<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ஒரு நாளில் ஜனனமும், பின்னர் அதே தேதியில் மரணமும் ஒரு சிலருக்கே அமையும். அது அமையப்பெற்ற, உலக புகழ் பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர் அவர்களுக்கு என் மரியாதையை உரித்தாக்குகிறேன். இதை லோகத்திற்கு எடுத்தியம்பிய ட்ரீமர் அண்ணா அவர்களுக்கு பாராட்டுகள்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#12
|
|||
|
|||
Quote:
|
#13
|
|||
|
|||
மதிப்பிற்குரிய ஐயா..,
இத்திரியை நான் விவாதத் திரியாக ஆக்க விரும்பவில்லை. இருந்தாலும்.. Quote:
அவை எழுதப்படிக்க தெரியாதவர்களுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்கும். மாறாக ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படைத்தவர். இதற்கு புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்குமா..? இங்கு நான் திசைதிருப்பவில்லை ஐயா.. நீங்கள் கொசுறு செய்தியாக... Quote:
Quote:
புலவர்கள் இலக்கணசுத்தத்துடன் கூடிய காப்பியங்கள் இயற்றியவர்கள். ஷேக்ஸ்பியரோ புதினங்களைப் படைத்தவர். வெறும் பாப்புலாரிட்டி என்ற அளவுகோலால் இவர்களை ஒருக்காலும் ஒப்பிடமுடியாது. ஒருவேளை ஷேக்ஸ்பியர் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற மொழியின் இலக்கணவரம்பிற்குட்பட்ட செய்யுள்களை இயற்றியிருந்தால் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம். |
#14
|
|||
|
|||
சபாஷ்! என் கருத்தை தெரிவித்த நல்லவன் மற்றும் கோடங்கியாருக்கு மிக்க நன்றி.
பில் (வில்லியம் ஷேக்*ஷ்பியரை சுருக்கமாக அப்படித்தான் இங்கு அழைப்பார்கள். வில்லியம் என்ற பெயர் பில் என்று சுருங்குவது நார்மலான விஷயம் உதாரணம். பில் கேட்ஸ் மற்றும் பில் க்ளின்டன்) பிறந்த ஊரில் வெகு காலம் குப்பை கொட்டுவதால் அவரை பற்றியும் அவருடைய படைப்புகள் ( அவருடைய படைப்புகள் அனைத்தும் எட்வட் டி வேர் என்பவரால் எழுதப்பட்டதாக நிறையபேர் நம்புகின்றனர்.) பற்றியும் அதிகம் அறிந்தவன் என்ற முறையில் விவாதிக்க விருப்பம். ட்ரீமர் ஐயா தனி திரி ஆரம்பித்தால் நானும் கோடங்கியாரும் ஆஜர் ஆகிவிடுவோம். சரி புத்தக தினத்திற்கு உபயோகமான விஷ்யங்களை பார்ப்போம். இந்தியாவில் முதன்முதலில் அச்சில் ஏறிய மொழி தமிழ் தான். உலகில் அதிக நேரம் புத்தகம் படிப்பவர்கள் வரிசையில் இந்தியர்கள் தான் முதல் இடத்தில் உள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 10.42 மணி நேரம் குறைந்த பட்சம் படிக்கிறார்களாம். சீனர்கள் 8 மணி நேரமும் அமெரிக்கர்கள் 5.42 மணி நேரமும் படிக்கிறார்களாம். இது போன்ற சுவாரசியமான செய்திகளை இந்த திரியில் பதியுங்கள். Last edited by venkat8; 25-04-14 at 04:58 AM. |
#15
|
|||||
|
|||||
Quote:
Quote:
(இதுபற்றி யாஹூ க்ரூப்ஸில் பல குழுக்கள் விரிவாக அலசுகின்றன, நான் உறுப்பினராக உள்ள இன்டர்நேஷனல் மென்ஸாவின் Bardolatry அப்படிப்பட்ட ஒரு க்ரூப். மென்ஸா உறுப்பினர்கள் தவிர மற்றவர்களும் மெம்பராகப் பதிவு செய்துகொள்ளலாம்.) புத்தகங்கள் பற்றிய தகவல்களை இதிரியில் பதிக்க எந்தத் தடையும் இல்லை. வெல்கம். |
#16
|
|||
|
|||
நான் இந்த திரியில் பதில் தந்த நேரத்தில் என் பதிவை மட்டும் தந்துவிட்டு தொடர்ந்து வந்த கருத்துக்களை பார்க்க முடியாமல் போயிற்று. ஆனால் அண்ணன் ட்ரீமர் இப்படி சொல்லிவிட்டாரே என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்தது. அதானால் சமீபத்தில் மௌனி அவர்களின் இந்த பதிவை பார்த்ததும் இந்த திரியின் நினைவு வர அதை புரட்டிப்பார்த்தேன். அதில் தொடர்ந்து அண்ணன் கம்பனும் இளங்கோவும் ஜனரஞ்சகமற்ற புலவர்கள் என்ற பாணியில் பதில் சொன்னதை கண்டதும் இதற்கு பதில் தரவேண்டும் என்று தோன்றியது. அதனால் இதை பதிக்கிறேன்
Quote:
இவர்களில் இளங்கோ அடிகள் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கம்பர் அவருக்கு பல நூற்றாண்டுகள் பின் வந்தவர்.கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி. ஸ்ரீ ராமர் மிதிலை நகரில் வலம் வந்த போது அவரின் தோற்றத்தை கண்ட அவ்வூர் பெண்களின் மனநிலையை கம்பர் இப்படி சொல்கிறார். தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரும் அஹ்தே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண்டாரை ஒத்தார் Quote:
தோள் கண்டேன் தோளே கண்டேன் இதய கமலம் படத்தில் காதலன் காதலியை பார்த்து பாடும் பாடல். 1965 ஆம் ஆண்டு வந்த படம் அது. கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் கழிந்த காலம் எத்தனை? எத்தனை சொற்கள் வழக்கொழிந்து போயின? அவற்றை மீறி நிலைத்து நிற்கும் கம்பனின் வரிகள் ஜனரஞ்சகமற்றவை என்று எப்படி சொல்லமுடியும்? கம்பனின் வரிகள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் மனத்திலும் ஆழப்பதிந்துள்ளவை என்பதை இவை போன்ற பாடல்கள் நிரூபிக்கவில்லையா? கம்பனுக்கும் பல பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இளங்கோவடிகள். அவரது படைப்பில் கோவலன் திருமணமானதும் கண்ணகியை புகழ்ந்து சொல்லும் வரிகள் இவை. சிலப்பதிகார வரிகள் திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர் கொல் மாசறு பொன்னே வலம்புரி முத்தே காறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய். ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடை பிறவா மணியே என்கோ? அலையிடை பிறவா அமிழ்தே என்கோ? யாழிடை பிறவா இசையே என்கோ? தாழிருங்கூந்தல் தையால் நின்னை என்று 1964 ஆம் ஆண்டு பூம்புகார் என்ற பெயரில் கண்ணகி கோவலன் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு படம் வந்தது. ஆர். சுதர்சனம் அவர்களின் இசையில் இப்படி ஒரு பாடல் அந்த படத்தில். படத்தின் முதல் பாடல். பொன்னாள்.....இந்த பொன்னாள் போலே வருமோ இனிமேலே இது திரைப்படத்தில் திருமண நாளில் கோவலன் கண்ணகியுடன் தனிமையில் பள்ளியறையில் இருக்கும்போது டி.எம்.எஸ். குரலில் கோவலன் பாடுவதாக அமைந்துள்ளது. அந்த காலத்தில் பலர் முணுமுணுத்த ஒரு ஜனரஞ்சக பாடல். இயற்றியவர் பெயர் எனக்கு தெரியவில்லை. இந்த பாடலில் பாடலாசிரியர் குலமாதர்கள் கொண்டா....டும் குணமா....மணியே ..... என்ற வரிகளை தொடர்ந்து இப்படி எழுதியிருக்கிறார். மாசறு பொன்னே வலம்புரி முத்தே காறு விரையே கரும்பே தேனே மலையிடை பிறவா மணியே என்கோ? அலையிடை பிறவா அமிழ்தே என்கோ? யாழிடை பிறவா இசையே என்கோ? அதாவது இந்த பாடலாசிரியர் அப்படியே அப்பட்டமாக சிலப்பதிகார வரிகளை தன் பாடலில் சொருகியிருக்கிறார். யார் வேண்டுமென்றாலும் யூ ட்யூப்பில் போட்டு கேட்கலாம். கம்பன் காலத்திற்கும் பல பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த இளங்கோவடிகளின் வரிகளை சென்ற நூற்றாண்டு திரையிசை கவிஞர் தன் பாடலில் அப்படியே எடுத்து கையாண்டிருக்கிறார் என்றால் இளங்கோவடிகளை ஜனரஞ்சகமற்ற புலவர் என்று சொன்னால் எப்படி பொருந்தும் இது மட்டுமில்லை அகத்தியர் என்ற பெயரில் வந்த பழைய திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடும் "நடந்தாய் வாழி காவேரி" என்ற பாடல் வரியும் அப்படியே சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். ஆங்கில மோகத்தில் வாழும் நம்மவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால் தானோ என்னவோ தான் பாரதி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம் என்று சொன்னார் போலும். வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது? தமிழை தாய்மொழியாக கொள்ளாத mouni யின் வரிகள் உண்மை என்றே தோன்றுகின்றன. Last edited by Nallavan1010; 10-09-15 at 12:15 PM. |
#17
|
|||
|
|||
உலக புத்தகங்கள் தினம் என்ற திரியின் பெயரை பார்த்து உள்ளே வந்து பார்த்தல் இலக்கிய மழையில நனைய வைத்து விட்டீர்களே நல்லவன் மற்றும் காமகொடாங்கி !!!!!
இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தளத்தின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன தொடரட்டும். |
#18
|
||||||
|
||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து தயாரித்து இந்தத் திரியை வெளியிட்ட அந்தப் பொல்லாதப் படைப்பாளர் அவர்களுக்குப் நெஞ்சார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துக்களும் அய்யா ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா ! |
#19
|
||||
|
||||
உபயோகமான தகவல்களுக்கு நன்றி
|
#20
|
|||
|
|||
ஷேக்ஸ்பியர் பிறந்த ஏப்ரல் 23 தான் புத்தக தினம் என்பதை இன்று காமலோகம் மூலம் அறிந்து கொண்டேன் .... தகவலுக்கு நன்றி
|
|
|
|