<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பாரதி... (பாரதி-செல்லம்மா படத்துடன்..)
பாரதி
அந்த ஆகாயத்தையே வளைத்து குடிசையாக்கிவிடும் வல்லமை கொண்டவன் நீ! தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் மன்னர்களின் மோவாய்க்கட்டையின் நீள அகலத்தைப் புகழ்ந்தபோது நீ மட்டுமே தாயகத்தின் தாரகமந்திரம் தந்து தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்! புல்லாங்குழலால் அடுப்பூதிய புல்லுருவிப் புலவர்களுக்கு மத்தியில் நீ மட்டுமே அதில் தமிழ் ராகங்கள் வாசித்தாய்! வடமொழிக்கு வால் பிடித்த வல்லவராயன்களுக்கு மத்தியில் சொற்சமர் நடத்தி தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய சொல்லவராயன் நீ! அடுப்பூதிய பெண்களின் இடுப்பொடிந்த நிலையை மாற்றி தலை நிமிரச் செய்தவன் நீ! மனிதர்களிலும் பறவைகளிலும் விலங்குகளிலும் புற்களிலும் வித்தியாசம் கண்டதில்லை நீ! தேடிதேடிச் சமத்துவம் சமைத்து பறிமாறிக் களைக்காத பகுத்தறிவுப் பரிசாரகன் நீ! உனது கவிக்கனிகளால் பல சுதந்திரப் பறவைகள் உயிர் ஜனித்தன! முப்பத்தொன்பது வருடங்களை முத்தமிழுக்களித்துவிட்டு மீதிச் சதங்களைத் தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட இறைவன் ஒரு சுய நலக்காரனே! இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள். அவருக்கு எனது சிறிய அஞ்சலிக்கவிதையாக இதைப் பதித்துள்ளேன். Last edited by குரு; 11-12-12 at 07:09 PM. |
#2
|
|||
|
|||
Quote:
. |
#3
|
||||
|
||||
தனக்கென்றும் தன் குடும்பத்திற்கென்றும் எதுவும் சேர்க்காமலும் யாருக்கும் வால் பிடிக்காமலும், தான் கவிப்பேரரசு என்று சொல்லிக் கொள்ளாமலும் கர்வத்துடன் வாழ்ந்து மறையாமல் நம்முள் என்றும் இருப்பவர். தைர்யமும் நேர்மையையும் ஒருங்கே பெற்ற மாபெரும் கவிஞர் இந்த வையகம் இருக்கும் வரை இவரின் புகழிருக்கும்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#4
|
||||
|
||||
நான் ரசித்து படித்தது..."".கண்ணன் என் சேவகன்"""...
வாழ்க பாரதி புகழ்...... |
#5
|
|||
|
|||
மகா கவி பிறந்த தினமான இன்றைய தினத்தில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல.
|
#6
|
|||
|
|||
மிக்க நன்றியும் பாராட்டுக்களும் நல வாழ்த்துக்களும் !
|
#7
|
||||
|
||||
அருமையான கவிதை குரு! பாரதிக்கு வணக்கம்! எட்டயபுரம் அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்த இளம் பாரதியும் எட்டையபுரம் அரசரைப் புகழ்ந்து பாட வேண்டி இருந்தது! தன்னையே வெறுத்த அவன் காசிக்குச் சென்று விட்டான்! அங்கு மேலும் புலமை பெற்றுப் ஆவேசத்துடன் மேலும் கவிதைகள் எழுத ஆரம்பித்து, இந்தியத் தேசிய இயக்கத்துக்கு நற்பணி ஆற்றியது பின்னாள் அமர வரலாறு!
|
#8
|
||||
|
||||
மனதால் யானை பலம் கொன்ட அந்த அற்புத கவிஞர் இறுதியில் யானையாலேயே வீரமரணம் ஏய்தினார். சுதந்திரம் பெற அக்னி குஞ்சாய் மாறச்சொல்லிய அந்த கவிஞருக்கு ஒரு கவிதை சொல்லி பதித்த குருவுக்கு நன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#9
|
|||
|
|||
பாரதி என்ற பாருக்கே அதிபதியாகும் மனிதர் அவர்.அவர் இருக்கும்போது எந்த சொந்தக்கார இனத்துக்கார பயலும் அண்டவிடவில்லை.இப்போது அவரது பெயரை பிரபலப்படுத்தி அவரை இனத்துக்கானவராக சித்தரிக்கும் போக்கு சில அரசு ஆக்கிரமிப்பாளர்களால் அதிகப்படுத்தும் போக்கை காணமுடிகிறது.
|
#10
|
|||
|
|||
மகா கவியின் அரிதான படத்திற்கு மிக்க நன்றி. காண கிடைக்காத அரிதான பொக்கிஷம் தான். தங்களின் கவிதையும் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|