<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அபார நடிகை எஸ்.என்.லட்சுமி இயற்கை எய்தினார் !
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அபார நடிகை எஸ்.என்.லட்சுமி இயற்கை எய்தினார் !
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி அவர்கள் நேற்று சென்னையில் காலமானார். அவருக்குவயது 85. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர். நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அவர் நடித்து வரும் ஒரு சீரியலின் நடிகர், நடிகையர் சந்தித்த போது தான் நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில் நலமுடன் திரும்பி வருவேன் என்றும் கூறினார். இந்நிலையில் நேற்று அவரது உடல் திடீரென மோசடைந்து மருத்துவ மனையிலேயே நேற்று இரவு காலமானார். பெரியகதை நாயகராக இருந்தால்தான் உண்டு, பெரிய கதை நாயகியாக இருந்தால்தான் பரிமளிக்கமுடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில்முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி. நடிப்பு, நடிப்பு என்று கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாத எஸ்.என்.லெட்சுமி, தனது அண்ணன் பேத்திகளுடன் சென்னை, சாலி கிராமத்தில் வசித்து வந்தார். மறைந்த எஸ்.என்.லெட்சுமியின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவை கேட்டு ஏராளமான திரை நட்சத்திரங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.என்.லெட்சுமியின் இறுதி சடங்கு, விருதுநகரில் உள்ள அவரது சொந்த ஊரான ‘சென்னல்குடி’யில் நாளை(21.02.12) நடைபெற இருக்கிறது. அவரது வாழ்க்கைக் குறிப்பு: அவருடைய அம்மா பழனியம்மா தன் எட்டு குழந்தைகளுடன் சொந்தக் கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க விருதுநகருக்குக் குடியேறினார். ஆறு ஆண் பிள்ளைகளையும் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுத்தினார். பெண் பிள்ளைகள் மாவு அரைக்கும் தொழிலில் விட்டார். அந்த வறுமையான கால கட்டத்தில் கடைசிக் குழந்தையான எஸ்.என்.லெட்சுமி அவர்கள் சென்னைக்கு வந்தார் ‘கனவுத் தொழிற்சாலை’ யில் வாய்ப்புத் தேடி. மிகவும் சிரமப்பட்டு எஸ்.எஸ். வாசனின் ‘சந்திரலேகா’வில் கூட்டத்தோடு கூட்டமாக நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்களின் 'சேவா ஸ்டே'ஜில் பாதுகாப்பில், அடிப்படை நடிப்புப் பயிற்சி பெற்றார். என்.எஸ்.கே. அவர்களின் நாடகங்களிலும் நடித்து வந்தார். பிறகு கே.பாலச்சந்தர் அவர்களின் 'ராகினி ரெக்ரியேஷன்'சில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் மனோதிடம் கொண்ட இவர் நிசப் புலியுடன் ‘சண்டை’ செய்தார். அதைப் பார்த்த எம்ஜியார் “இந்தப் படத்தில் நாயகன் நானா இல்லை இந்த இளம் மங்கையா?” என்று கேலி செய்து பாராட்டினார். நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் 'ஸ்டண்ட்' காட்சிகளிலும், 'பல்டி' அடிக்கும் காட்சிகளிலும்நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பதுகுறிப்பிடத் தக்கது. குறிப்பாக 'கத்திச் சண்டை' பிரமாதமாகப் போடுவாராம். பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார். அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னி நட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. வயது என்றொன்று இருப்பதை முற்றிலும் மறந்து 85 வயது வரை விடாமல் நடித்தவர் இவர். நடித்துக் கொண்டே இயற்கை எய்திய மிகச் சிலரில் இவரும் ஒருவர். அவரின் நடிப்பின் சிகரங்களைத் தொட்ட படங்களின் பட்டியல் நீண்டது. அவைகளில் சில: · மைகேல் மதன காம ராஜன், ஊர்வசியின் திருட்டுப்பாட்டியாக · சர்வர் சுந்தரம், கண்டிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்குவலுவூட்டின. · எதிர் நீச்சல் · பாலும் பழமும், சரோஜா தேவிக்குத் தாயாக · மகாநதி, கமலின் மாமியாராக · விருமாண்டி · காதலா காதலா · தேவர் மகன், உச்ச கட்டக் காட்சிகளில் · அக்னி நட்சத்திரம் · துலாபாரம் வாழ்க்கையில் முன்னுக்கு வரத் துடிக்கும் இளையர்களுக்கு இவர் வாழ்வு ஒரு நல்ல உதாரணம். அவர் அவருடன் நடிக்கும்,நடித்த சக நடிகர்களின் குடும்பங்களுக்குப் பண உதவியும், பொருளுதவியும் செய்து வந்தவர். அவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு நேற்று வரை நிதி உதவி வந்தவர். தன்னுடைய புகழான வாழ்க்கை அவர் சேவை செய்யும் மனப்பான்மையின் குறுக்கே வராமல் பார்த்துக் கொண்டார். 'சேவா தளம்' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தார். எல்லாவற்றையும் விட அவரின் தியாக வாழ்வே என்னுடைய மனதைத் தொட்டது நன்றி: The Hindu, தினமலர் , தினமணி, ஒன்இந்தியா .
Last edited by பச்சி; 22-02-12 at 11:41 PM. |
#2
|
|||
|
|||
அவரின் திறமைகள் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை ! அதை வெளிச்சம் போட்டு காட்டிய ஜெகன் பாராட்டுக்கள் !
|
#3
|
||||
|
||||
நான் நேற்று தான் இந்த செய்தியை வேற்று ஒரு இடத்தில் படித்தேன். நல்ல ஒரு நடிகை. அவருடைய குரலே ஒரு இனிமை.
வானத்தை போல படத்தில் மூத்த விஜையகாந்த்தின் பாட்டியாக வருகிறார். அதில் கண் பார்வை குறைவாக இருக்கும். பிச்சைகாரனை வீட்டுக்கு மரியாதையாக கூட்டிட்டு போவார்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
||||
|
||||
நல்ல குணச்சித்திர நடிகை. நானும் பல படங்களில் அவரின் திறமையான நடிப்பை பார்த்திருக்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைவதாக.
திரி ஆரம்பித்த நண்பர் ஜெகனுக்கு நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
||||
|
||||
ம்... நானும் ஒரு பத்திரிகையில் இப்போது தான் படித்தேன்.
தமிழ் சினிமா இன்னொரு பாட்டி நடிகையை இழந்துள்ளது. |
#6
|
||||
|
||||
எனக்கும் பிடித்த நடிகை அவரின் நடிப்பு திறமையை இப்பொழுதும் தினசரி தொடர்களில் கண்டுஇருப்பிர்கள்
|
#7
|
||||
|
||||
இவர் ஒரு சிறந்த நடிகை... கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றினாலும் தன் நடிப்பாற்றலால் மனதில் தங்கி விடுவார். நல்ல பாட்டி நடிகையை தமிழகம் இழந்துவிட்டது.
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#8
|
|||
|
|||
Quote:
Quote:
செய்திகளில் படித்த போது ஒரு சாதரண நடிகை வயதின் மூப்பின் காரணம்மாய் இற்ந்திருப்பாகள் என நினைத்தேன். நண்பர் ஜெகனின் செய்தியால் ஒரு நல்ல பெண்மணியை இழந்து விட்டோம் என புரிந்தது. அஞ்சலி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். |
#9
|
|||
|
|||
உண்மையில் இது போன்ற திறமையான நடிகையை பார்ப்பது அரிது. தமிழ் சினிமா நல்ல நடிகையை இழந்து விட்டது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்
|
#10
|
||||
|
||||
.லட்சுமி பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். லட்சுமி பாட்டியின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக தந்த ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்களை தெருவித்துக் கொள்கிறேன்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|