<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு-அஞ்சலி
பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு..
அவருக்கு எனது இறுதி கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.. அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. கிருபானந்தா வாரியார்.. குன்னகுடி போன்றோரின் இழப்புக்களை ஈடு செய்யவே முடியாது.. குன்னகுடி..... இசையால் வசியம் செய்தாய்.. நீ பேசியதை விட உன் இசை கருவியல்லவா அனைவரிடத்திலும் பேசியுள்ளது.. உன்னிடம் மட்டுமே அக்கருவி உயிருடன் இருந்தது.. இனி அக்கருவி ஊமையாகி போனது உனக்கு தெரியுமா..?/ அக்கருவி கதறி அழுவது.. உன் காதுகளுக்கு கேட்கவில்லையா.. எதற்கு இந்த அவசரம்.. வாழ்க உனது புகழ் அஞ்சலி செலுத்த காமலோக நண்பர்களும் விருப்ப படுவார்கள் என்ற எண்ணத்தில் இத்திரி ஆரம்பித்துள்ளேன்.. அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்.. |
#2
|
|||
|
|||
மிகுந்த துக்கம் தாக்குகிறது.
வயலின் இசையில் முடிசூடா மன்னனாக இருந்தாலும், சிறிதும் கர்வம் இல்லாமல் எளிமையாய் பழககூடியவர். அவர் பிரிந்தாலும் அவரின் இசை தமிழோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கும். |
#3
|
|||
|
|||
சாதனையாளர் குன்னக்குடியர் மறைவுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்....
திரி ஆரம்பித்த உதயசூரியனுக்கு நன்றி |
#4
|
||||
|
||||
குன்னக்குடியின் வயலின் மட்டுமா பேசும்..!!
அவரது முகபாவங்கள் இசையை ரசிக்காதவரைக்கூட ரசிக்க வைக்கும். குன்னக்குடியின் இழப்பு இசைஉலகுக்கு ஓர் மாபெரும் இழப்பு. அன்னாருக்கு என் இதய அஞ்சலி.,
__________________
|
#5
|
|||
|
|||
காற்றில் கரைந்த கர்நாடக சங்கீதம்
இவரை பற்றிய சிறு குறிப்பு
பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.கடந்த வாரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு 8.45 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி உயிர் பிரிந்தது. குன்னக்குடி வைத்தியநாதன் உடல் மந்தைவெளி கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடக்கிறது. குன்னக்குடி வைத்திய நாதன் 1935-ல் சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி சாஸ்திரி. சமஸ் கிருத வித்வான். கர்நாடக சங்கீதத்திலும் புகழ் பெற்றவர். சிறுவயதிலேயே தந்தையிடம் சங்கீதமும் வயலினும் கற்று 12 வயதிலேயே மேடை கச்சேரிகள் நடத்தினார். குன்னக்குடி வைத்திய நாதன். 1969-ல் வா ராஜா வா என்ற படத்துக்கு இசையமைத்தார். திருவருள், ராஜராஜசோழன், நவரத்னம், திருமலை தென்குமரி, தெய்வம், மேல்நாட்டுமருமகள், உள்பட 22 படங்களுக்கு இசையமைத்தார். தோடி ராகம் என்ற பெயரில் சொந்தபடம் தயாரித்தார். அப் படத்தில் கொட்டாம்பட்டி ரோட்டிலே என்று அவர் பாடிய பாடல் பிரபலம். உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே, மதுரை அரசாளும் மீனாட்சி, முத்தமிழ் பாட வந்தேன் முருகைனையே வணங்கி நின்றேன். இசையாய் செந் தமிழாய் இருப்பவனே... ஏடுதந்தானடி தில்லையிலே போன்ற இனிமையான பாடல்கள் அவர் இசையில் உருவானவை. திருமலை தென்குமரி படத்துக்காக 1970ல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் பெற்றுள்ளார். இவருக்கும் மனைவியும் 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் மறைவு இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும் அவரது குடும்பத்தாருக்கும், இன்னும் அவருடன் பலவிதத்தில் பழகிவந்த தமிழன்பர்களூக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்….. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். HABIB |
#6
|
|||
|
|||
அப்பப்பா அபீப் அணைத்தையும் தந்துவிட்டீர்களே..... படித்தேன் உண்மையிலேயே பெரிய மனிதர் தான் குன்னக்குடியார்...
அன்புடன் |
#7
|
|||
|
|||
மறைந்த அந்த வயலின் மேதைக்கு பணிவான அஞ்சலி.
அவரைப் பற்றி மேலும் சில தகவல்கள்: அவரது இசைப் பயணம் அவர் பிறந்த சிற்றூரான குண்றக்குடியில் இருக்கும் சண்முகநாதர் ஆலயத்திலிருந்து தொடங்கியது. ஆலயத்தில் உள்ள பூசகர்களுடன் பக்தி இசையை பாட ஆரம்பித்தார். அவரது தாயார் அவரை முறையாக இசை பயிலச் சொன்ன போது அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஒரு முறை அவரது தந்தையின் ஒரு இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டிய ஒரு வயலின் இசைக் கலைஞர் வர இயலாத நிலை ஏற்பட்டது. அதுகுறித்து அவரது தந்தை வினவியபோது அவர் இறுமாப்புடன் பதில் கூறியதாக் கூறப்படுகிறது. அப்போது அவரது தந்தையார் தன் மகனை ஒரு வயலின் வித்துவானாக்கிக் காட்டுகிறேன் என்று விடுத்த சவால் காரணமாக அவர் வயலின் கற்கும் நிலை ஏற்பட்டது. அவரது அரங்கேற்றம் காரைக்குடியில் பிரபல இசை வல்லுநர் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பிலிருந்து தொடங்கியது. அதுவும் எதிர்பாராமல் அமைந்த வாய்ப்பே. மரபு ரீதியான இசையைத் தவிர மெல்லிசை திரையிசை ஆகியவற்றிலும் அவர் கவனம் செலுத்தினார். பட்டி தொட்டியிலிருக்கும் பாமரனுக்கும் சாஸ்திரீய இசையை கொண்டு சென்றார். தனது 16 ஆவது வயதில் திரையிசை மேதை ஜி இராமநாத ஐயர் அவர்களின் இசைக் குழிவில் இடம் பிடித்தார். இப்படி படிப்படியாக அவரது இசைப் பயணம் உயர்ந்தது. பின்னாளில் இசை மூலம் நோய்களுக்கு குணம் காண முடியும் எனும் கோட்பாட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு தியாகராஜ ஆராதனை குழுவின் செயலராக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். வயலினுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கமே வாசிக்கப்பட்டு வந்த நிலையில், தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரது இசையைப் போலவே அவரது கோணங்கித்தனமான முகபாவங்களும், மிகப்பெரிய அளவிலான குங்குமப் பொட்டும், பலவண்ணங்களில் அவர் உடுத்தும் மேல்சட்டையும் பிரபலமடைந்தன. வயலினின் தாயகம் எனக் கூறப்படும் இத்தாலியில் கூட அவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உண்டு.......... அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். |
#8
|
|||
|
|||
வயலின் வாசித்து மழை வரவழைத்த சாதனையாளர் குன்னகுடியார்
|
#9
|
|||
|
|||
குன்னக்குடி அவர்களின் மறைவுக்கு எனது இதய* அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்
|
#10
|
|||
|
|||
மும்பையில் 2000ல் என்று நினைக்கிறேன். செம்பூரில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் விழாவிற்கு முந்தைய தினம் விழாவை முன்னிட்டு அவர் கச்சேரி நடந்தது. அவரை அங்கு நேரில் பார்த்திருக்கிறேன். அவர் கச்சேரியையும் ரசித்திருக்கிறேன். இசையால் அனைவரையும் தன் வசப்படுத்தியவர். அவர் இழப்பு இசை உலகத்துக்கும், நம் போன்ற ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
|
|
|