<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத மாபெரும் இழப்பு ! சோகமான செய்தி !
__________________
ராசு |
#22
|
|||
|
|||
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருக்கும்போது நிலை தடுமாறி மரணத்தை தழுவினார் என்ற செய்தியை திங்கட்கிழமை இரவு 8.15 மணி அளவில் தொலைக்காட்ச்சி சேனல்கள் பிளாஷ் செய்தியாக வெளியிட்டபோது என் கண்களை என்னால் நம்ப இயலவில்லை. அது உண்மையாய் சுட்டபோது மனம் கொண்ட வேதனைக்கு அளவில்லை. நான் கடந்த 2004 ம் வருடம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் பணியாற்றியபோது உடன் பிறந்த சகோதரரை பார்க்க அவ்வூருக்கு அவர் வந்தபோது அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. வெள்ளை உள்ளத்தை பறை சாற்றும் பால்வடியும் முகம். கருணை பொங்கும் விழிகள். இன்றும் மனதை விட்டு அகலவில்லை. உழைப்பும் நேர்மையும் தரும் உயர்விற்கு அவரின் வாழ்வு தலை சிறந்த உதாரணம்
ஏழை குடும்பத்தில் ஒரு படகோட்டியின் மகனாக பிறந்து ராமேஸ்வரத்தில் வீடு வீடாக செய்தித்தாள் போட்டு தந்தையின் வருமானத்தை கூட்டி பிற்காலத்தில் தான் பிறந்த மண்ணின் பெருமையை உலகுக்கு காட்டியவர். உலக வல்லரசான அமெரிக்காவால் ஏவப்பட்டு வானில் வட்டமிடும் தொழில்நுட்பம் மிகுந்த எண்ணற்ற செயற்கை கோள்களின் வலிமைமிக்க கேமராக்களின் கழுகுப்பார்வையில் மண்ணை தூவி ராஜஸ்தான் மாநில பொகாரனில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகோரை அயர வைத்தும் அணுத்திறன் மிக்க அக்னி ஏவுகணை தயாரித்தும் நாட்டின் ஏவுகணை நாயகன் என்றும் புகழ் பெற்று விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு காட்டிய சாதனை விஞ்ஞானி. அதுமட்டுமா விவேகானந்தர் "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்று அழைத்து உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தது போலே பிரான்ஸ் நாட்டில் ஐரோப்பிய யூனியனில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்கண்ணனாரின் புறநானூற்று செய்யுளை மேற்கோள் காட்டி தமிழனின் மனித நேயத்தை உலகறிய பறை சாற்றி அதுவரை அங்குள்ளோர் கேட்ட உரைகளில் தலைசிறந்தது என்று போற்றப்பட்டு மேற்கத்திய மக்களின் சிந்தை கவர்ந்த மெய்ஞானி . முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு அடுத்த படியாக குழந்தைகளின் இதய நாயகனாக திகழ்ந்தவர். குழந்தைகள் மற்றும் மாணவர்களின் முகத்தில் காணும் சிரிப்பே தமக்கு அனைத்தையும் விட பேரானந்தம் தரும் தருணமாக மனம் நிறைந்து சொல்பவர். பட்டங்களும் பதவிகளும் அவரை நாடி ஓடி வந்தன. நமது மத்திய அரசு பத்ம பூஷன் பத்ம விபூஷன் மற்றும் நாட்டின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா முதலிய விருதுகள் தந்ததுடன் நாட்டின் ஜனாதிபதியாகவும் இவருக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தது. உலகின் நாற்பதிற்கு மேற்பட்ட பலகலை கழகங்கள் இவருக்கு டாக்டரேட் பட்டம் தந்து பெருமை தேடிக்கொண்டன. கிடைத்த உயர்பதவியை ஏற்கும் நிகழ்வை இவருக்கு டாக்டரேட் பட்டம் தன் கையால் தரவேண்டும் என்பதற்காகவே ஒத்திவைத்து உயர்பதவி தரும் கவுரவத்தை விட இவருக்கு தன்கையால் டாக்டரேட் பட்டம் தரும் பெருமையே பெரும் கவுரவம் என்று நினைத்த உலகப்பெருமக்களும் உண்டு. பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் மக்கள் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். அதுகாறும் யாரும் நுழைய முடியாத இரும்புக்கொட்டையாக இருந்த ஜனாதிபதி மாளிகையை பாரமர்களும் அணுக அனுமதி வழங்கியவர். உலகின் மிக உயர்ந்த போர்களமான பனி சூழ்ந்த சியாசின் க்லேஸியர் சென்று நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் உரையாடி அவர்களுக்கு உற்சாகமளித்த முதல் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். ஆழ்கடலில் நீர்மூழ்கி கப்பலிலு ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர்சானிக் விமானத்தில் பறந்தும் அதிகாரிகளுடன் அளவளாவிய முதல் ஜனாதிபதியும் இவரே. இந்த நாட்டிற்கு தமிழகம் தந்த முத்தான மூன்றாவது ஜனாதிபதி. இத்தகைய சாதனை வீரர் வாழ்வின் கடைசி தருணத்திலும் பயணத்தில் பாதுகாப்பிற்காக தன்னுடன் கால்கடுக்க நின்ற சாதாரண பாதுகாப்பு பணியாளரை அழைத்து "எனக்காக கால்கடுக்க நின்றீர்களே சோர்வடையவில்லையா? உணவருந்திநீர்களா?" என்று மனித நேயத்துடன் அவரை விசாரித்து நெகிழவைத்திருக்கிறார். இந்த செய்தியை படித்த நாமும் நெகிழ்கிறோம். "கால்வலிக்கவில்லையா?" என்று கேட்டவர் சில மணித்துளிகளியே உலகை விட்டு நீங்கி மீளாத்துயிலில் ஆழ்ந்தது கண்டு எங்கள் மனமெல்லாம் வலிக்கின்றதே. யாரைய்யா எங்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்று நெஞ்சம் வேதனையில் விம்முகிறது. மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? என்ற மக்கள் திலகத்தின் பாடல் காட்சியில் தேசபிதா மகாத்மா காந்தியின் படம் காண்பிக்கப்படும். இன்று அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டால் மஹாத்மா காந்தி சென்ற அதே பாதையில் டாக்டர் அப்துல் கலாமும் நடப்பது போல கண்டிப்பாக காட்டப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மனித நேய உத்தமர் இன்று நம்மிடையே இல்லை. பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் என்று பாரதி சுட்டிக்காட்டியபடி பாரதத்தின் தலைசிறந்த புதல்வர்களுள் ஒருவர் டாக்டர் அப்துல் கலாம் என்பது மறக்க முடியாத உண்மை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் புகுந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. வாழ்க தமிழ் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்.
|
#23
|
|||
|
|||
வாயிருந்தும் சொல்ல வார்த்தைகள் இல்லையே அய்யா அம்மணி !அந்த மேதையைப் பற்றிசொள்ள நான் யார் அய்யா அம்மணி !அவருடைய ஆன்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள் அய்யா அம்மணி !
|
#24
|
||||
|
||||
காந்திஜி, காமராஜ் போன்ற மாமனிதர்கள் வரிசையில் இடம் பெற்றவர் மறைந்த நம் தலைவர் அப்துல் கலாம் அவர்கள்! அவர் காட்டிய பாதையில் இளைஞர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்! தேசத்துடன் நானும் என் கண்ணீரை மறைந்த தலைவருக்குக் காணிக்கையாக, அஞ்சலியாகச் செலுத்துகிறேன்!
|
#25
|
||||
|
||||
ஒட்டு மொத்த இந்திய மக்களின் இதயங்களில் வாழும் அப்துல் கலாம் இன்று நம்மிடம் இல்லை, ஆனால் அவர் விதைத்து சென்ற கருத்துகளை பின்பற்றி வருங்கால சந்ததியினர் வளமான வாழ்கை நடத்துவார்கள் என்று நம்புவோமாக*
ஜெய் ஹிந்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#26
|
|||
|
|||
Quote:
|
#27
|
|||
|
|||
தங்க தமிழன் ,தலை சிறந்த விஞ்ஞானி , மாணவர்களின் விடிவெள்ளி, தமிழனை தலை நிமிர செய்த தலைவன் ...அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...
|
#28
|
|||
|
|||
மாமனிதர், மாபெரும் விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, இந்தியாவின் மிசைல் மேன்,மாணவர்களின் வழிகாட்டி
அவர்கள் சொன்ன,உயர்ந்த லட்சியத்தை அடைய 'கனவு காணுங்கள்' என்ற சொல்லுக்கும் செயலுக்கும் உறியவர்,அவரின் மறைவு நமது நாட்டிற்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பு, இவர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்......!!!! |
#29
|
|||
|
|||
இந்தியாவின் தூண் சாய்ந்தது.. இனி இளைங்கர்கள் கையில் இந்தியா!
|
#30
|
|||
|
|||
நல்லவன் மற்றும் வாத்தியார் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.
ஜெய்ஹிந்த் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|