<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
புனிதமாக கருதப் படும் பாடல்களை உல்டா செய்யக்கூடாது
Quote:
அன்புள்ள காமலோக வாசகர்களே !! " FM நீங்கள் கேட்டவை " பகுதியில் "கனவு" அவர்கள் பதித்துள்ள இந்த* நேயர் விருப்பம் என் மனத்தை வருத்ததுக்கு உள்ளாக்கியது காமலோக விதிமுறைகள், கட்டுப்பாடடுகளின் படி, புனிதமாக கருதப் படும் பாடல்களை உல்டா செய்யக் கூடாது என்பதை அவர் மறந்துவிட்டார் போல. இது போல வேறு யாரும் செய்துள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது. திருக்குறளை உல்டா செய்வதும் வருத்தத்துக்கு உரியதே ஆகும் நமக்கு எந்தப் பாடலும் இலக்கியமும் புனிதம் இல்லையா என்ன? லட்சக்கணக்கான சினிமா பாடல்கல் இருக்கும் போது இது போல மத சம்பந்தப் பட்ட பாடல்கள, அதுவும் குறிப்பாக பாராட்டி பாதுகாக்கப் பட வேண்டிய இலக்கிய நூல்களை யாரும் உல்டா செய்து எவர் மனத்தையும் புண்படுத்த வேண்டாம் என காமலோக நிர்வாகிகள் மீண்டும் வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொளிகிறேன்.. இதுபோல விதிமீறல்களை பட்க்க நேரும் வாசகர்கள், நிர்வாகிகளுக்கு உடன் தெரிவிகக்வும் வேண்ட்ம்! நன்றி செம்பி |
#2
|
|||
|
|||
நானும் நண்பரின் கருத்தை ஆமோதிக்கிறேன். புனிதமாக கருதப்படும் பாடல்களை உல்டா செய்ய கூடாது என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
அதுமட்டுமல்ல உலகப்பொதுமறை திருக்குறள். நிஜவாழ்வில் குறளை மாற்றி கலாட்டா செய்பவர்கள் பலரை நான் கண்டித்துள்ளேன். ஆழமான கருத்துக்களை, வாழ்வியல் தத்துவங்களை கற்றுக் கொடுக்கும் திருக்குறளும் இங்கே உல்டா செய்து காமமாக படிக்கப்படுவது கண்டு வேதனை அடைந்தேன். திருக்குறளை உல்டா செய்வதையும் நிர்வாகம் தடைசெய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. |
#3
|
|||
|
|||
உலகப் பொதுமறை திருக்குறள் ஆதலால் வேண்டாமே உல்டா
|
#4
|
|||
|
|||
அருமையான கருத்து. முற்றிலும் ஆமோதிக்கிறேன். உலடா செய்யப் பாடல்களா இல்லை??
|
#5
|
|||
|
|||
பக்தி பாடல்களை தொட வேண்டாம்... சரிதான். திருக்குறள் முன்னமேயே உல்டா செய்ய பட்டு விட்டது என்று நினைக்கிறேன். அது ஒன்றும் மத சம்பந்த விஷயம் இல்லையே. குறள் என்பது ஒரு செய்யுள் வடிவம், அவ்வளவுதான். அதுபோல 1 1/2 வரியில் உல்டா செய்வது ஒரு தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.
|
#6
|
|||
|
|||
திருக்குறள் உல்டா
Quote:
நினைவு தான் வரும்!! அது அவமதிப்பு இல்லையா? அதே வடிவத்தில் அமைக்க வேண்டாம் (1 1/2 வரி செய்யுள் ) என்று நான் சொல்லவில்லையே ஆனால் திருக்குறள் வார்த்தைகளைப் போல அதே சந்தத்தில் அமைப்பது அவமதிப்பது போலத்தான் என்பது என் தாழ்மையான கருத்து.. |
#7
|
||||
|
||||
அந்த பதிப்பு பதிந்து பல மாதங்கள்(சில வருடங்கள்) ஒடி விட்ட பின் அதனைப்பற்றி இங்கே தனி திரி(அதே திரியில் பதிந்தால் சரி) ஆரம்பிப்பது சரியல்ல.
இம்மாதிரி பிறர் மனம் புண்படும்படியான பதிப்புகள்/படைப்புகளுக்கு அனுமதியில்லை, ரிப்போர்ட் போஸ்ட் செய்தால் அல்லது அந்த திரியிலே குறிப்பிட்டால் நடவடிக்கை நிச்சயம் உண்டு. மேலும் திருக்குறளை உல்டா செய்யக்கூடாது என்பது மாதிரியான கோரிக்கைகள் நியாயமில்லை, ஏனென்றால் இதுமாதிரி முன்னரே பல குறள்(இரண்டு வரி , முதல் வரி நான்கு வார்த்தை அடுத்த வரி மூன்று வார்த்தை) வந்துள்ளன. இவர்கள் இப்படி எழுதுவதால் அதன் புனிதத்துவம் கெட்டுவிடும் என்பது ஏற்புடையதன்று. உங்களுக்கு பிடித்தால் கருத்து பதியுங்கள் மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்க தைரியம் இருந்தால் அதிலே பதிந்து பதில் பெறுங்கள், இது எதுவும் செய்ய விருப்பம் இல்லை, ஆனால் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றால் ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள். சமீபத்தில் வெளிவந்த பிகே என்ற படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடுத்த போது நீதிமன்றம், வழக்குத்தொடுத்தவருக்கு சகிப்பு தன்மை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது நியாபகம் இருக்கலாம். பிடித்தால் பாருங்கள் இல்லாவிட்டால் அடுத்த படத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டது. இனி இம்மாதிரி ஏற்கெனவே பலமுறை சொன்ன விசயங்களுக்கு திரி ஆரம்பிப்பதை தவிருங்கள்.
__________________
|
#8
|
|||
|
|||
இவை ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டதுதானா ? அப்ப சரி சகிச்சிக்கிட்டு போகிறோன்.
|
#9
|
|||
|
|||
Quote:
பகுதியில் என்னுடைய கருத்தைப் பதித்ததோடு நனண்பர் கனவு அவர்களுக்கு தனி மடலும் அனுப்பினேன் பல நாட்களுக்கு முன்னரே, அதற்க்கு பதில் இல்லாததனால் தான் இந்த புகார் பகுதியில் பதித்தேன். மற்றவர்களும் இது பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்று!! எல்லோரும் எல்லா திரிகளயும் பதித்தவுடன் படிப்பது இல்லையே. மேலும் தேடுதல் லிங்க் சரியாக வேலை செய்வதில்லை, அதனால் இது பற்றிய வேறு திரிகளை என்னால் தேட முடியவில்லை.!! |
#10
|
||||
|
||||
Quote:
"புனிதமாக" கருதப்படும் பாடல்கள் எது என்பதிலும் இந்த தெளிவு இருந்தால் சிறப்பாக இருக்கும்.. பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" ... யின் உல்டாவையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|