<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சதுரங்க ராஜா ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன் ஆனார்
இந்தியாவின் விஸ்வநாதன் ஆணந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
சற்று முன்னர்(அதாவது 29.10.09 புதன் கிழமை இந்திய நேரம் சுமார் நள்ளிரவு 12 மணியளவில்-இரண்டு மணி நேரம் முன்னர்) ஜெர்மனியின் பாண் நகரில் நடைபெற்று முடிந்த போட்டியில் அவர் இந்தப் பட்டத்தை மீண்டும் வென்றார். ரஷியாவின் விளாடிமிர் கிராம்ணிக் அவர்களை 6.5 க்கு 4.5 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்று தனது பட்டத்தை ஆனந்த் அவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 12 ஆட்டங்கள் கொண்ட இந்த்ப் போட்டியில் மூன்று முறை வென்றார். ஒரு முறை தோல்வி. ஏழு முறை வெற்றி தோல்வியின்றி ஆட்டம் முடிவடைந்தது. இந்த வெற்றிக்காக சுமார் 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை அவர் கிராம்ணிக்குடன் பகிர்ந்து கொள்கிறார். ஆனந்த் தனது முதல் உலக சாம்பியன் பட்டத்தை 2000 ஆம் ஆண்டு இரானில் வென்றார். இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு மெக்ஸிகோவிலும் மூன்றாவது முறையாக தற்போது 2008 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பாண் நகரிலும் வென்றுள்ளார். கடந்த முறை நடைபெற்ற போட்டியிலும் கிராம்ணிக்கை எதிர்த்தே அவர் விளையாடினார். தன்னுடைய முழுத்திறமைகளும் வெளியாகும் வகையில் கிராம்ணிக்கின் ஆட்டம் இருந்தது என்று ஆட்டம் முடிந்தவுடன் பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிடம் ஆனந்த் தெரிவித்தார். சென்னையில் பிறந்த ஆனந்த் தற்போது ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். உலக சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ள ஆனந்த் அவர்களை வாழ்த்துவோம். |
#2
|
|||
|
|||
விஸ்வநாத் ஆனந்த் ற்கு என் வாழ்த்துக்கள்
|
#3
|
|||
|
|||
சந்தோசமான செய்தி நண்பரே.. இரண்டு நாளைக்கு முன்பு க்கூட தோல்வி என்று படித்தபொழுது, மனம் கலங்கியது. மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து க்கொண்டது மகிழ்ச்சியான விசயம். மிக்க நன்றி நண்பரே
|
#4
|
|||
|
|||
வாழ்த்துவோம் தங்க தமிழரை...!..."மெட்ராஸிலிருந்து வந்த புலி" என்று யாகூ செய்தி வெளியிட்டு இருக்கிறது!
|
#5
|
|||
|
|||
எப்படியும் வெற்றி பெறுவார் என்று தெரியும். பதினோரு ஆட்டங்களையும் கூர்ந்து கவனித்து வந்தேன். பத்தாவது ஆட்டத்தில் தோற்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும் பல ஆண்டுகள் உலக சாம்பியனாக இருக்க வாழ்த்துக்கள்.
|
#6
|
||||
|
||||
கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்தே அவர் ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி என்று உறுதி.. தினமும் செய்தி பார்ப்பேன்... ஒரு ஆட்டத்தில் டிரா ஆகியது... அரை புள்ளி கிடைத்தது, அப்போகூட ச்சே!!.. ஜெயிக்காம போயிட்டாரே என்று மனது கனத்தது... அப்புறம் அடுத்த ஆட்டம் டிரா செய்தால் வெற்றி.. எப்படியும் டிரா செய்வார் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் தோல்வி... ரொம்பவும் நொந்துட்டேன்... சரி கடைசி ஆட்டம் உள்ளதே என்று சமாதான படுத்தி கொண்டேன்.. கடைசியில் வெற்றி நமதே!!!!... இப்போ இங்குதான் வெற்றியின் செய்தியை படித்து மகிழ்ச்சியுறுகிறேன்...
மகிழ்ச்சியுறும் செய்தி தந்த நண்பருக்கு நன்றிகள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#7
|
|||
|
|||
ஆனந்தின் வெற்றிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை எனலாம்....
முத்துவீரனுக்கு நன்றி... |
#8
|
||||
|
||||
தினமும் ஆர்வமுடன் செய்திகளை கவனிக்க வைத்துவிட்டார்.
வந்துவிடும் வந்துவிடும் என்ற வெற்றிச் செய்தி இப்போது வந்தேவிட்டது. ஆனந்த் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
__________________
|
#9
|
|||
|
|||
ஆனந்தின் வெற்றிக்கு மனதார வாழ்த்துக்கள்.
சென்னைக்காரரா?? ஸ்பெயினில் குடியுறிமை வாங்கி செட்டில் ஆகிட்டாருங்க. எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். |
#10
|
|||
|
|||
மூன்றாவது முறையாக விஷ்வநாத் ஆனந்த் செஸ்சில் உலக சேபியன்!!!!
தமிழனுக்கு பெருமையைத் சேர்த்தார்!!! வாழ்த்துவோம் அவரை!!! வாழ்த்துக்கள்...... |
|
|
|