உண்மைதான் நண்பரே....இறந்தவர்களை பற்றி தவறாக பேசுவது அநாகரிகம்தான்...ஆனால் இது காலத்தின் கட்டாயம்.
இறப்பு நிச்சயமாக எல்லா தவறையும் மூடி மறைத்து விடாது. அப்படி மறைத்து விட்டால் இட்லருக்கு, கோட்சேக்கு, ஏன் ஜெயவர்த்தனே இழப்புக்கு கூட ஒரு திரி ஆரம்பித்து பாராட்டலாம், பாராட்ட சில விஷயங்கள் இருக்கலாம்!
எப்படியோ தமிழர் சமுதாயம் விழிப்பாக இருக்கும் கால கட்டம் இது 50 வருடமாக சேர்த்து வைத்த திராவிட பாரம்பரியத்தை இழந்து விடுவோமா என்ற பயத்தால் நான் பதித்த விஷயம் இது....தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி
மௌனி
Quote:
Originally Posted by xxxGuy
மௌனி,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. அவரைப் பற்றி இவை எல்லோரும் அறிந்ததே இருந்தாலும் ஒருவர் உயிருடன் இருக்கும் போது எப்படி வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம், திட்டலாம், வசை பாடலாம், ஆனால் இறந்த பின் அவர் செய்த கெட்டவைகளை யாரும் வெளியே பேசி அவரை அசிங்கப் படுத்த மாட்டார்கள், அவர் செய்த நல்லதை மட்டுமே பேசுவார்கள். அது தான் தமிழர் பண்பாடு. அதைத் தான் மற்ற உறுப்பினர்கள் பின் பற்றுகிறார்கள், நாம் அனைவரும் அதையே பின்பற்றுவோம். வீண் சர்ச்சைகளைத் தவிர்ப்போம்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" அது தான் தமிழர் பண்பாடு.
Quote:
Originally Posted by mouni
ஆனால் ஒன்று, செத்தாலும் விளங்க மாட்டான்...இதுவே உண்மையான தமிழன் சாபம்.
|
|