<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழறிஞர் ‘மணவை’ முஸ்தாபா இறைவனடி சேர்ந்தார்!
தமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் தமிழறிஞர் ‘மணவை’ முஸ்தாபா ,சென்னையில் நேற்று 06.02.2017 ,திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்; அவருக்கு வயது 82;
தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவரான மணவை முஸ்தபாவின் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு மிகப் பெரிய இழப்பு; தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தர உலகளவில் நிர்ப்பந்தம் கொடுத்த பேராளிகளில் ஒருவர்; தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழு மூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டவர் ‘மணவை’ முஸ்தாபா; அறிவியல்,தொழில் நுட்பம்,மருத்துவம்,கணினி துறை, சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை என நவீன தமிழுக்கு மகுடமாகச் சூட்டியவர் , என்று பல் சாதனைகளை நிகழ்த்தியவர் அவர்; 30 மொழிகளில் வெளிவந்த யுனெஸ்கோ குரியர் இதழ் தமிழ் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றினார்; ‘பிரித்தானிக்கா’ கலைக் களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வரும் பணியும் அவருடைய தலைமையில்தான் நடந்தது; ஆங்கில மொழியின் முதல் அகராதியைக் கொண்டு வந்த சாமுவேல் ஜான்சன் ஐந்தாறு நாட்கள் நாட்கள் உணவு உறக்கம் இன்றி உழைப்பார் என்று சொல்வார்கள்; மணவை முஸ்தபாவுக்கும் அது பொருந்தும்; இஸ்லாமியரான அவர் தனது நிலைப்பாடுகளையும் மாறுபாடுகளையும் மறந்து வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜகவின் அப்போதைய தமிழ் மாநிலத்தலவைராக இருந்த இல.கநேசனைச்சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்: ”தமிழ் நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டுமானால் , தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்தாலே போதும்”. தமிழ் மீது எத்துனை காதல் இருந்தால் இப்படி ஒரு கோரிக்கையை அவர் முன் வைத்திருப்பார்; தமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த பெருமையோடு அவர் மறைந்துவிட்டார்; எனினும்,தமிழிலேயே பொறியியல் ,மருத்துவக் கல்வி எனும் அவரது கனவை நனவாக்குவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. மணவை முஸ்தாபாவின் மனைவி சவுதா அம்மையார் , அண்ணல், செம்மல் என்ற இரண்டு மகன்களும் ,தேன்மொழி என்கிற மகளும் உள்ளனர்; அன்னாரின் உடல் சென்னை அமைந்தகரை பள்ளிவாசல் அருகே உள்ள அடக்க தளத்தில் இன்று செவ்வைக் கிழமை நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது; மிக்க நன்றி: ஆயிஷா இரா.நடராசன், தி இந்து தமிழ் நாளிதழ் , செவ்வாய் பிப்ரவரி 7,2017. |
#2
|
|||
|
|||
அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர பிரதிக்கிறேன் பிராதிக்கிறேன்...
|
#3
|
|||
|
|||
இவ்வளவு முக்கியமான தமிழ் அறிஞரின் மறைவிற்கு இரண்டு நாட்களில் ஒரே ஒரு பின்னூட்டம் என்பது வருத்தம் அளிக்கிறது. நான் பின்னூட்டமிட்டு அந்த குறையை போக்குகிறேன்.
அன்னாரின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். |
#4
|
|||
|
|||
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் .. பூத உடல் மறைந்தாலும் அன்னாரது சேவை பூவுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் ..
|
#5
|
||||
|
||||
உண்மையில் அவரைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள திரி துவங்கிய நம் ஐயா அம்மணிக்கு நன்றி..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
|
#7
|
||||
|
||||
அன்னாரின் மறைவில் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்.
|
|
|
|