<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: தேர்வுக்கான அறிவிப்பு (கருத்துகள்)
நண்பர்களே, நண்பிகளே..!
நமது தளத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் படைக்கும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த நிர்வாகம் பல போட்டிகள் நடத்தி வருகிறது. சிறந்த படைப்பாளிகளை லோகத்தின் மின்னும் நட்சத்திரமாய் கெளரவப்படுத்தி, அவர்களை மென்மேலும் ஜொலிக்க செய்து வருகிறோம். அந்த வகையில் கதைகள் படைக்கும் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியை கவிதை வடிவில் காமத்தில் நடனம் ஆட செய்யும் காமக் கவிஞர்களையும், சினிமா பாடல்கள் மூலம் காமத்தை படிப்பவர் மனதில் சஞ்சலப்படுத்தும் உல்டா பாடல் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக நடக்கும் போட்டியே 'சிறந்த காமக்கவிஞர்' என்ற இந்த வருடாந்திர போட்டி. காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்கள் படைப்பவர்களை ஊக்குவிக்க 2007 முதல் 'சிறந்த காமக்கவிஞர்' என்ற இவ்வருடாந்திர போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று, பல கவிஞர்களையும் இது வரை கெளரவப் படுத்தியுள்ளோம். இந்த வருட 2015- 2016 -க்கான 'சிறந்த காமக்கவிஞர்' போட்டிக்காக சிறந்த கவிஞரை தேர்வு செய்ய போட்டி ஆரம்பமாகி விட்டது. ஜூன் 01, 2015 முதல் மே 31, 2016 வரை படைக்கப்பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, அதைப் படைத்த காமக் கவிஞர்களுள் சிறந்த 3 படைப்பாளிகளை கீழே சுட்டி கொடுக்கப் பட்டுள்ள திரியில் சென்று பரிந்துரை செய்யவும். (இந்த திரியில் யாரும் பரிந்துரைக்க வேண்டாம்). சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: பரிந்துரை பரிந்துரை செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 21, 2016 பிறகு, அதிகமாக பரிந்துரை செய்யப்பட்ட முதல் 5 பேரை வரிசைப்படுத்தி 'சிறந்த காமலோக கவிஞரை' தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படும். மேலே குறிப்பிட்டுள்ள அந்த பரிந்துரை திரியில் யார் யார் உங்களை கவர்ந்த கவிஞர்களோ அவர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரை செய்யவும், கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம், நீங்கள் பதிய விரும்பும் கருத்துக்களை இந்த திரியில் பதிக்கவும். பின்குறிப்பு: இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் "தமிழ்வாசல்" அனுமதி பெற்ற உறுப்பினராக இருப்பது அவசியம்.
__________________
Last edited by பச்சி; 11-09-16 at 09:25 PM. |
#2
|
|||
|
|||
ஒரு சிறு உதவி வேண்டும் அய்யா:
எவ்வாறு அந்த ' ஜூன் 01, 2015 முதல் மே 31, 2016 வரை பதிக்கப்பட்ட படைப்புகளின் ' பதிவுகளை துரிதமாக எவ்வாறு க இனம் கண்டுகொள்ள இயலும் என்ற உபாயத்தை சொல்லித் தரவேண்டும் அய்யா. அது எம் போன்ற வாச்கர்களுக்குப் பேருதவியாக அமையும் அய்யா! இப்படி கேட்பது தவறு என்றால் என்னுடைய அந்தப் பிழையை பொறுத்துக் கொள்ளுங்கள் அய்யா! Last edited by பச்சி; 11-09-16 at 09:59 PM. |
#3
|
|||
|
|||
Quote:
தங்களுக்கும் மற்றும் இதை பலரும் (அறியாதோர்) அறிந்து கொள்ளவும் சிறு விளக்கம்: புதிய காமப்பாடல்கள் / புதிய காமக்கவிதைகள் பகுதியை திறந்ததும், அந்த பக்கத்தின் கீழே Display Options என்று ஒன்று காணப்படும். அதில், பின் வரும்.. Sorted By என்ற ஆப்சனில் 'Thread Start Time' என்பதை தேர்வு செய்து Show Thread க்ளிக் செய்தால், ஒவ்வொரு திரியும் அது பதியப்பட்ட நேரப்படி வரிசை பெற்று விடும். தற்போது திரியின் கீழ் காட்டும் தேதியை வைத்து, 31.05.2016 தேதியிட்ட திரியை அடையாளம் காணவும். அதுபோல், முன்னதாக சில பக்கங்கள் வரை சென்றால்... 01.06.2015 -ன் முதல் திரியையும் கண்டு கொள்ளலாம். 01.06.2015 தேதியிட்ட முதல் திரிக்கு (பக்கங்களை கடந்து) சென்று இறுதி திரியான பிந்தைய பக்கமும் வரலாம். மேலும், ஆப்சன்களை Descending, Ascending முறைப்படியும் விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம்.
__________________
Last edited by பச்சி; 11-09-16 at 10:00 PM. |
#4
|
|||
|
|||
Quote:
இதன் அடிப்படையில் பதிவுகளை இனம் காண இயலும் மிகவும் வசதியாக ! Last edited by பச்சி; 11-09-16 at 10:03 PM. |
#5
|
||||
|
||||
எனது பரிந்துரைகள்
முதல் பரிந்துரை - இந்த பரிந்துரைகளைத் துறந்து விட்டு எந்தெந்த உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கை கவிதைகள் புனைந்திருக்கிறார்களோ அவர்களில் டாப் 10 பேரை வாக்கெடுப்பில் சேர்த்துக்கொண்டு வாக்களிப்பு நடத்துவது. இது சிறந்த முறையாக இருக்கும் என்பது எனது கருத்து. இந்தத் தேர்வு முறையில் அதிகம் பங்களித்த கவிஞர்கள் விட்டுப் போகாமல் இருப்பார்கள். பரிந்துரை தேர்வு முறையில் ஒன்றோ இரண்டோ கவிதைகள் புனைந்தவர்கள் கூட வந்து விடலாம்.. அதிகம் பங்கெடுத்தவர்கள் பரிந்துரை செய்ய ஆளில்லாமல் விட்டுப் போய் விட வாய்ப்பிருக்கிறது.. இதைத்தான் "சிறந்த விமரிசனர் வாக்களிப்பு" பற்றியும் நான்கூறியிருந்தேன். அது பரிசீலினை செய்யப்படும் என்று நண்பர் பச்சி கூறியதாக நினைவு கூருகிறேன். (அந்தக் கருத்தை சற்று 'லைட்' ஆக சொல்லியிருந்ததை ஏளனம் என்று குறிப்பிட்டதாக ஞாபகம் .. ஆனால் ஏளனம், கிண்டல் என்று சொன்னால் அதை விட அதிகமாக ஏளனம் தொனிக்கும் பல பதிப்புக்களை என்னால் சுட்டி க் காட்ட முடியும். அதை வேண்டுமானால் பின்னர் பார்ப்போம்). எனவே புதிய ஒரு தேர்வு முறையை வகுப்பது சிறப்பாக இருக்கும். ஆனால் Objective-based ஆக ஒரு முடிவு எடுக்கும் பட்சம், நான் முதலில் கூறிய Methodology -யே சிறப்பாக இருக்கும் என்றே கருது கிறேன். Last edited by பச்சி; 11-09-16 at 10:16 PM. |
#6
|
|||
|
|||
@ காமராஜன் !
நீங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலிக்கும் அதே நேரம் பரிந்துரைகளை இங்கு கேட்பதே... நமது வாசகர்கள் இங்கு படைக்கப்பட்ட கவிதைகள் / பாடல்களை படித்து, அதில் தமக்கு பிடித்த / சிறந்த கவிஞர்கள் யார் என்பதை பரிந்துரைக்க அவர்களுக்கே ஒரு வாய்ப்பளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது என நம்புகிறேன். நீங்கள் சொல்வது போல், அதிக படைப்புகள் வரிசையை கொண்டு நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால்... வெறும் எண்ணிக்கையை வைத்து வாக்குகள் விழவும் வாய்ப்பிருக்கிறது. அதிலும் டாப் 10 என்பது மற்ற படைப்பாளிகளை நாம் கணக்கில் எடுக்காமல் எப்படி விடுவது? ஒரு சில படைப்புகளை சிறப்பாக, தரமாக பலரும் மனம் கவரும் வகையில் படைப்பவர்களை நாம் சேர்க்காமல் போய்விடக் கூடும். அதனால் தான் அறிவிப்பிலேயே, 15 வரிகள் கொண்ட ஒரு படைப்பாவது செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். அதிகம் படைத்தவர்கள் பரிந்துரைக்கப் படாமலே போய் விடுவார்களோ என்ற கருத்தும் ஒரு வகையில் ஏற்புடையதே. குறைந்தது 'இத்தனை படைப்புகள்' செய்தவர்கள் தான் பரிந்துரை பெற தகுதியான படைப்பாளிகளாக கொள்ளலாம். அது பற்றி நிர்வாகத்தில் கலந்தாலோசிக்க இருக்கிறோம். என்றாலும்... எது சாத்தியம், என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது பற்றி விரிவாக நிர்வாகத்தில் விவாதிக்கப்பட்டு அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் செயல்படுத்தப்படும் நண்பரே.
__________________
Last edited by பச்சி; 11-09-16 at 10:07 PM. |
#7
|
|||
|
|||
நீங்கள் சொல்வது போல், "அதிக படைப்புகள் வரிசையை கொண்டு நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால்... வெறும் எண்ணிக்கையை வைத்து வாக்குகள் விழவும் வாய்ப்பிருக்கிறது. அதிலும் டாப் 10 என்பது மற்ற படைப்பாளிகளை நாம் கணக்கில் எடுக்காமல் எப்படி விடுவது? ஒரு சில படைப்புகளை சிறப்பாக, தரமாக பலரும் மனம் கவரும் வகையில் படைப்பவர்களை நாம் சேர்க்காமல் போய்விடக் கூடும். அதனால் தான் அறிவிப்பிலேயே, 15 வரிகள் கொண்ட ஒரு படைப்பாவது செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்."
தோழரே, இதுவே என் முதல் கவலை. எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், குப்பைகளே அதிகம் சேரும் வாய்ப்பும், அதில் ஒன்று வெல்வதற்கு வாய்ப்பும் அதிகம். ஆகவே 15 வரிகளுக்கு குறையாமல் என்ற உங்கள் நிபந்தனையோடு, பாடல்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையையும் சேர்த்தால் சரியாகுமா எனவும் ஆராய வேண்டும். ஒரே ஒரு படைப்பை அளித்தாலும், அதில், சந்தம், எழுத்துவளம், காமக் கிளர்ச்சியூட்டும் நடை என்பனவற்றால் - சும்மா அதிருதில்ல என்கிற மாதிரியான படைப்புகள் கவனிப்பில்லாமல் போய்விடக்கூடாது. அதே நேரம், படைப்பாளியின் உழைப்பையும் உதாசீனப்படுத்திவிடக்கூடாது. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் யோசியுங்கள்.......நல்ல முடிவெடுங்கள்..................நல்வழி காட்டுங்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி Last edited by muthirkanni; 13-09-16 at 11:11 AM. Reason: Channg a word |
#8
|
|||
|
|||
Quote:
|
#9
|
|||
|
|||
திரியில் கருத்துகள் பதிந்த நண்பர்களுக்கு நன்றி. உங்கள் கருத்துகள் பரிசீலிக்கப்படும் நண்பர்களே.
கவிஞர்களை பரிந்துரை செய்ய நாளை (21.09.2016) கடைசி நாள் என்பதால், இதுவரை பரிந்துரைக்காதவர்கள் விரைவில் தங்கள் பரிந்துரைகளை செய்ய கேட்டுக் கொள்கிறோம். நன்றி. பரிந்துரைக்கான திரி: சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: பரிந்துரை
__________________
Last edited by பச்சி; 21-09-16 at 12:44 AM. |
|
|
|