<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மறைவு-அஞ்சலி
பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வோம் தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த படங்களின் எண்ணிக்கை ஏராளம். சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். . சமீப காலமாக இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சல் அதிகமானதன் காரணமாக சில தினங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு நினைவு தப்பியது. மாலை 4 மணிக்கு அவர் மரணமடைந்தார். தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பு பூர்ணம் விஸ்வநாதனின் மரணம் காமலோகத்தின் சார்பில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம் |
#2
|
|||
|
|||
விஸ்வநாதன் நல்ல குணச்சித்திர நடிகர். அன்னாரின் மறைவுக்கு இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#3
|
|||
|
|||
இரங்கற்செய்தி
Quote:
அவரின் இறப்பு ஈடு செய்ய முடியாதது. அண்ணாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். |
#4
|
|||
|
|||
பூர்ணம் விஸ்வநாதன் தனது கண்களை தானமாக கொடுக்க முன்பே ஆர்வம் தெரிவித்திருந்தார். இதையொட்டி, இவரது கண்கள் நேற்று இரவு, டாக்டர்கள் மூலம் எடுக்கப்பட்டு, தானமாக கொடுக்கப்பட்டது....
அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்..... |
#5
|
|||
|
|||
கண்தானம் செய்த மனித தெய்வம்.... மறைந்துவிட்டது.
இரங்கல். |
#6
|
||||
|
||||
பூர்ணம் விஸ்வநாதன் சிறந்த குணச்சித்திர நடிகர்.
மிமிக்ரி நிகழ்ச்சிகளில் அவரைப் போல பேசும் நிகழ்ச்சி கிட்டத்தட்ட எப்போதும் இருக்கும். அவருக்கு என் இறுதி அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். கண் தானம் செய்து மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சில் இருக்கிறார். தகவல் கொடுத்த அகுபாஸுக்கு நன்றி!!
__________________
|
#7
|
||||
|
||||
அமைதியான குண சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் நாடக துறையில் பல சாதனைகளை செய்துள்ளார்..இவரது மறைவு தமிழ் திரை/நாடக உலகுக்கு பெரும் இழப்பு..
|
#8
|
|||
|
|||
தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பு
பூர்ணம் விஸ்வநாதன் நல்ல வசன உச்சரிப்புடன் நடிப்புத் திறனும் கொண்ட பழம்பெரும் நடிகர். கமல்ஹாசனுடன் மகாநதி, மூன்றாம் பிறை படங்களில் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார். ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள் இன்றும் மறக்க முடியாதவை. விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த படங்களின் எண்ணிக்கை ஏராளம். சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள நாடகங்களைத் தந்தவர்.
பூர்ணம் விஸ்வநாதனின் மரணம் தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பாகும். Last edited by bemercyb; 02-10-08 at 11:04 AM. Reason: spelling mistake |
#9
|
||||
|
||||
Quote:
__________________
|
#10
|
|||
|
|||
கண்தானம் செய்திருக்கிறாரா....!பலே..பலே...பாராட்டுக்கலந்த என் அனுதாபங்கள்.
|
Tags |
நடிகர் , பூர்ணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|