு முன் உடன் உழைத்தவர்க்குப் பகிர்ந்து வழங்கி, விளைச்சலுக்குத் துணைபுரிந்த வான்மழைக்கும் கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூறி மகிழ்ந்து கொண்டாடும் பொன்னாள் பொங்கல் நன்னாள். 7000 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தும், கடந்த ஆண்டில் 6 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 1251 கோடி பயிர்க்கடன் வழங்கியும், நிலமற்ற 1 லட்சத்து 37 ஆயிரம் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 671 ஏக்கர் இலவச நிலம் வழங்கியும் வரலாறு காணாத வகையில் இந்த அரசு விவசாயிகளை அரவணைத்து வருகிறது. உலகத்தார்க்கு ஆணி என திருவள்ளூர் புகழ்ந்து பாடிய உழவர் பெருங்குடி மக்களுக்கும், ஏனைய உழைப்பாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய அரிய பொன் மொழியாகும். தை வந்தால் பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இன்முகம் காட்டி இத்திருநாளை இனிதே வரவேற்போம். இந்த பொங்கல் நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் பொங்கல் பொங்கட்டும், வளம் கொழிக்கட்டும், புதுவாழ்வு பூத்துக் குலுங்கட்டும் என மனமார வாழ்த்தி தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதிமுக பொதுச்செயலர் வை.கோ: தைப்பொங்கல் தமிழர்களின் தேசியத் திருவிழா. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப்பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க்கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும், இத் தைத் திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்: பொங்கல் திருநாளை உழவர் திருநாளாக அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். உழைப்பின் பயனை எல்லோரும் ஒன்று கூடி அனுபவிக்கும் அறுவடைத் திருநாள் இது. விவசாயிகளின் வாழ்வில் புதுப்பொலிவு பொங்கட்டும். நெஞ்சங்களில் இனிமை தங்கட்டும். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் |
#76
|
|||
|
|||
"ஹேப்பி பொங்கல்" வேண்டாம் அழகு தமிழில் வாழ்த்து சொல்லுங்கள்
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் திருவள்ளூர், ஜன. 14: "ஹேப்பி பொங்கல்" என்று சொல்லாமல், அழகு தமிழில் எல்லோரும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவள்ளூர் ஒன்றியம் வேப்பம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. மாவட்டக் கலெக்டர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். ஆ.கிருஷ்ணசாமி எம்.பி., ரங்கநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கொப்பூர் விஜயகுமார், திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் வி.எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தனர். விழாவில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்பன் ஆகியோருடன் கலந்து கொண்டார். ஸ்டாலின் குடும்பத்தினர், திருவள்ளூர் பெண்களுடன் சேர்ந்து பொங்கலிட்டனர். மகளிர் சுய உதவிக் குழுவினரிடையே நாடகப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழா முடிவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: பொங்கல் விழா, தமிழர்களின் திருநாள் என்பதால், எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக சேர்ந்து கொண்டாட வேண்டும். இதற்காகவே, சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டுமென முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் கடந்த ஆண்டு முதல் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமத்துவப் பொங்கல் விழா, எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இது நம் அனைவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டாடும் சமத்துவ விழாவாக அமைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 1989ல் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது. இது தமிழர் திருநாள். ஆனால், பலர் "ஹேப்பி பொங்கல்" என்றே வாழ்த்துச் சொல்லுகிறார்கள். அழகு தமிழில் பொங்கல் வாழ்த்து கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் விழாவையும் எனது குடும்பத்தோடு ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று மக்களோடு மக்களாக கொண்டாட வேண்டுமென என உறுதிபூண்டுள்ளேன். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். தளபதி மு.க.ஸ்டாலின் சார்பில் அனைவருக்கும் தமிழர் திருனாள் வாழ்த்துக்கள் |
#77
|
|||
|
|||
தமிழன்ப நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கல் தமிழன்பன் கோபால் |
#78
|
||||
|
||||
காமலோகத்து அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தைத்திருநாள் இல்லம் எல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் எத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல். |
#79
|
||||
|
||||
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Last edited by ஆதி; 15-01-08 at 09:19 AM. |
#80
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
|
|
|
|