<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
மன்னிக்கவும். நான் சச்சினை எந்த விதத்திலும் தூற்றவில்லை. பணம் சம்பாதிப்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. அவர் திறமைக்கும் உழைப்புக்கும் அவருக்கு கிடைத்த பணமும் புகழும் முற்றிலும் நியாயமானதே. அவர் பணம், எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கட்டும். தர்ம காரியம் அவர் செய்யவேண்டும் என்பது என்பது என் எதிர்பார்ப்பு அல்ல. இன்று இருக்கும் இந்தியர்களில் அவர்தான் சிறந்தவர் என்பதும், பாரத ரத்னா தருவதும் டூ மச் என்பதே என் கருத்து.
|
#22
|
||||||||
|
||||||||
அன்பார்ந்த நிர்வாகிகளே,
இந்த வாழ்த்து திரிக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் சச்சின் டெண்டுல்கரை குறித்து சில நண்பர்கள் எழுப்பி இருக்கும் வினாக்களுக்கு, ஐயப்பாடுகளுக்கு சில விளக்கங்களைத் தர மச்சான் தங்களிடம் அனுமதி கோருகிறேன். நன்றி. Quote:
Quote:
முதலில், "இம்ரான் கான்" தன்னுடைய பணத்தில் மட்டுமே புற்று நோய் மருத்துவமனையை கட்டினார் என்பது மிகவும் தவறான தகவல்..! "Shaukat Khanum" என்பவர் இம்ரான்கான் அவர்களின் தாயார் ஆவார். புற்று நோயால் அவதிப்பட்டு இறந்தும் போனார். தன் தாய் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் "Shaukat Khanum Memorial Cancer Hospital and Research Centre" என்று தன் தாயின் பெயரிலேயே புற்று நோய் மருத்துவமனையை 1994 ம் வருடம் துவக்கினார் இம்ரான்கான்..! இதற்காக 1991 ம் வருடம் "Shaukat Khanum Memorial Trust" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார். இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், அசாருதீன் உட்பட அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் போன்ற உலக நாடுகளில் வாழும் பல நல்ல உள்ளங்கள் இந்த மருத்துவமனைக்காக நன்கொடைகளை அள்ளி அள்ளி வழங்கினார்கள். 25 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நன்கொடைகள் பெறப்பட்டு அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. (கொடுத்ததை பொதுவாக மச்சான் வெளியே சொல்வதில்லை. இருந்தாலும் சந்தர்ப்பம் வந்ததால் தற்போது தெரிவிக்கிறேன். 1993 ம் வருடம் மச்சானும் இந்த அறக்கட்டளைக்கு மஸ்கட்டிலிருந்து என்னால் இயன்ற சிறு தொகை ஒன்றினை அன்பளிப்பாக அனுப்பி வைத்தேன்) ஆக, இம்ரான்கானின் முழு முயற்சியினாலேயே இந்த மருத்துவமனை கட்டப்பட்டது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் முழுக்க முழுக்க அவரின் சொந்தப் பணத்தை வைத்தே கட்டப்பட்டது என்பதுதான் தவறான தகவலாகும். கழிந்த 2012 செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் மக்களில் சிலர் மட்டுமே இந்த மருத்துவமனைக்காக கிட்டத்தட்ட 10 கோடி பாகிஸ்தான் ரூபாயை அன்பளிப்பாக வழங்கினார்கள் என்பது கூடுதலான தகவல்...! Quote:
Quote:
ஒரு ஏழைக்கு அல்ல... இரண்டு ஏழைக்கு அல்ல... 200 ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, உடை, படிப்புச்செலவு அனைத்தையும் இவரே மொத்தமாக ஏற்று, அதற்காக ஒவ்வொரு வருடமும் நன்கொடைகளை "Apnalaya" என்ற அமைப்புக்கு வழங்கி வருவது தங்களுக்கு தெரியுமா...? தெரிய வழியேயில்லை சகோதரா...! இவ்வளவு ஏன்..? கழிந்த 5 மாதங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்களே..? லட்சக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்து தவித்தார்களே.? அதற்கும் சச்சின் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களில் பலர் நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா..? 01. நடிகர் ஷாருக்கான் ( இவரும் ஒருவகையில் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்தானே. ) - 10 கோடி 02. கேப்டன் மஹேந்திரசிங் தோனி - 75 லட்சம் 03. சச்சின் டெண்டுல்கர் - 51 லட்சம் 04. யுவராஜ்சிங் - 23 லட்சம் 05. விராட் கொஹ்லி - 18 லட்சம் 06. ஹர்பஜன் சிங் - 10 லட்சம் இவையெல்லாம் பத்திரிகைகளில் வந்த செய்திதான் ப்ரதர்...! தாங்கள் அந்த செய்தியை படிக்கவில்லை என்றால் இதற்கு யார் காரணம்..? தங்களுக்கு நேரம் போகவில்லை என்பதற்காக உருட்ட சச்சினின் தலைதான் கிடைச்சுதுங்களா..? சேற்றை வாரி தூற்று முன் கொஞ்சமாவது யோசிக்கணும்ல நண்பா..!! Quote:
Quote:
Quote:
மச்சானின் இந்த விளக்கங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக இல்லிங்ணா..! அப்படியே புண்படுத்தி இருந்தால் தயவாய் பொருத்தருள்க..!! Quote:
இந்த படத்தை தோழி முதிர்கன்னி அவர்களுக்கு டெடிக்கேட் செய்கிறேன். சாதனையாளர் சச்சினுக்கு வாழ்த்துகள் தெரிவித்த / தெரிவிக்கவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நன்றிகள். |
#23
|
|||
|
|||
Quote:
ஒக்கே மச்சி.. இது ஒன்னும் விவாத மேடை அல்ல.. நாம் கருத்துமோதல் பண்ணுவதற்கு.. எனவே நாம் எப்போதும்போல் ஒருவருக்கொருவர் அன்புடன் அதே நக்கல் நையாண்டியுடன் இருப்போம்.. |
#24
|
|||
|
|||
Quote:
சச்சின் ஒரு மகத்தான் கிரிக்கெட் வீரர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அரசியல் சாக்கடையை போல் கிரிக்கெட்டும் ஒரு சாக்க்கடை என்பதை நண்பர்கள் அறிந்து தெளிந்து கொண்டதால்தான் நண்பர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை இங்கே கொட்டுகின்றார்கள் என நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் நம்ம ஊர் சீனி மாமா, சிமென்ட் விலையை கூட்டி மக்களின் அடி வயிற்றில் அடிப்பவர். இவரது மருமகன் மேல் பெட்டிங் புகார் உள்ளது. சீனி மாமாவுக்கு கிரிக்கெட் தலைவராக என்ன தகுதி இருக்கிறது? சரத் பவார் மராத்திய மாநிலத்தின் அரசியலின் கிங்கான இவருக்கு கிரிக்கெட் சங்க வாரிய தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? கொல்கத்தா டால்மியா இவருக்கும் கிரிக்கெட் சங்க தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. பின்புலமும் பண பலமும் ஆள் பிடிக்க காசும் இருந்தால் யாரும் தலைவராகலாம் என்பதுதான் கிரிக்கெட்டின் தலைவிதி. கிரிக்கெட் சங்க தலைவராக இருப்பவர் கிரிக்கெட் விளையாடிவராக* இருக்க வேண்டும். கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று தெளிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் பெரும் செல்வம் உள்ளவரும் தொழிலதிபரும்தான் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கின்றார்கள். Quote:
Quote:
சச்சின் ஒரு கால் நூற்றாண்டு சகாப்தம்.1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் சார்ஜாவில் விளையாடிய ஆட்டத்தை இன்றும் மறக்க முடியாது. 1990 களில் இந்திய கிரிக்கெட் முடங்கி போன நேரத்தில் சச்சின் என்ற இளம் புயல் வந்ததால்தான் இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் ஜூரம் பற்றி கொண்டது என்பதை மறுக்க முடியாது. |
#25
|
|||
|
|||
Quote:
நானும் கிரிகெட் ரசிகன் தான் ! சச்சினின் 200வது மேட்ச்சை நானும் பார்த்து ரசித்தேன். பி.சி.சி.ஐ என்பது தனியாருக்கு சொந்தமான சொத்து. சச்சின் தனியாருக்காக விளையாடினார் ஆனால் பாரதரத்னா ரொம்ப அதிகம் ! எத்தனை மாணவர்கள் தன்னுடைய முழு ஆண்டு தேர்வை கூட படிக்காமல் கிரிக்கெட் பார்த்து இருப்பார்கள் என்று தெரியுமா ? அந்த மாணவர்களின் 10 மற்றும் +2 மாணவர்கள் அடங்கும் அந்த தேர்வுகள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு ! அந்த கிரிக்கெட் ஆட்டங்களின் பாதிக்கு மேல் சச்சின் ஆடி இருக்கிறார். |
#26
|
|||
|
|||
Quote:
வாழ்த்துகள். _____________ ramraj |
#27
|
||||
|
||||
சச்சின் இந்த விருதுக்கு பொருத்தமானவர் தான் .......... ஆனால் இந்த தருணத்தில் அவசர அவசரமாக விதிமுறைகளை திருத்தி இந்த விருதை அவருக்கு அளித்ததில் தான் அரசியல் தெரிகிறது. அவருக்கு முன்னாள் சாதனை செய்தவர்கள் பட்டியல் அதிகம் அவர்களுக்கு எல்லாம் விருதை வழங்கி விட்டு பிறகு அளித்து இருக்கலாம் நம்ம லிட்டில் மாஸ்ட்டர்க்கு ...........
|
#28
|
|||
|
|||
உலகிலுள்ள மற்ற நாட்டு ரசிகர்கள் கூட சச்சினுக்கு இணையதளங்கள் மூலமாகவும், நேரிலும், தொலைபேசியிலுமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியரான நம்மில் சிலரே அவர் மீது சேற்றை வாரி இறைப்பது வேதனையான விஷயம்தான்..!
"அவருக்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்கப்போவது சரியா தவறா..? அதில் அரசியல் கலந்திருக்கிறதா இல்லையா..? அரசியலே ஒரு சாக்கடை... அதே போல் கிரிக்கெட்டும் சாக்கடைதானே..? பல்லாயிரக்கணக்கான முட்டாள்கள் பார்க்கும் அந்த விளையாட்டை நாமும் பார்க்கலாமா கூடாதா..? கிரிக்கெட் சங்கத்தின் தலைவருக்கு தகுதியானவர் யார்..? அந்த வீரர் நாட்டுக்காக என்ன செய்தார்.. இந்த வீரர் நமக்காக என்ன செய்தார்..? பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுக்கு படிக்காமல் மாணவர்கள் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு சச்சின் மட்டுமேதான் காரணம்...!" என்பது போன்ற கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமும் இல்லை.... இந்த திரியில் அதற்கு வழியும் இல்லை நண்பர்களே..! ஏனென்றால் தலைவாசலில் இருக்கும் வாழ்த்துகள் பகுதியில் இத்திரியை பதித்திருப்பதால் நமது இஷ்டம் போல் வெவ்வேறு கருத்துகள் பதிப்பதற்கு நிர்வாகிகள் அனுமதியும் தரமாட்டார்கள். அதனால் நிர்வாக விதிகளை மதித்து சரியான பகுதியில் வேறு ஒரு திரி தொடங்கியோ அல்லது ஏற்கனவே இருக்கும் கிரிக்கெட் விவாத திரியிலோ இது போன்ற விஷயங்களை தாராளமாக விவாதித்துக் கொள்ளுங்கள். சச்சினுக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இந்த திரியை பயன்படுத்துமாறு நண்பர்களை மச்சான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. |
#29
|
||||
|
||||
வாழ்க சச்சின்... வளர்க அவரது புகழ்...
|
#30
|
|||
|
|||
Quote:
நண்பர் அழகாக சொல்லிவிட்டார். இனிமேல் இங்கு விவாதிக்க ஒன்றுமில்லை என்பது என் கருத்து. |
|
|
|