<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதைகளை படிப்பவர்கள் பின்னுட்டம் இட மறக்காதீர்கள்...
புதியவர்களின் கதைகளை படிக்கும் மற்ற உறுப்பினர்கள், அந்த கதைக்கு பின்னுட்டம் அளித்து, புதிதாக எழுதுபவர்களை உற்சாக படுத்தலாமே...
பல நண்பர்கள் திரியை படித்துவிட்டு மட்டும் செல்கிறார்கள்... பதிப்புக்கள் பிடித்திருந்தாலும் பிடிக்கவிட்டாலும் பின்னுட்டம் மூலம் தெரிவுபடுத்துங்கள்.. உங்களின் கருத்துக்கள் கதை எழுதுபவர்களுக்கு ஊக்கமாகவும், அவர்களின் பதிப்புகளை நெறிபடுத்துவதாகவும் இருக்கட்டும்.... கதைகளை படிக்கும் அனைவரும் பின்னூட்டம் இட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க தலைவரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. ஏதாவது தவறாக கருத்தை வெளிபடுத்தி இருந்தால். அல்லது தவறான திரியில் பதித்து இருந்தால்.. நிர்வாக உறுப்பினர்கள் என்னை மன்னிக்கவும்... என்றும் காமலொக ரசிகன்.. jayjay |
#2
|
|||
|
|||
இதை அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். நீங்களும் அதையேதான் சொல்கிறீர்கள்.
நீங்கள் சரியாக செய்கிறீர்களா? 45 பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள் தமிழ் வாசலை ஏன் இன்னும் தொடவில்லை உங்களை இப்படி கேட்பதால் என்னை தவறாக எண்ணவேண்டாம். தலைவர் நீங்கள் சொல்லும் விசயத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். சரியா உங்களின் வேண்டுகோளுக்கு நன்றி Last edited by jaka; 18-08-09 at 11:53 PM. |
#3
|
|||
|
|||
நான் தவறாக நினைக்கவில்லை மாம்ஸ்..
நான் செல்லும் அனைத்து திரிகளுக்கும் பின்னுட்டம் அளித்து வருகிறேன்... புதியவர் அறிமுகத்தையும் அடிக்கடி பார்த்து வரவேற்கிறேன்... மேலும் நான் தமிழ் வாசல் செல்ல தலைவரிடம் விண்ணப்பித்துள்ளேன்... விரைவில் தமிழ் வாசலில் சந்திப்போம்... |
#4
|
||||
|
||||
பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை உற்சாகபடுத்துவது அவசிமானது நல்லதும் கூட. அதுவும் ஓரளவுக்கு நல்ல பின்னூட்டம் இருக்க வேன்டும். சூப்பர் அருமை என்று ஒரு வரி பின்னூட்டம் சிறந்ததல்ல.
Quote:
அப்படி செய்தால் தரமில்லாத பின்னூட்டங்கள் அதிகரிக்குமே தவிர பயனில்லை. இந்த பகுதியில் திரி துவங்கும் புதியவர்கள் இதே போல பல திரிகள் முன்பே வந்திருக்கலாம். அதனால் பழைய திரிகளை ஓரளவுக்கு படித்து விட்டு பிறகு நீங்கள் தனியாக திரி துவங்குங்கள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#5
|
||||
|
||||
பின்னூட்டமா.. அப்படினா ..?
நண்பரே ! அவசரகதியில் படித்துவிட்டு போகும் நண்பர்கள் பலர் உள்ளனர். மேலும், திரியின் சுட்டியை க்ளிக் செய்து உள்ளே வந்தாலே, வியூசின் எண்ணிக்கை கூடும், அதை வைத்து எல்லாரும் திரியை (முழுதாக) படித்து விட்டார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். எட்டி பார்த்துவிட்டு போகும் நண்பர்கள் பலர் உள்ளனர். யாருக்கு நேரம் இருக்கோ, முக்கியமா உங்க படைப்பு பிடிச்சிருக்கோ நிச்சயம் அவர்கள் பின்னூட்டம் இடுவார்கள். படைப்பை படித்துவிட்டு, வேலை செய்யும் இடத்திலிருந்து தட்டச்சு செய்யமுடியாத சூழ்நிலை எல்லாம் இருக்கு. அதனால் கூட கருத்து பதியாமல் போக வாய்ப்புகள் உள்ளது. கட்டாயமாக்கினால் வாத்தியார் சொன்னதுபோல் தரமில்லாத பின்னூட்டங்கள் குவிந்துவிடும். மேலும் பதிப்பின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக பதிந்து கொண்டே போகக்கூடாது என்று கட்டுப்பாடும் இருக்கிறது. உங்கள் திரிக்கெல்லாம் நான் பார்த்த வரையில், பல சீனியர்களே பின்னூட்டம் இடுகிறார்கள், வேறென்ன வேண்டும். மேலும் காமலோகம் பெரிய கடல், உங்கள் பதிப்பு மட்டும்தான் கண்ணில் படும் என்று என்ன வேண்டாம். பின்னூட்டம் பத்தி கவலைப்படாமல் பங்களிப்பை தொடருங்கள். அதைவிட முக்கியம், நீங்கள் சென்று பின்னூட்டம் இடுங்கள். இவையெல்லாம் நட்பு முறையில் உங்களுக்கு சொல்வதுதான். வாழ்த்துக்கள் ! |
#6
|
||||
|
||||
jayjaykarthik, முதலில் திரி ஆரம்பித்து சந்தேகம் கேட்கும் பழக்கதை விடுங்கள், உங்களுக்கு முன்னரே பலர் இம்மாதிரி திரி/கருத்துக்கள் பதிந்து உள்ளனர். மெதுவாக தேடி பார்த்து அதிலே தொடருங்கள்.
அதே போல, தவறாயிருந்தால், நிர்வாக உறுப்பினர் மண்ணிக்கவும் என்றெல்லாம் பதிக்காதீர்கள். நீங்கள் செய்வது சரி என உங்களுக்கு 100% மனதில்பட்டால் பதியுங்கள். இல்லாவிட்டல் திரி ஆரம்பிக்கும் முன் நிர்வாக உறுப்பினரிடம் தனிமடலில் கேட்டு பதியுங்கள். பின்னூட்டம் தருவது திரி பார்ப்பவர் விருப்பம், அதை நாம் சொல்ல முடியுமே அன்றி கட்டாயப்படுத்த முடியாது. ஒரு திரியில் சரக்கு இருந்தால் தன்னாலே பின்னூட்டம் விழும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
__________________
|
#7
|
|||
|
|||
நல்ல கேள்வியும், சிறந்த பதில்களும் !
படைப்பாளர்கள் அவர்களின் படைப்புக்களை பதியும் காரணம் அவர்களின் மனத் திருப்திக்காகவே ! பின்னூட்டங்கள் வந்தால் அவர்களுக்கு சற்று ஊக்கம் கூடும், அவ்வளவே ! பின்னூட்டங்களை எதிர்பார்க்காமல் நிறைய ஆசிரியர்கள் அவர்களின் படைப்புக்களை சுவை குன்றாமல் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள் ! அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
#8
|
|||
|
|||
பின்னூட்டங்கள் ஒரு விஷயத்தை படித்து ரசிப்பவரின் எண்ண ஓட்டங்களின் அடிப்படையில் அமைகின்றன.நல்ல பின்னூட்டங்கள் படிப்பவர்களின் ரசனையை படைப்பாளிகளுக்கு தெரிவிக்கும் கருவியாக அமைகின்றன. படைப்பாளி ஒருவர் தான் எதிர் பார்த்த வகையில் பின்னூட்டம் வரவில்லைஎன்றாலோ? ஏதாவது ஒரு வகையில் எமாற்றமடைந்தாலோ? அதற்காக வருந்தாமல் அடுத்த படைப்பை மேலும் சிறப்புற எவ்வாறு அமைக்கலாம் என யோசிப்பதுதான் தரமான மன ஓட்டமாகும். கட்டாயப்படுத்துவது எவ்வகையிலும் சிறந்ததல்ல.மேலும் நல்ல தரமான பின்னூட்டங்கள் வரவேண்டும் என்பதற்காகவே நமது தள நிர்வாகம் சிறந்த விமர்சகர்களை பாராட்டும் வழி வகைகளையும் செயல் படுத்தி வருகிறது. யோசித்துப்பார்த்தால் சிறந்த பின்னூட்டங்களே சில நேரங்களில் சிறந்த படைப்பாகவும் மாறலாம்.காமலோகம் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது.
|
#9
|
|||
|
|||
வாசிப்போரின் எண்ணிக்கையை வைத்தே (அதிகமிருப்பின்) ஒரு படைப்பாளி திருப்தியும், பெருமையும் கொள்ளலாம்.
மேலும் பின்னூட்டத்தைக் கட்டாயமாக்கினால், கதையின் ஒரு சிறப்பான பகுதியைப் பாராட்டியே எண்ணற்ற கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விழும். இதுவும் சலிப்பையே ஏற்படுத்தும். |
#10
|
||||
|
||||
Quote:
மாறாக குறைகளை கூட நல்ல விதமாக, அதாவது கதை பதித்தவர் மனது வேதனை படாதபடி எடுத்து சொல்லலாமே! கதை படிப்போர் கண்டிப்பாக படித்த கதைகளுக்கு நல்ல பின்னூட்டம் அளியுங்கள். நன்றி!
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
Tags |
படிப்பவர்கள் , பின்னுட்டம் , புதியவர்களின் கதைகள் , மறக்காதீர்கள் , இட , கதைகளை , கருத்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|