<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற ஒரு பாடல் மூலம்மே பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடல் திறம்மையை அறிந்து கொள்ளலாம். நான் நேற்று செய்தியில் அவரது மறைவு பற்றி கேட்கும் போது நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. நண்பர்கள் சொன்னது போல் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் மறைந்தாலும் அவரின் குரல் இன்னும் பல நூறு வருடங்களுக்கு நிலைத்திருக்கும். பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடல்களை தொகுத்து தந்த நண்பர் மதனுக்கு நன்றி.
காலத்தால் அழியாத பாடல்களை பாடிய பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் ஆன்மா இறைவனில் அமைதி கொள்ளட்டும். |
#12
|
||||
|
||||
உண்மையில் இவர் ஒரு சிறந்த, மிகப்பெரிய இனிய பாடகர்.
இவர் தான் எல்லாப்பாடல்களையும் ஜெமினி கணேஷன் அவர்களுக்கு பாடியவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையில் ஒரு சாதனை. இவர் பாடிய எல்லாப்பாடல்களும் எனக்கும் புடிக்கும். அதுல் சில பாடகள் இன்னும் நன்றாக பிடிக்கும். இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள்புரிவாராக.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#13
|
|||
|
|||
மறைந்த பாடகர் பி.பி.எஸ். அவர்களின் சிறந்த பாடல்களை பட்டியலிட்டதற்குப் பாராட்டுக்கள். அவரது மனதை வருடும் “மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேசவேண்டும்” (படத்தின் பெயர் தெரியாது) பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதத் தேனமுதம்!
ராபின்சன் |
#14
|
|||
|
|||
இவரது குரல் தனித்துவம் வாய்ந்தது. ஜெமினி, முத்துராமன் என்று முத்திரை விழுந்த்தால் நிறைய பாடல்கள் கிடைக்கவில்லை. காலத்தால் அழியாத பல பாடல்கள் பாடியுள்ளார்.
"பொன் என்பேன், சிறு பூ வென்பேன்" எனக்கு மிகவும் பிடித்த பாடல். |
#15
|
||||
|
||||
பி.பி.ஸ்ரீனிவாஸ் நல்ல மனிதர். அருமையான மென்மையான குரல். காலத்தால் அழியாத பாடல்கள் பாடி அமரத்துவம் பெற்று விட்டார். ஏஎம் ராஜா, பிபிஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், எஸ்பிபி இவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். இந்தத் தலைமுறை பாடகர்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது! பிபிஎஸ் காலத்தில் வசந்தமாகி விட்டார். அவர் ஆத்மா இறைவனுடன் ஒன்றிவிட இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!
|
#16
|
|||
|
|||
திரைப் படங்களுக்கு வெளியே, பிபிஎஸ் பாடிய வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருக்கிறீர்களா? பூபாள ராகத்தில் தன் இனிய குரலில் அவர் அதை இசைக்கும்போது கௌஸல்யாவின் திருமகன் ஸ்ரீராமன் விழித்துக்கொள்வதற்குப் பதில் இன்னும் கொஞ்சம் நேரம் கண்களை மூடிக்கொண்டு அந்தத் தேனிசையில் திளைத்திருப்பான்!
|
#17
|
|||
|
|||
தமிழ் திரை இசை துரையில் இவரின் தெவிக குரலுக்கு மயஙாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் ஒரு சகாப்தம்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#18
|
|||
|
|||
ஊமை விழிகள் படத்தில் இவர் பாடிய தோல்வி நிலையென பாட்டு ரொம்ப மனதை தொடும் .
இவர் பல மொழிகளிலும் பாட்டும் கீர்த்தனைகளும் எழுதக்கூடியவர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ஒரு செய்தி . அவரதி ஆத்மா அமைதிபெறட்டும் |
#19
|
||||
|
||||
ஐயா தமிழ்ப்ளஸ், அருமை ஐயா அம்மணி. காணாமல் போன காலாவதி திரியெல்லாம் உயிர்ப்ப்பிகும் உங்களுக்கு என் நன்றிகள் பல
|
#20
|
|||
|
|||
மறக்க முடியுமா இந்தப் பொல்லாதப் பாடகரை அய்யா அம்மணி !அவருடைய மெல்லிசைப் பாடகள அனைத்தும் அரிய பொக்கிஷம்தாம் அய்யா அம்மணி !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|