<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
சவால் போட்டியில் வெற்றி பெற்ற முதிர்கன்னிக்கு என்னுடைய பாராட்டுக்கள்...நான் அறிவித்திருந்த முதலில் சவால் கதையை முடித்தவருக்கான 500 இபணங்களும் முதலில் இறுதிப் பாகத்தை சமர்ப்பித்த முதிர்கன்னிக்கே வழங்குகிறேன்...வாழ்த்துக்கள்...
போட்டியில் இரண்டாமிடம், மற்றும் மூன்றாமிடம் பெற்ற காமன், ஹபீப் ஆகியோருக்கும் மற்றும் பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.... |
#12
|
||||
|
||||
முதல் இடம் பெற்ற முதிர் கன்னி, அடுத்தடுத்த இடங்களை வென்ற காமன், ஹபிப் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#13
|
|||
|
|||
அனவருக்கும் வணக்கம்
தோழர் பில்லா.
எங்கே இருக்கிறீர்கள். இந்த வெற்றி உங்களால் அல்லவா. என் தயக்கத்தையும் மீறி, என்னாலும் முடியும் என்று ஊக்கம் கொடுத்து பங்கேற்க வைத்தவரல்லவா நீங்கள். அது மட்டுமல்லாமல், தங்க வாசலில் சந்திப்போம் என்று எனக்கே என் மீது இல்லாத நம்பிக்கையோடு கூறியவரல்லவா நீங்கள். நல்லோர் வாக்கு பொய்க்காது என்பார்கள். நான் பலமுறை சொன்னதுபோல நீங்கள் நல்லவரே. அதனால் தான் உங்கள் வாக்கு பொய்க்கவில்லை. என் மனமார்ந்த நன்றி. தோழர் தங்கர், ஆழ்ந்த ரசனையோடு என்னை பாராட்டி வருபவர் நீங்கள். அனுபவ முதிர்ச்சியோடு, நிறைகளை பாராட்டி, சிறந்தஇலக்கண ஆசிரியர்போல்குறைகளை மனம் புண்படாவண்ணம் கனிவாக சுட்டிக்காட்டும் உங்கள் பண்பை நான் எப்போதும் வியந்து, மகிழ்ந்து அனுபவிப்பேன். இந்த தொடர் பாகங்களிலும், நீங்கள் சுட்டிக்காட்டிய சிறு பிழைகளை நான் உணர்ந்த அளவிற்கு திருத்தி அமைக்க வழிகாட்டிய உங்களுக்கும் என் நன்றி. தோழர் அசோ, முதல் பாகத்தில் நீங்கள் காட்டிய அக்கறையே எனக்கு மகிழ்வாக இருந்தது. இப்போதைய தனி மடலால் அளித்த அங்கீகாரத்திற்கும் சேர்த்து என் நன்றி போட்டியில் பங்கேற்ற தோழர்கள் அனவருக்கும் என் பாராட்டுகளும் புத்தாண்டு வாழ்த்துக்களும். என்னையும் என் கதையையும் ஆதரித்து வாக்களித்த அனைத்து தோழர்களுக்கும். படித்து ரசித்து வாக்களிக்க மறந்த தோழர்களுக்கும் என் நன்றி. நல்ல ஒரு குடும்பமாக கலந்து பழக, கருத்து சுதந்திரத்தோடு வலம் வர ஒரு ஆரோக்கியமான தளத்தை ஏற்படுத்தி, தலமையேற்று நடத்திவரும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும். அனவருக்கும் வணக்கம். பிரியங்களுடன், முதிர்கன்னி Quote:
பிரியங்களுடன், முதிர்கன்னி (அடுத்தடுத்த இரு பதிவுகள் இணைக்கப்பட்டது.... 100 இபணம் அபராதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது....(கொடுத்தவுடனேயே அதில் சிறிது எடுக்க வைத்து விட்டீர்களே...ஆர்வத்தினால் அப்படிசெய்து விட்டீர்கள் என்று நம்புகிறேன்...அடுத்த முறை கவனமாக இருங்கள்...அனு...) Last edited by anusuya; 04-01-09 at 07:04 PM. |
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.. மற்றும் இரண்டு மூன்று இடங்களை பிடித்த எழுத்தாளர்களுக்கும் பாராட்டுக்கள்.. மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#15
|
|||
|
|||
புதியவர்கள் கதையில் உங்களின் கதையை படித்ததும் உங்களை எழுத்தாளர் என நினைத்துவிட்டேன்,அந்த அளவுக்கு எழுதி இருந்தீர்கள்.வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்துகள்.
|
#16
|
|||
|
|||
(அடுத்தடுத்த இரு பதிவுகள் இணைக்கப்பட்டது.... 100 இபணம் அபராதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது....(கொடுத்தவுடனேயே அதில் சிறிது எடுக்க வைத்து விட்டீர்களே...ஆர்வத்தினால் அப்படிசெய்து விட்டீர்கள் என்று நம்புகிறேன்...அடுத்த முறை கவனமாக இருங்கள்...அனு...)[/QUOTE]
தோழியரே, உங்கள் விவரிப்பு எனக்கு புரியவில்லை. அடுத்தடுத்து இரு பதிவுகள் இணைக்கப்பட்டது என்பதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. இரு பதிவுகளை தனித்தனியே தான் பதிப்பித்தேன். எப்படி இணைக்கப்பட்டது என புரியவில்லை. ஒரே நாளில் இரு பதிவுகள் செய்ததை குறிப்பிடுகிறீர்களா என்பதும் புரியவில்லை. என் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்ததாலும், திரும்பி வர 10 நாட்களாகலாம் என்பதாலும், குறிப்பிட்ட கெடுவுக்குள் கதையை நிறைவு செய்து அனுப்ப வேண்டுமே என்ற என் ஆதங்கத்தாலுமே அப்படி ஒரே நாளில் இரண்டு பாகங்களை பதிவு செய்தேன். இந்த விவரத்தை நான் ஏற்கெனவே தோழர். தங்கருக்கான பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி செய்யக்கூடாதா? எனக்கு தெளிவுபடுத்தினால், நான் எச்சரிக்கையாக இருக்க உதவும். தவறாகவோ. உங்கள் செய்தியை நான் மறுப்பதாகவோ கொள்ளவேண்டாம். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற முதிர் கன்னிக்கு வாழ்த்துக்கள்,
அடுத்தடுத்த இடங்கள்பிடித்த அனைவருக்கும் வாழ்த்துகக்ளும் அடுத்த சவால்களில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.... |
#18
|
|||
|
|||
முதலிடம் பெற்ற 'சவால் ராணி' தோழி முதிர்கன்னிக்கு வாழ்த்துகள். 2ம் இடம் பெற்ற காமன்007 க்கும், 3ம் இடம் பெற்ற அருமை நண்பர் ஹபிப்க்கும் மனமார்ந்த பாராட்டுகளும், அடுத்த போட்டியில் முதலிடம் பெற வாழ்த்துகளும்!
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற முதிர்கன்னிக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் பால்பையனின் இனிய வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
Quote:
உங்கள் விவரிப்பு எனக்கு புரியவில்லை. அடுத்தடுத்து இரு பதிவுகள் இணைக்கப்பட்டது என்பதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. இரு பதிவுகளை தனித்தனியே தான் பதிப்பித்தேன். எப்படி இணைக்கப்பட்டது என புரியவில்லை. ஒரே நாளில் இரு பதிவுகள் செய்ததை குறிப்பிடுகிறீர்களா என்பதும் புரியவில்லை. என் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்ததாலும், திரும்பி வர 10 நாட்களாகலாம் என்பதாலும், குறிப்பிட்ட கெடுவுக்குள் கதையை நிறைவு செய்து அனுப்ப வேண்டுமே என்ற என் ஆதங்கத்தாலுமே அப்படி ஒரே நாளில் இரண்டு பாகங்களை பதிவு செய்தேன். இந்த விவரத்தை நான் ஏற்கெனவே தோழர். தங்கருக்கான பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி செய்யக்கூடாதா? எனக்கு தெளிவுபடுத்தினால், நான் எச்சரிக்கையாக இருக்க உதவும். தவறாகவோ. உங்கள் செய்தியை நான் மறுப்பதாகவோ கொள்ளவேண்டாம். பிரியங்களுடன், முதிர்கன்னி[/QUOTE] நான் நீங்கள் ஒரே நாளில் பதித்த கதையின் இரண்டு பாகங்களைப்பற்றி குறிப்பிட வில்லை தோழீ...ஒரு திரியில் உங்கள் கருத்தைப்பதியும் போது நீங்கள் பதிக்க வேண்டிய பதிப்பு அத்தனையையும் ஒரே பதிப்பாக பதிக்க வேண்டும்....அப்படி அடுத்த பதிப்பு உடனே பதிக்க வேண்டும் என்றால் அடுத்து யாராவது ஒருவர் கருத்து பதிக்கும் வரை தாமதித்து அவர் பதிந்த பிறகு உங்கள் பதிப்பை பதிக்க வேண்டும்...தாமதிக்க விருப்பமில்லை என்றால் உங்களுடைய பதிப்பை (அது அத்திரியின் கடைசி பதிப்பாக இருந்தால்) அதை எடிட் செய்து பதிக்க நினைத்ததை சேர்த்து விட வேண்டும்... சுருங்கச்சொன்னால் எந்த ஒரு திரியிலும் ஒருவருடைய பதிப்புகள் அடுத்தடுத்து வரக்கூடாது...இத்திரியில் நீங்கள் முதலில் நண்பர்கள் வாழ்த்தியதை கோட் செய்து நன்றி தெரிவித்தவுடனேயே அடுத்த பதிப்பாக நான் வாழ்த்தியதை கோட் செய்து தனிப்பதிப்பாக கொடுத்துள்ளீர்கள்...அப்பதிப்பை சிறிது தாமதித்து யாராவது ஒருவர் பதித்த பிறகு பதித்திருந்தால் உங்கள் பதிப்பு அடுத்தடுத்த பதிப்பாக இரூக்காது அல்லவா.... |
|
|
|