<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||
ஜூன் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஜூன் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூன் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூன் 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 113 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூன் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 113 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 100 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 91. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 102. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தமிழ்வாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர். இந்த மாதம் மொத்தம் 3+24 பேர் அம்மாதிரி திரும்ப தமிழ்வாசலுக்கு, ஏழு நாள் உள் நுழைய தடை பெற்ற பின் செல்ல இருக்கின்றனர். வாக்கெடுப்பு திரி பார்த்தும் ஓட்டுப்போடாதவர் கீழே உள்ள மூவர். Auntylover007 jayjay Kavin11 வாக்கெடுப்பு திரிக்கே வராமல் , அந்த காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இவர்களில் ஒரு சிலர் தவிர அநேகர் தொடர்ந்து பல மாதங்களாக வாக்களிக்காதவர்கள். அவர்கள் இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு திரியை பார்க்காமல் (போர்ஸ்ட் டூ ரீட் திரட் கொடுத்தும்) தவிர்த்து, சிக்காமல் இருந்தனர். சென்ற மாதம் தளம் வந்தவர்கள் மொத்தம் 456 பேரில் வாக்களித்தவர் 113 பேர் மட்டுமே மீதி பேரில் கட்டண உறுப்பினர், தலைவாசல் உறுப்பினர், தமிழ்வாசல் உறுப்பினர் தவிர்த்து கீழே உள்ளவர்கள் ரெம்ப நாட்களாக வாக்களிக்காமலே இருந்துள்ளனர் என்று 14 மனிநேரம் செலவழித்து ஒவ்வொருவர் புரபைலாக சென்று தெரிந்து கொண்டோம். இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். dr.no microbala athreya ravirajan renga patarasu NamiXXX mmer Renuka jey Pijjaimani R.Chandran kamakedi ganesh143 marsan cembi vasugi shakes geevan bernard123x creative madhub5u tamilxxx alex1 தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தமிழ்வாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-07-22 லிருந்து 25-07-22 வரை) வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 26-07-22 at 12:38 PM. |
#2
|
||||
|
||||
வெற்றிபெற்ற கடம்பன் நாட்டி மற்றும் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொள்ளும் கதைகளில் குறைந்தது இரெண்டு மூணாவது முன்னரே படித்திருப்பீர்கள், அதில் பிடித்ததற்கு வாக்களிக்க ஒரு நிமிடம் கூட ஆகாது, அதில் வாக்களிக்க என்ன பிரச்சனை உங்களுக்கு... இப்படி ஒட்டு போடாதவங்க எல்லாரையும் பத்தி விட்டுட்டிங்கன்னா எங்க கதைக்கு பின்னுட்டடமிடற ஒன்னு ரெண்டு பேரும் காணாம போயிடறாங்க, இதனால் எழுத்தாளர்களுக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிடாதா ? அதான் தகுதி குறைப்பு செய்கிறீர்களே ஏழு நாள் தடை அவசியமா ? இந்த ஏழு நாளில் அவர்கள் வேறு ஏதாவது இணையம் பக்கம் சென்று அது பிடித்து போயி நிரந்தரமாக இங்கே வருவதை நிறுத்தும் வாய்ப்பும் இருக்கிறதல்லவா
__________________
ரேவதி |
#3
|
||||
|
||||
ஏழு நாள் தடை என்பது அவர்கள் தவறை உணரும் கால அவகாசமே!!
Quote:
Quote:
தகுதி குறைப்பு செய்யப்பட்டவர்கள் சிலர் அவர்கள் இழந்த அனுமதிகள் விரைவில் பெற்று இருக்கின்றனர்! மாத போட்டியில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களுக்கு இருந்தாலே அவர்கள் முந்தைய அனுமதிகள் திரும்ப கொடுக்க படும்! அதில் இருந்து மீண்டு வருவதற்கு வழிகள் உள்ளது! ஆனால் நான் இருக்கும் அனுமதிகளை வைத்துக்கொண்டு கதைகளையும் படிச்சிட்டு பின்னூட்டம் எதுவும் இடாமல் வாக்கெடுப்பு கலந்து கொள்ளாமல் விருந்தினர் மாளிகை மாதிரி வந்து போகிறவர்கள் இங்கே இருக்க எந்த அவசியமும் இல்லை நண்பரே!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#4
|
||||
|
||||
எனது சந்தேகங்களுக்கு பதிலளித்தமைக்கு நன்றி !!
__________________
ரேவதி Last edited by ஸ்திரிலோலன்; 26-07-22 at 07:18 PM. Reason: முந்தைய பதிப்புக்கு பதில் என்பதால் கோட் நீக்கப்பட்டது |
#5
|
||||
|
||||
சிறந்த கதைப் போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் கடம்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட தொடர் கதையை தொய்வில்லாமல் எழுதி இந்த பரிசை பெற்றதற்கு கூடுதல் பாராட்டுக்கள். இரண்டாம் இடம் பிடித்த நாட்டிஹாட்டிக்கும் மூன்றாம் இடம் பிடித்த பிஸ்தா அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இந்த முறை இருபத்தி ஏழு நபர்கள் தகுதி குறைப்பு செய்யப்பட்டு இருப்பது வருத்தத்தை தருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் அடிக்கடி தளத்திற்கு வருபவர்களாக இருக்கிறார்கள். இதிலேயும் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து கதைகளுக்கு பின்னூட்டம் அளித்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் வாக்களிக்க மறந்தது ஏன்?
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#6
|
|||
|
|||
ஜூன் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்
1.முதல் பரிசு பெற்ற KADAMBANC முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் 2.இரண்டாம் பரிசு பெற்ற naughty2hotty அவர்களுக்கும் 3.மூன்றாம் பரிசு பெற்ற pistha அவர்களுக்கும் அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! @@@@@@ களையெடுப்பின் வீச்சம் பெருமளவில் பரவியிருக்கிறது கண்டு ரத்தம் உறைகிறது; புகழ்பெற்ற சிலர் பலரும் அந்தப் பொல்லாதபட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அழுவதா சிரிப்பதா? மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிய ஆசியர்கள் மனங்களை நோகவைத்த 3+24 பேர்கள் எப்படிப்பட்ட வாசகர்கள்? |
#7
|
||||
|
||||
போட்டியில் ஜெயித்து வெற்றி வாகை சூடியிருக்கும் கடம்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அது அவருடைய ஒரு வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு. லோக நண்பர்கள் உழைப்புக்கு என்றும் மரியாதை கொடுப்பார்கள் என்பதற்கு இதுவே சான்று. உங்கள் நாயகன் சிவாவோடு சேர்ந்து நாங்களும் கருவேகங்காட்டுக்கு பயணம் செய்து ரசித்தோம்.
அத்தோடு இரண்டாம் இடம் பிடித்த நாட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். கார்த்திக் எழுதிய காவ்யாஞ்சலி ஒரு தரமான கமர்ஷியல் படம் பார்த்த பீல் வந்த கதை. கார்த்திக்,அஞ்சலி காதலை கன்னியமாக காண்பித்திருந்தீர்கள். கடம்பன் அவர்களின் படைப்பால் இந்த கதை இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. 'தங்கவாசல்' மிக அருகில் நண்பரே. மூன்றாமிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்கள் வழக்கம்போல் ஏதாவது ஒரு பரிசைத்தட்டிச் செல்வது அடிக்கடி நிகழ்வதுதான். நாங்கள் உங்கள் மாய உலகத்தில் சஞ்சரித்தோம்.உழைப்புக்கு பாராட்டுக்கள் பிஸ்தா. நண்பர் ஜெகன் குறிப்பிட்டது போல இந்த முறை களையெடுப்பின் வீச்சின் தாக்கம் லோகத்தைல் சலசலப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் சில தலைகள் தளத்தில் ஆக்டிவ்வாக இருந்தவர்கள்/இருப்பவர்கள் மற்றும் படைப்புகளுக்கு பின்னூட்டமிடுபவர்கள். ஆனாலும் நண்பர் கோனன் சொல்வது போல கொஞ்சம் உறுப்பினர்கள் இருந்தாலும் பங்களிக்க வேண்டும், ஓட்டளிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை சம்மட்டியால் அடித்தது போல சொல்லியுள்ளார். போட்டியை திறம்பட நடத்திய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள். |
#8
|
||||
|
||||
Quote:
நீங்கள் உறுப்பினர் மனநிலையில் இருந்து சொல்கிறீர்கள். நாங்கள் நிர்வாகத்தை செம்மையாக நடத்த நினைக்கிறோம். நடந்து முடிந்த ஒரு நிர்வாக சவாலில் வாக்கெடுப்பை நான் பார்க்க முடியும் என்பதால், கவனித்து வந்ததில் ஒரு மூத்த கதாசிரியர் ஒருவர் எழுதிய கதைக்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என்பதனை கண்டு, அதுவரை வாக்களிக்காத நண்பர் ஒருவரிடம் தனிமடலில் இந்த நிர்வாக சவாலில் இம்மாதிரி ஒரு சிறந்த கதாசிரியர் ஒருவருக்கு ஒரு வாக்கு கூட அளிக்கப்படவில்லை, நீங்கள் சவாலுக்கு வாக்களியுங்கள் என்றேன். அவர் உடனே அவர் தவிர்த்து இன்னொருத்தருக்கு வாக்களித்து விட்டார். அந்த சவாலுக்கு கதை எழுதிய உறுப்பினர் என்ன மனநிலை பெற்றிருப்பார். அவரை விட நான் மிகுந்த மன கஸ்டத்திற்குள்ளானேன், நான் வாக்கெடுப்பை மேற்பார்வையிடுபவன் ஆதலால் எப்போதும் யாருக்கும் முன்னரே ரிசல்ட் பார்க்க நேர்ந்தால் வாக்களிக்க மாட்டேன். அது தார்மீக ரீதியாக தவறு என்பதால். அதனால், வாக்கெடுப்பு ரிசல்ட் பார்க்கும் முன்னரே வாக்களித்து வாக்களிப்பு முறையாக வேலை செய்கிறதா என்று பார்த்து விடுவேன். ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், வேட்பாளர்கள் செய்யும் பிரச்சாரங்களுக்கெல்லாம் கூட்டமாக கூடி அவர்கள் பேச்சை கேட்டு மகிழ்ந்து கை தட்டி, பின்னர் ஓட்டெடுப்பு நாளன்று ஓட்டுப்போடாமல் விடுமுறை நாள் போல வீட்டிற்குள்ளே இருப்பவரால் யாருக்கு என்ன பிரயோசனம்?. இல்லை வாக்கெடுப்பே வேண்டாம், இம்மாதிரி தண்டனையும் வேண்டாம் என்று சொல்லுங்கள், கதாசிரியர் எல்லோரும் கதை மட்டும் எழுதி செல்லட்டும், மாதந்திர, மற்றும் நிர்வாக சவால் எதுவும் நிர்வாகம் சார்பில் நடத்தப்படாது. விருப்பப்படுபவர் பின்னூட்டம் இடட்டும், இல்லை என்பவர் படித்து மட்டும் செல்லட்டும், யாரையும் எதுவும் சொல்ல செய்ய மாட்டோம். சேர்ந்தவுடன் எல்லோருக்கும் தங்கவாசல் அனுமதி தந்து விடுவோம், இங்கிருக்கும் கதைகளை எல்லாம் நகல் எடுத்து தனித்தனி வெப்சைட் அல்லது ப்ளாக் ஆரம்பித்து அதில் பகிர்ந்து மகிழட்டும். நாம் வேடிக்கை பார்த்து மகிழ்வோமா?. ஓட்டு யாருக்கு போடச்சொல்கிறோம், நிர்வாகத்திற்கா, நிர்வாக உறுப்பினர் எழுதிய கதைக்கு மட்டும் ஒட்டுப்போடுங்கள் என்று சொல்கிறோமா?. உங்களில் ஒருவர் எழுதிய கதைக்கு படித்து மகிழ்ந்ததில் சிறந்ததை சுட்டிக்காட்டி கதை எழுதியவர் தரத்தை உயர்த்திக்காட்டி இன்னும் அவரை சிறப்பாக பங்களிக்கவைக்கத்தானே. கட்டண உறுப்பினர் தளத்திற்கான பொருளாதார தேவைகளுக்கு பங்களிப்பு செய்கிறார். ஆரம்ப நிலை உறுப்பினர் தலைவாசல் / தமிழ்வாசல் உறுப்பினர்கள் அடுத்தடுத்த வாசல் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால் பின்னூட்டம் எழுதி கதை எழுதுபவரை ஊக்குவிக்கிறார்கள் எப்போதோ பதிப்புகள்/கதைகள் எழுதி அனுமதி வாங்கியவர்கள், அந்த அனுமதியை தக்க வைக்க 3 மாதத்திற்கு ஒரு பதிவு, மாதத்திற்கு ஒரே ஒரு ஓட்டு, ஆக மொத்தத்தில் வருடத்திற்கு 36 பதிவுகள் செய்ய மனம் இல்லை என்றால் இவர்கள் எதற்கு?. இம்மாதிரி செய்யாதவர்களை இனங்கண்டு கீழிறக்கி விட்டால் திரும்ப பங்களிப்பார்கள் இல்லையா, இல்லாவிடால் அவர்கள் எப்போதும் போல அப்படியே இருந்து வருவார்கள். அவர்களால் தளத்திற்கு பலன் ஏதும் இல்லை. அவர்கள் மட்டுமே அடுத்தவர் உழைப்பை சுரண்டி அனுபவித்து பலனடைந்து வருவார்கள். சுரண்டலை அனுமதிப்பதில்லை. சோம்பலையும் அனுமதிக்கலாகாது. அது ஒரு புற்று நோய் அப்படியே பரவி பின் ஒருவரை பார்த்து இன்னொருவர் எதற்கு பங்களிக்க வேண்டும் என்று பரவி விடும். பின்னர் கதை பதிப்பவர் ஒவ்வொரு திரியிலும் பின்னூட்ட பிச்சை கேட்டு கடைசி வரி பதிக்க நேரிடும். Quote:
இனி அடுத்து வரும் மாதங்களில் பின்னூட்டம் அதிகம் வரும். வாக்கெடுப்பும் இதை விட கூட இருக்கும், ஏனென்றால் நாம் தட்டி உசுப்பி விட்டவர்கள் எல்லோருமே இதற்கு முன் இங்கே பங்களித்தவர்களே. தட்ட மறந்ததால் தூங்கி விட்டார்கள். ஏழு நாள் தடை இல்லாவிட்டால் இவர்கள் தலைவாசலில் ஆளுக்கொரு திரி ஆரம்பித்து ஏன் தகுதி நீக்கம் என்று கேள்வி கேட்பார்கள். ஒருவாரம் வெளியே இருக்கையில் தான் நிழலின் அருமை வெயிலில் தெரியும். Quote:
நான் உழைக்க மாட்டேன், அடுத்தவர் உழைப்பில் வாழ்வேன் என்பது சரியல்ல. இம்மாதிரி மாதந்திர கதை போட்டியில் வாக்கெடுப்பு தரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை என்று இப்போது சொல்லவில்லை, ஏழு எட்டு வருடங்களாகவே சொல்லி வருகிறோம். ஆனால் கடுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. சொல்லி சொல்லி ஒய்ந்து போய் சென்ற வருடத்தில் இருந்து தான் மெல்ல மெல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது தளத்திலே சோம்பல் விலகி திரும்ப சுறுசுறுப்பு வரும் போது, சிலர் டெக்னிக்கலாக பல மாதங்களாக வாக்களிப்பு திரி பக்கமே வராமல் ஏமாற்றியுள்ளனர். வாக்கெடுப்பு திரி வந்து வாக்களிக்கவில்லை என்றால் தானே கண்டு பிடிக்கிறீர்கள், நாங்கள் அந்த திரியே பார்ப்பதில்லை என்று அந்த லிங்க் கிளிக் செய்யாமலே சென்று விடுகிறார்கள். இனி அவர்களுக்கு அந்த சிரமம் இருக்காது.
__________________
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
Quote:
|
#10
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஆசிரியர் நண்பர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும், போட்டி வாக்கெடுப்பில் அனைவரும் கலந்து வரவேற்போம்
|
|
|
|