<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சென்னை வெள்ளமும்.....கண்ணீரும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ள காடானது.
நண்பர்களே உதவுங்கள் அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு.எதாவது ஒரு வகையில்.. Last edited by Nallavan1010; 11-12-15 at 06:48 AM. |
#2
|
|||
|
|||
மழைக்காலங்களில் வடி நீர் போய் சேரும் ஏரி குளங்களை எல்லாம் அரசியல் வியாதிகள் பண முதலைகள் ஆக்கிரமித்து வீட்டு நிலங்களாக மாற்றிய*தன் விளைவு இன்று சென்னை முழுக்க வெள்ளகாடாகி விட்டது.
லட்சக்கணக்கான மக்களின் வீட்டினுள் வீட்டினுள்ளே வெள்ளம் நுழைந்து பேரிடர்கால துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். பணம் பொருள் எல்லாம் இருந்தும் குழந்தைகள் வயதான பெரியவர்கள் என எல்லாரும் இருக்கின்ற வீட்டை விட்டு வெள்ளத்தில் பரிதவித்து வெளியேறுவதை காணும் போது உண்மையில் மனம் பேதலித்து போகிறது. நம்மால் முடிந்த அளவுக்கு எதாவது ஒரு வழியில் வெள்ளத்தில் கஷ்டப்படுகின்ற நம் மக்களுக்கு உதவுவோம். |
#3
|
|||
|
|||
நானும் செய்தி வீடியோ பார்த்து அதிர்ந்தேன்!
எனக்கு உதவ ஆசை. நம்பகமாக யாருக்கு பணம் அனுப்பலாம் என்று தெரிந்தால் நல்லது நண்பர்களே. |
#4
|
|||
|
|||
மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி. செல்வம் நிறைந்தவர்கள் கூட இப்பொழுது மூழ்கும் வீட்டில் இருக்க முடியாமல், வெளியேறி, ஒரு வேளை சாப்பாடிற்கு பொட்டலம் வருமா என எதிர் பார்த்து நிற்கும் அவல நிலை. ஐயகோ... மனம் பொறுக்கவில்லை.
|
#5
|
||||
|
||||
சென்னையில் வெள்ளம் என்ற செய்தி கேட்டதும் காமலோக நண்பர்கள் சிலர், குறிப்பாக வெளி நாட்டில் இருப்பவர்கள், எனது நிலை பற்றியும் இதர காமலோக நண்பர்கள் நிலை பற்றியும் தொலைபேசி, மற்றும் தனி மடல் மூலம் விசாரித்தார்கள். பலமுறை முயற்சி செய்த பிறகு நண்பர்கள் ரஜேஷ், அநபாயன், நல்லவன், ஆகியோர்களுடன் பேச முடிந்தது. பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று
நிம்மதியடைந்தேன். வியாழன் 03-12-15 காலை நான் வெளியே சென்று பார்த்த சில காட்சிகள்: அமைச்சர்கள் வசிக்கும் பகுதி கிரீன் வேஸ் ரோடு (பசுமை வழிச் சாலை) உட்பட எல்லாம் தண்ணீர் மயம். நான் எடுத்த ஒரு போட்டோ இதோ: வி ஐ பி களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை ? பல கட்டிடங்களில் இரவு 10 மணிக்கு திடீரென்று வெள்ளம் வந்து தரை தளம் மூழ்கி, முதல் மாடியில் 1 அடி தண்ணீர் வந்து விட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் அவசரம் அவசரமாக மொட்டை மாடிக்கு சென்று இரவு பூராவும் காத்திருந்தர்கள். மலர் ஆஸ்பத்திரி அருகே உள்ள அடையாறு பாலம் மேல் நின்று பார்த்தேன். தண்ணீர் பாலத்தை தொடும் அளவுக்கு சென்று கொண்டிருந்தது. நீர் மட்டம் இன்னும் 1 அடி கூடினால் பாலத்தின் மேல் சென்று விடும். இரவு பாலத்தின் மேல் 1 அடி தண்ணீர் சென்றதாக அருகே இருந்தவர்கள் கூறினார்கள். மற்ற பாலங்கள், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ஈக்காடுதாங்கல் ஆகியன, மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு மூடப் பட்டன. காரணம் பாலத்தின் மேல் 2 அடி தண்ணீர் அதி வேகமாக செல்வதால் ஆபத்து என்று அறிவிக்கப் பட்டது. போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். ஆபத்தான சாலைகளில் போக்கு வரத்து தடை செய்யப் பட்டிருந்தது. எல்லா ரோடுகளிலும் ஆறு போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பாதுகாப்பு கருதி சென்னை நகர் பூராவுக்கும் 3 நாட்கள் மின்சாரம் சப்ளை துண்டிக்கப் பட்டது. ஜெனரேட்டர் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கும் பெட்ரோல் தட்டுப் பாடு. 5 பங்க் களில் பார்த்த போது 1 ல் மட்டுமே பெட்ரோல் கிடைத்தது. செல்போன்கள் வேலை செய்யவில்லை. ரயில், பஸ், டாக்சி, ஆட்டோ எதுவும் 3 நாட்களாக இயங்கவில்லை. விமான நிலையமும் 3 நாட்களாக மூடப் பட்டது. ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும், பேரிடர் நிவாரண வாகனங்களும் ஆங்காங்கு சென்று கொண்டிருந்தன. பாதிக்கப் பட்ட மக்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், ரொட்டி, பிஸ்கட், போன்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் பல இடங்களில் இந்த வாகனங்களும் போக இயலாத அளவு தண்ணீர் இருந்தது. அங்கே படகு மூலம் விநியோகம் செய்ததாக கேள்விப் பட்டேன். அது கூட இயலாத பகுதிகளில் பாதிக்கப் பட்ட மக்கள் பட்டினிதான். மின்சாரம் நேற்று மாலை முதல் வந்தது. ஆனால் சாலைகளில் ஒரே டிராபிக் ஜாம். ஆங்காங்கு மக்கள் ஆர்ப்பாட்டம், மறியல் ! இப்போது மழை நின்று ஓரளவு சகஜ நிலை திரும்புகிறது ! இருந்தாலும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் மழை வருமென்று வானிலை அறிவிப்பு கூறுகிறது.
__________________
ராசு |
#6
|
|||
|
|||
நண்பர் ராசு
நச்சுனு ரொம்ப சாட்டா செய்தியை போட்டுவிட்டிங்க.ஒரே செய்தியில் சென்னை மழையின் கோரத்தை விவரித்துவிட்டிங்க* |
#7
|
|||
|
|||
சென்னை...வடியாத வெள்ளமும் கண்ணீரும் -என் அனுபவம் - மௌனி
தாய் சென்னையை பார்த்து பல நாளாகி விட்டது. திடிரென்று ஆஃபீஸ் விஷயமாக சென்னைக்கு செல்கிறீர்களா என்றி சொன்னவுடன் பாய்ந்து சென்னை வந்தேன். தாய் சென்னையல்லவா!
திங்கள் லேசான மழை. பரவாயில்லை என்று நினைத்தேன். செவ்வாய் நல்ல மழை. நூற்றாண்டிலேயே இதுதான் கடின மழை என்றார்கள். புதன் தண்ணீர் கணுக்கால் முழுதும் ஓடியது. ப்ரைவேசி கருதி இடத்தை சொல்ல விரும்பவில்லை. வியாழன் செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விட்டார்கள். வெள்ளி படகுகள் வந்து சென்னையே வெனீஸ் போல ஆனது. நண்பர்களை விட்டு , உறவுகளை விட்டு பிரிய மனமில்லை. மொட்டை மாடியில் இருந்தோம். தண்ணீர் வடிந்தது. மாலை அனைவரும் கிளம்பி அருகே ஒரு மேட்டு பகுதியை அடைந்தோம். வடியாத தண்ணீர் மற்றும் கண்ணீர். சென்னையை மட்டும் நம்பி வந்த பலரை வாழ வைத்த நகரம் இப்போது மீண்டும் பூஜ்யத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து உள்ளது. சென்னை...நீ மீண்டு எழுந்து விஸ்வரூபம் எடுக்க வேண்டும்....எடுப்பாய்! நம்பிக்கைதானே வாழ்க்கை. மௌனி |
#8
|
|||
|
|||
ஆமாம் ஆமாம் நம்பிக்கைதானே வாழக்கை அய்யா அம்மணி ! நிச்சயம் சென்னை புனர் ஜென்மம் எடுக்கும் அய்யா அம்மணி !
|
#9
|
|||
|
|||
இடைவிடாது கொட்டிய மழையினாலும் வடியாமல் தேங்கி நின்ற தண்ணீராலும் மிகவும் கஷ்டமாகிப் போய்விட்டது.. இன்டெர்நெட் இணைப்பும் கிடைக்காததால் என்னால் இன்றுதான் தளத்திற்கே வர இயன்றது..
ஆனா மறுபடியும் மழை ங்கிறாங்க... மறுபடியும் முதல்லேர்ந்தா..???? |
#10
|
|||
|
|||
Quote:
Quote:
|
|
|
|