<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கனவைக் காட்சிப்படுத்திய கலைஞர் பாலு மகேந்திரா மறைந்துவிட்டார்!
கனவைக் காட்சிப்படுத்திய கலைஞன் பாலு மகேந்திரா மறைந்துவிட்டார்
ஈழத்தமிழரான பாலு மகேந்திரா, 13.02.’14 வியாழக்கிழமை அதிகாலை தன் 74ஆம் வயதில் சென்னையில் காலமானார். யதார்த்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதில் வல்லவரான அவர் லண்டனில் இளங்கலை படிப்பை முடித்தவர்.ஈழ நாட்டில் மட்டக்களப்பில், அமிர்தகழி என்ற ஊரில் 1939ல் பிறந்தவர் அவர் இயற் பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்பதாகும்... தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனரும், முன்னணி ஒளிப்பதிவாளறுமாக மிளிர்ந்தவர். புனே’ திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத்துறையில் பயின்ற ஆவார். மாணவராக இருந்தபோதே தங்கப்பதக்கம் பெற்றுறிருக்கிறார். 1970களின் மத்தியில் இந்தியாவேங்கும் உருவான 'புதிய அலை'திரைப்பட வரலாற்றின் முக்கிய முகங்களில் ஒருவர் பாலு மகேந்திரா. அதுவரை எடுக்கப்பட்ட் வணிக திரைப்பட வரையறைக்குள்ளேயே, யதார்த்தமான கதை சொல்லல், ஒப்பனை குறைந்த முகங்கள், அன்றாட வாழ்வுக்கு நெருக்கமான காட்சிகள், நாடகத்தனம் தவிர்த்த மொழியை திரைப்பட்ங்களில் கையாள வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட ‘புதிய தலைமுறை'ப் படைப்பாளர்கள் திரைப் படங்களின் தலையெழுத்தை மாற்ற முயன்ற காலம் அது. திரைப்படத்தின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில்,,இழப்பில்தாம் கற்றுக்கொண்டார்கள் .- சில நேரங்களில் மற்றவர்களின் இழப்பிலும். அப்போது இருந்தவர்கள் அனைவரும் தம்முடைய கடும் உழைப்பின் வழியாகவே தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் என்றொரு பயிற்சி முறை இருந்தது அவர்கள், தமிழில், பாலச்சந்தர், ருத்ரய்யா, மகேந்திரன், பாரதிராஜா, பாலு மகேந்திரா..மலையாளத்தில் பரதன்,ஐ.வி.சசி, பத்மராஜன், சேது மதவன், இந்தியில் மகேஷ் பட் ,கோவிந்த் நிக்லாணி, போன்றவர்களின் சம காலத்தவர். பாலு, தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்குத் திரைப்பட முக்கியமான இயக்குனர்களின் முதல் படத்துக்கு ஒளிப்பதிவாலாராகப் பணி புரிந்துள்ளார்.தமிழில் தலை சிறந்த இயாக்குனர்க.ளாகக் கருதப்படும் மகேந்திரன்,மணிரத்னம் ஆகியோரின் முதல் பட ஒளிப்பதிவாளர் இவர்தான். இவர் 30க்கும் குறைவான படங்களே இயக்கியுள்ளார். அவைகளில் முக்கியமான படங்கள்:
கதாநாயகி இல்லாமல் 4 சிறுவர்களின் பதின் வயதில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களையும் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் நாம் கண் முன்னே கொண்டு வந்தார். 'மூன்றாம் பிறை'யில் ஸ்ரீதேவியின் ஞாபகத்தை ஸ்ரீதேவிக்கு மீட்டுக்கொண்டு வர முயன்று அம்முயற்சியில் தான் தோல்வியுற்று, மனம் உடைந்த கமல்ஹாசன், புகை வண்டி நடை மேடையில் நின்று கையறு நிலையில் மண்ணில் புரண்டு, மழையில் உருண்டு, அதிக பட்சமாக எத்தனையோ சேட்டைகளை, செய்யும் அந்தக்
தமிழ்ப் பெண்களை பெரிய ஒப்பனையில்லாமல் அவர் மிக அழகாக ,மெய்யாகவே கவர்ச்சியுடையவர்களாகாக் காட்டியதுதான் .அவர் அறிமுகபாடுத்திய ஷோபா,அர்ச்சனா,மௌனிகா,வினோதினி என்று அனைவரின் முகங்கலௌம்,அவரது நினைவாயொட்டி நினைவுல்லு வந்து போகின்றன.ஆழமான ,அர்த்தமுடைய கண்கள்.மெல்லிய சோகம்,பிரியம் கொண்ட முகங்கள் அவை யாவும்.கனிவு,விரகம்,ஏக்கம்,இயலாமை இவை எல்லாவற்றையும் அர்ச்சனா மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். வர்த்தக திரைப்பட வரையரிக்குள் தான் பெரும்பாலான படைப்புக்களை எடுத்திருந்தாலும் யதார்த்தக் கதைகளை மைய்யமாகக் கொண்டு மாற்றுத்திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்பது அவரது பெருங்கனவாகவும், ஏக்கமாகவும் இருந்துள்ளது. வணிகப்பட்ட உலகிலேயே முடங்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வும் . இருந்துள்ளது. அவரது கோகிலா,வீடு ஆகியவற்றின் ‘பதிப்புக்கள்’[negativies] அவரது வாழ்நாளிலேயே சிதைந்துபோனது அவருக்கு மட்டும் இழப்பு அல்ல. ஈழ விடுதலைப் போராட்டமும்,2009 ஈழ விடுதலாய்ப்போரின் நிகழ்வுகளும் அவரைக் கடுமையாகப் பாதித்திருந்தனா.. தன் தாயி மண்ணின் மீதானா ஏக்கத்தையும்,தாயி மொழியின் மீதான பற்றுதலையும் ‘தலை முறைகள்’படத்தில் வெளிப்படுத்தவும் செய்திருந்தார். வாழ்க்கையின் ரகசியங்களை இயற்கையிலிருந்து எடுத்து, நமக்கு அளித்து நமது இதயங்களை திருடியவர். இயக்குனராக அல்ல ,இயற்கையாக இயங்கியவர். எதனோடும் ஈடு செய்ய முடியாதது அந்தக் கலைஞரின் இழப்பு.. கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புக்கள் என்றும் வாழும் எங்கள் நெஞ்சங்களில் ! Last edited by vjagan; 18-02-14 at 03:36 PM. |
#2
|
|||
|
|||
இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் இழப்பு திரைத்துறைக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆன்மா இறைவனுள் நிம்மதி பெற ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
|
#3
|
|||
|
|||
Quote:
நல்ல கலைஞர் அவர், அவரது மறைவுக்கு வருந்துவதோடு அவர் ஆத்மா இறைவனடியில் சாந்தியடையட்டும். |
#4
|
||||
|
||||
நிழலை நிஜத்தோடு சேர்த்து படம் பிடித்து காட்டிய அட்டகாசமான இயக்குனர். இவரது ஒளிப்பதிவும் மாசு மருவற்று துல்லியமாக இருக்கும்..! இவரது 'வண்ண வண்ண பூக்கள்' பார்த்தேன்...! அடடா என்ன ஒரு அற்புதமான இயக்கம், காட்சி அமைப்புகள்.! தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்தவர்களுள் இவரும் முக்கியமானவர் என்றால் அது மிகையில்லை..!
அண்ணாரின் ஆத்மா இறைவனில் சாந்தியடைவதாக.! விஜெகனுக்கு நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
|||
|
|||
Quote:
பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய பழைய படங்களை பார்த்தது கிடையாது. பாலு மகேந்திராவிடம் உதயாளராய் வேலை பார்த்தவர்கள் இன்று மிகப்பெரும் இயக்குநர்களாய் வித்தியாசம்மான கதைகளை சொல்கின்றார்கள். தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாய் இருந்த பாலு மகேந்திரா அவர்களின் ஆத்மா இறைவனடியில் சாந்தியடையட்டும். |
#6
|
||||
|
||||
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே ஓர் கலைநயத்துடன் இருக்கும். அருமையான ஓர் இயக்குனரை இந்த தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது. அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் எனது பிரார்த்தனை. |
#7
|
|||
|
|||
இயக்குனர் பாலுவின் நினைவுகளும் அவரது படைப்புகளின் மூலமாக என்றென்றும் நம் மனதில் வாழும்
|
#8
|
||||
|
||||
வருந்தத்தக்க செய்தி.....
எனக்கு அவரின் திரைப்படைப்புகளையும்(படங்கள்), அவரின் மூலம் சினிமாவுக்கு கிடைத்த படைப்பாளிகளையும் பிடிக்கும்... அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்... |
#9
|
|||
|
|||
ப வரிசை இயக்குனர் ஒருவர் மறைந்து விட்டார்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
|
#10
|
|||
|
|||
இயற்கையின் அழகை காமெரா மூலம் அழகாக வெளிபடுத்திய பாலுமகேந்திரா ஆன்மா சாந்தி அடையட்டும்
|
|
|
|