<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
டி.எம்.எஸ்ஸின் எந்தப் பாடலை விடுவது? பாடியது சிவாஜியா அல்லது டி.எம்.எஸ்ஸா என்ற குழப்பம் சக்கை போடு போடு ராஜா, நண்பனே என்ற பாடலில் வரும் குரலாகட்டும். உண்மையில் ராஜாவாகவே திகழ்ந்தார். ஒரு அற்புதமான இசைக் கலைஞன் எங்கள் ஊரின் மைந்தன். பிறப்பால் செளராஷ்டராய் இருந்தாலும் தமிழால் உலகெங்கும் கொள்ளை கொண்ட இந்த மனிதனுக்கு உடலால் மரணமாயிருந்தாலும் குரலால் என்றும் மரணமில்லை.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#12
|
||||
|
||||
தமிழ் இசை உலகில் திரு. T.M.S என்ற ஒரு இமயம் சரிந்து விட்டது.....
அவரது குடும்பத்திற்கும் அவரது வெண்கல குரலுக்கு ரசிகர்களுக்கும் நமது லோகத்தின் ஆழ்ந்த இரக்கத்தையும் அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்து கொள்கிறோம். |
#13
|
|||
|
|||
இசை உலகுக்கு இது போதாத காலம் போல.. ஒவ்வொரு மரமாய் அடுத்தடுத்து சாய்கின்றது.. அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி.. அன்னாரின் ஆன்மா இறைவனிடம் கலந்து இசை வடிவில் இவ்வையகம் எங்கும் இரண்டர கலந்து நம் உள்ளங்களை மயிலிறகாய் வருடட்டும்..
|
#14
|
||||
|
||||
சினிமா, பக்திப்பாடல்கள் என்று எண்ணற்ற பாடல்களை பாடி எல்லோர் மனதிலும் இடம்பெற்ற ஒரு கலைஞர்.
இவர் ஆத்தா சாந்தி அடைய இறைவனை வேண்டுமோம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
|||
|
|||
தமிழ் திரை உலகின் வாயிலாக தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
|
#16
|
|||
|
|||
நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான இசை மேதை டிஎம்எஸின் மறைவு மாபெரும் இழப்புத்தான்.
அவரது சிம்மக் குரலில் உதித்த அச்சம் என்பது மடமையடா, தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே சத்தியமே லட்சியமாய் கொள்ளடா போன்ற வரிகள் எத்தனையோ உள்ளங்களை உணர வைத்தவை. அன்னாரது ஆன்மா சாந்தி பெற தள நண்பர்களுடன் இணைந்து நானும் பிராத்திக்கிரேன். |
#17
|
|||
|
|||
மக்கள் திலகம், நடிகர் திலகம், மக்கள் கலைஞர், காதல் மன்னன் என்று கதா நாயகர்களுக்கு மட்டுமின்றி வி.கே.ராமசாமி, பாலையா எனும் குணசித்திர நடிகர்களுக்கும், நாகேஷ், சந்திரபாபு போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கும் தன் குரலை வழங்கி பெருமை சேர்த்தவர்.
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்", "சட்டி சுட்டதடா",. "போனால் போகட்டும் போடா". "வீடு வரை உறவு", "ஆட்டுவித்தால் யாரொருவர்" என்று தத்துவங்களை உதிர்த்து "செல்லக்கிளிகளாம் பள்ளியிலே", "செல்லக்கிளியே மெல்லப் பேசு", "வெள்ளி நிலா முற்றத்திலே" என்று தாலாட்டி "மெல்ல மெல்ல அருகில் வந்து", ", "மலரைப் போன்ற பருவமே", "ஒரு பெண்ணைப் பார்த்து" என்று காதல் மொழி பேசி "ஏன் பிறந்தாய் மகனே", "சோதனை மேல் சோதனை", "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று கண்ணீர் சிந்தி "ஐ வில் சிங் ஃபார் யூ", "நீயே உனக்கு என்றும்" என்று கிளாசிக்கல் இசையில் நகைச்சுவையைக் கலந்து பரிமாறியவர். இன்னும் அதிகம் பிரபலமாகாத அருமையான வரிகளைக் கொண்ட "கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை", "சில நேரங்களில் சில மனிதர்களை சிந்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்" போன்ற பாடல்களை இனிமையாகப் பாடிக் கொடுத்தவர். அவர் குரலை தங்கள் குரலாக ஏற்ற நடிகர்கள் மறைந்து விட்டனர். இன்று அவரே மறைந்து விட்டார். ஆனாலும் அந்தக் குரல் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். அவரே பாடி நடித்த பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. "எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் என்னாளும்" நமக்காக அவர் பாடி வைத்த பாடல்களில் அவர் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக. |
#18
|
|||
|
|||
இவரைப் போன்ற திறமையாளர்கள், சாதனையாளர்கள் நம்மை விட்டு உடலால் மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற பாடல்கள் நம்மை விட்டு என்று மறையாது.
அவர் ஆன்மா சாந்தியடையட்டும். |
#19
|
|||
|
|||
மிகுந்த வருத்தம் தான். என்ன செய்வது? அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும். எங்கு அவர் பாடல் கேட்பினும் கண்முன் வந்து போகும் அவரது முகம்...
|
#20
|
|||
|
|||
அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக.
ஒரு பாடல் ஒரு கவியாக ஒருவரிடம் உருவாக்கி, ஒருவரின் கற்பனையில் அதற்கான உருவகம் கொடுத்து, அதனை திரை கதையில் கொண்டுவந்து, அந்த கதாபாத்திரத்தின் உச்சரிப்பாக வெளி வர, ஒருவர் குரல் கொடுக்க, ஒருவர் வாயசைத்து நடித்து கொடுக்க....
அப்பப்பா.... இது எல்லாவற்றையும் ஒரு சேர வெளி கொண்டுவருவது அந்த பாடலை பாடும் பாடகர் தான். எது எப்படி இருந்தாலும், ஒரு இசை அமைப்பாளரின் கற்பனையை முழுமையாக வெளி கொண்டு வருவதே அந்த பாடகர் தான். இதில் பல ஆண்டு காலம், தன் சிறப்பான செயல்பாட்டால் எல்லோருடைய மனதையும் கவர்ந்த வெண்கல குரலோன், tms என அன்புடன் அழைக்கப்படும் T.M.சௌந்தர ராஜன் அவர்கள் இயற்கை எய்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக. ____________________ ramraj |
|
|
|