<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
அவ்வப்போது ஆதங்கங்களைத் தெரிவித்துக் கொள்வது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்! வேறு என்ன சொல்ல! எல்லோராலும் எல்லா நேரங்களிலும் பின்னூட்டங்கள் செய்ய நேரம் இருப்பதில்லை! மின்சாரத் தடை, நேரத்தடை, மன அயர்ச்சி எவ்வளவோ இருக்கின்றன. பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ஸ்திதப்ரஞ்ஞன் போல் இருக்க முயற்சி செய்தால் மன வருத்தம் இராது!நல்ல பின்னூட்டங்கள் வரும் போது சந்தோஷப்படுவோம்!கிண்டலாக இருந்தாலும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொள்வோம்!ஒரு வரியாக இருந்தாலும் எடுத்த முயற்சிக்கு நன்றி பாராட்டுவோம்! உலகம் பலவிதம்! கதாசிரியர்கள் தங்கள் படைப்பை எத்தனை பேர் வியூ செய்துள்ளார்கள் என்று பார்த்தால் ஆறுதல் பெறலாம்!
|
#42
|
||||
|
||||
சின்ன பிரச்சினை
இவ்வளவு பெரிதாக்க வேண்டுமா??? |
#43
|
||||
|
||||
Quote:
பாலகுமாரன் தனது சில நூல்களில் கோடிட்டு காட்டியிருப்பார்.....அதாவது சினிமாவுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போலவே.....எழுத்தாளருக்கும் உண்டு அதிலும் தேடி வந்து நேரம் செலவு பண்ணி, தங்கி இருந்து, உணவு உண்டு, நேரம் போவதே தெரியாமல் பேசி, பேசி, எழுத்தில் மட்டுமல்ல நேரிலும் நட்பாக பழகி.....(இப்போ தமிழ் ஹிந்துவில் ஜெயகாந்தன் பற்றி குப்புசாமி என்பவர் எழுதுகிறாரே ) அந்த அளவுக்கு இல்லை என்றாலும்.....விமர்சனம் எழுத்தாளனுக்கு ஒரு தோழமை உணர்வை தரவேண்டும்......சும்மா கூட்டத்தில் இருந்து வரும் கைதட்டல் போல அல்லாமல்.....அருகில் வந்து கை குலுக்கும் ஒரு நட்பு உணர்வை தரவேண்டும் நீங்கள் தரும் விமர்சனங்கள்.....(சிலரது விமர்சனங்கள் அப்படியிருக்கும்......முகம் காணாவிட்டாலும் அந்த அவதாரில் இருக்கும் முகமே அவர் போல நட்பாக பேசும்) நண்பர் நைஸ்கை சொன்னது போல விமர்சனம் ஒரு கலை.....சுட்டு போட்டாலும் எனக்கு வராது என்கிறார் ஆனால் பின்னுட்டமிட தவறுவது இல்லை ஆகவே அதுபோன்றவர்களை எப்படி வேண்டாம் என்பது.... என் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு எப்படிப்பட்ட பின்னுட்டமும் டானிக் மாதிரி தான்....என் ஒரு கதைக்கு நண்பர் ஒருவர் விடாமல் விமர்சித்து (கிரிடிசைஸ்) செய்தார்.....நான் அதனை நேர் மறை நோக்கில் எடுத்துகொண்டு இனி கதை எழுதும் போது இது போன்ற நண்பர்களும் லோகத்தில் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடன் கவனமாக எழுதுகிறேன்.....அந்த நண்பருக்கு என் நன்றிகளை காணிக்கை யாக்குகிறேன் ... ஆக அனேக கலந்துரையாடல்களில் நண்பர் கே அவர்களில் சொல் என்னை ஈர்த்தது ....அதனை கொட செய்து முடிக்கிறேன். எக்காரணம் கொண்டும் பின்னுட்டம் இட மறந்து விடாதீர்கள்(நானும் தான்).....அது எழுத்தாளனுக்கு இன்பம் மட்டும் பயப்பதில்லை அவனை செம்மை படுத்திக்கொள்ளவும்.....பெரும் பலனொரின் விருப்பம் தெரிந்து தன்னை அப்டேட் செய்து கொள்ளவும் உதவும் அருமையான திரி....பலரும் கலந்து கொண்டு பயன் பெறவும்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#44
|
||||
|
||||
அன்பு நண்பர் மதன் குறிப்பிடும் சீனியர் மெம்பர் அடியேன் தான். நான் கதைகளைப் படித்து விட்டு மொத்தமாக பின்னூட்டமிடும் ஒரு வேளையில் நண்பரால் "கண்டுபிடிக்கப்பட்டு" 'உ ஷா ரா' னவன்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#45
|
|||
|
|||
பிற்சேர்க்கை
Quote:
நண்பரே.. உங்கள் கதையில் "விமர்சன"த்தைப் பதிந்தவன் நான் ஒருவன் மட்டுமே.. அப்படியிருக்கையில் நீங்கள் வெளிப்படையாக என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கலாமே.. அதற்கு ஏன் தயக்கம்..? (எவரின் பெயரையும் குறிப்பிடவேண்டாம் என கேட்டுக்கொண்டிருப்பதாலோ) பரவாயில்லை.. உங்களின் கருத்துக்குப் பதில்கருத்து இதோ.. விமர்சனம் என்றால் அதை கிரிட்டிசைஸ் என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் நண்பரே..? ஒருவேளை மாதவிடாய் பற்றிய வர்ணனைகளையும் இயற்கை உபாதைகள் பற்றிய விவரிப்புகளையும் பின்னூட்டம் என்ற பெயரில் ஆஹா ஒஹோ எனப் புகழ்ந்தும் அருமையான கற்பனை என்று போற்றியும் கைதட்டி கரகோஷம் செய்து ஆரவாரப்படுத்தியும் இருக்கவேண்டுமோ..? என்னால் அப்படி துதிபாடியாகவும் அடிவருடியாகவும் இருக்கமுடியாது நண்பரே.. உங்கள் கதையைப் படிக்கும்பொழுது என் மனதில் தோன்றியவற்றையே நான் நாகரீகமாகப் பதித்தேன். மற்றபடி நீங்கள் என் கதையில் பதிப்பதுபோல்.. "நாய்க்கூட்டம்" என்றெல்லாம் நான் பதிக்கவில்லை. இதிலிருந்தே விமர்சனம் என்பதற்கும் கிரிட்டிசைஸ் என்பதற்கும் உங்களுக்கு அர்த்தம் விளங்கியிருக்கும் நண்பரே.. Last edited by kamakodangi68; 14-12-14 at 06:39 AM. Reason: பிற்சேர்க்கை |
#46
|
|||
|
|||
காதா அவர்களே ரொம்ப நாளா உங்களை காணாமல் இன்று காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. "உ ஷா ரா" என ஏதோ சங்கேத வார்த்தை சொல்வதை பார்த்தால் உஷா ராணி என்பவளை பிக்கப் பண்ணியதால் உங்களை லோகம் பக்கம் காண முடியவில்லையோ என்னவோ!!!!!
|
#47
|
|||
|
|||
நல்ல உபயோகமான திரி.
பின்னூட்டம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அருமையாக சொல்லி இருக்கிறார்கள் நம் நண்பர்கள் . கதை எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல பின்னூட்டதை படிக்கும் மற்ற வாசகர்களுக்கும் கதையின் போக்கை பல்வேறு கோணங்களில் அலசப்படுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம். நண்பர்கள் இந்த திரியில் தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆரோக்கியமாக விவாதிப்போம் நண்பர்களே |
|
|
|