<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காலத்தால் அழிக்க முடியாத காவிய வரிகளை தந்த கலைப்பறவை தனது கடைசி பயணத்தை முடித்து கொண்டது ...
வாலி இப்போது அந்த ராமனின் நிழலில்...அவதார புருஷனாய்... பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இன்று வியாழன் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை ஐந்து மணி அளவில் அவர் இறந்தார். ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில்.தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர் ‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்று கூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார் என்று கூறப்படுகிறது. வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். இவ்வளவு நீண்ட காலம் நிலைத்து நின்ற திரைப்படப் பாடலாசிரியர் வேறு எவரும் இல்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளர் வாமனன். வாலி பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியதாகக் கருதப்படுகிறது. 2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' மற்றும் 'அவதார புருஷன்' போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார். சிறுகதை,உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார் கவிஞர் வாலி சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் கவிஞர் வாலி அவரை பற்றி சொல்லி மாளாது... அனைவருக்கும் நண்பர்; அனைவருக்கும் இனியவர் Last edited by asho; 19-07-13 at 10:53 AM. Reason: அடுத்தடுத்த பதிவுகளை ஒன்றாக்க |
#2
|
||||
|
||||
அருமையான பாடலாசிரியர் வாலி அவர்களின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை அப்டேட் செய்து கொண்டே பாடலின் மூலம் நம்மையும் கற்றுக் கொள்ள செய்தவர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#3
|
|||
|
|||
வாழ்ந்த காலத்தின் அத்தனை தலைமுறையிலும் அதற்கேற்ற பாடல்களை எழுதி அனைவர் உள்ளத்திலும் இடம் பிடித்த கவிஞர். நடிகராகவும் பரிமாணம் எடுத்தது அசத்தியவர். மண்ணில் உடல் மறைந்தாலும் மனதிலும் உலகிலும் என்றும் வாழும் அழியாப் பாடல்களைத் தந்தவர்.
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். |
#4
|
|||
|
|||
Quote:
எம்.ஜி.ஆர். தொடங்கி தற்போது உள்ள தனுஷ் வரை பல்வேறு கதாநாயகர்களுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளவர்; அனைது தரப்பினருடனும் இணைந்து நடந்தவர். என்றென்றும் வாலிபகவி அவர்.... அவரின் உடம்புக்குதான் முடியாமல் போனது |
#5
|
||||
|
||||
என் வியத்தகு கவி வாலி அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி !!
என் வியத்தகு கவி அமரராகிவிட்ட வாலிக்கு திரி துவங்கிய jayak அவர்கட்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் என் இதயத்தில் குடி கொண்டிருக்கும் என் ஆஸ்த்தான புலமைமிக்க கவிஞனின் மறைவை நான் இப்பொழுது தான் அறிகிறேன். என் கண்கள் பனிக்கிறது. பல தலைமுறைகளை கடந்த மாமேதை, ஈடு இணையற்ற கவிக்குயில். கண்ணதாசனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இவர் பல தலைமுறையினருக்கு பாடல் எழுதியிருந்தாலும், அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றார் போல் கவிதை எழுதுவது தான் இந்த காவிய நாயகனின் தனி சிறப்பு. இவரால் கண்ணதாசனும் பெயர் பெற்றார் என சொன்னால் அது பொய்யில்லை. ஏனெனில் அந்த காலத்து பெரும்பான்மையான பாமர மக்களுக்கு தெரிந்ததெல்லாம் பட்டுக்கோட்டையார் மற்றும் கண்ணதாசன் தான். வாலி அவர்கள் எழுதிய பல பாடல்களை மக்கள் இன்னமும் பலர் கண்ணதாசனின் பாடல் என்றே கூறுவர். பூவை என்பதோர் பூவைக் கண்டதும் தேவை தேவை என்று வருவேன்! இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க அன்பு உன்னைக் கேட்டு நான் தருவேன்” கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன ஒருநாளும் அழகு குறையாது” என்ற இனிக்கும் காதல் வரிகள், குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும் என்னும் பாடலில் வரும். அதுப்போல் இவர் எழுதிய பதினைந்தாயிரம் கவிதைகளில், ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல் கீழே உள்ள பாடல், நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று கண் மீனாக மானாக நின்றாடவோ சொல் கேளாத தாயாக பன்பாடவோ மாலை நேரம் வந்துரவாடவோ நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது நிலைக் கண்ணாடி கண்ணங்கண்டு ஆஹா மலர் கள்ளூரும் கின்னம் என்று ஓஹோ அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா மன்னன் தோளோடு அள்ளிக்கொஞ்சும் கில்லை அவன் தேரோடு பின்னிச் செல்லும் முள்ளை உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் உந்தன் கை கொண்டு உண்ணாது சந்தித்தேன் நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ சின்ன பூ மேணி காணாத கண் என்ன சொல்லி தீராத இன்பங்கள் என்னன்ன நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது இதை விட ஒரு பாடல் வரிகள் இருக்க முடியுமா என்ன ?? கோடி ரூபா கொட்டிக்கொடுத்தாலும் இப்படி ஒரு பாடலை யாராலும் எழுத முடியாது. அடுத்ததாக இன்னொரு சாம்பில், கலை அன்னம் போல் ஒரு தோற்றம் இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம்போல் அவள் தோற்றம் இதழில் மதுவோ குறையாது என்ற அர்புதமான காதல் வரிகள், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளி இல்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை என்னும் பாடலில் வரும். காதல் பாடல் மற்றுமன்றி, கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம் ஏராளமான தத்துவப்பாடல்களையும், பக்தி பாமாலைகளையும் இவர் இயற்றியுள்ளார். எல்லாத்தை விட மிக கொடும, இந்த இளம் கவி வாலி இயற்றிய கீழே உள்ள இப்படி ஒரு நவயுக பாடலை இன்றைய இளைய கவிஞர்களால் கூட ஏன் வெள்ளக்காரனால் கூட எழுத முடியாது, ஆமாம் இந்த வயசிலையும் இந்த காலத்திற்க்கேற்ப இப்படி ஒரு பாடலை இயற்றினால் இவர் இளம் கவி தானே ?! D A T I N G you and me were meant to be yeah I can clearly see dating is a Fantasy பாய்ஸ்ச ஏங்க வைக்காதே ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே ஃப்ரெண்டுனு ஃபுல்ஸ்டாப் வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே கேர்ல்ஸ்ச ஜீவிங்கம் ஆக்காதே ஹார்ட்டிலே குடிசை போடாதே காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே நட்புல ரெட்ரோஸ் நீட்டாதே do that thing you like to do do it let me win your heart let me never stop and let me start all I wanna do is win your heart aiyo love is full of pain poda love is just a strain I don't wanna love I don't wanna love - what? love is not a game love is not a game ஃப்ரெண்ட்ஷிப் என்பது RAC லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி ஃப்ரெண்ட்ஷிப் என்பது ஃபுல்சேஃப்டி லவ்வில் ஏது கியாரண்டி yeah... I can clearly see dating is a fantasy aiyo love is full of pain poda love is just a strain பாய்ஸ்ச ஏங்க வைக்காதே ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே ஃப்ரெண்டுனு ஃபுல்ஸ்டாப் வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே I don't wanna love I don't wanna love love is not a game love is not a game yeah yeah come on baby yeah yeah come on baby yeah yeah come on baby cha cha cha chachaacha... Move it boy - O Baby (3) yeah yeah come on baby girl you know you got me thinking all about you and I really wanna no if you love me too will you let me know because my heart is true babe when I see your face I wanna be with you முகநக நட்பது நட்பல்ல நெஞ்சத் தகனக நட்பது நட்ப்பாகும் கற்க கசடற கற்ப்பவை கற்றபின் மறக்க செய்வது லவ் ஆகும் I really do care and I will be there you can take me every where stay with me and I'll let you see in my heart you'll be காதலின் நெருங்கிய நண்பன் தோல்வி காதல் பிச்சை பொய்கலின் வங்கி காதல் இச்சை பிச்சை கேட்க்கும் கொச்சையே... வேண்டாமே ஃப்ரெண்ட்ஷிப் என்பது RAC லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி ஃப்ரெண்ட்ஷிப் என்பது ஃபுல்சேஃப்ட்டி லவ்வில் ஏது கியாரண்டி yeah, I can clearly see dating is a Fantasy aiyo love is full of pain poda love is just a strain பாய்ஸ்ச ஏங்க வைக்காதே ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே ஃப்ரெண்டுனு ஃபுல்ஸ்டாப் வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே I don't wanna love I don't wanna love love is not a game love is not a game do you wanna go? - no will you mine? - no do you wanna go? - no no no I don't will you mine? - no no no I won't say what say what will you be mine.. aha yeah... jus beat it man love is not a fashion love is not trend love is for loosers Beat it friend love is not for me and love is not for you love is but a dream so be my friend சின்ன சின்ன சில்மிஷம் சின்ன சின்ன குரும்புகள் செய்ய சொல்லி தூண்டுது வயசுங்க ____ டாஷ் ____ டாஷ் எதுவுமே இதுவரை பார்க்கல கோடிட்ட இடங்களை நிரப்புங்க love is such a big mistake listen to me boy I know - No only friendship takes you higher everyday ss friends we grow எந்த தப்பும் செய்திட மாட்டோம் ஆனால் தண்டா மாத்திரம் செய்வோம் எங்கள் பர்ஸ்சுகள் மொத்தமும் காலி அதிலே முத்தமும் போடுங்க கேர்ல்ஸ்ச ஜீவிங்கம் ஆக்காதே ஹார்ட்டிலே குடிசை போடாதே காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே நட்புல ரெட்ரோஸ் நீட்டாதே do that thing you like to do do it let me win your heart let me never stop and let me start all I wanna do is win your heart aiyo love is full of pain poda love is just a strain I don't wanna love I don't wanna love - what? love is not a game love is not a game do you wanna go? - no Will you mine? - no do you wanna go? - no no no I don't will you mine? - no no no I won't say what say what will you be mine.. aha yeah... Jus beat it man கவிஞர் வாலி அவர்கள் தன் பள்ளிப் பருவத்தில் எழுதிய இந்த வைர வரிகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும், ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான் ! வாலிக்கு நிகர் வாலி தான். இவரதி இடத்தை எந்த ஓர் கவிஞராலும் ஈடுட்ட முடியாது. அவர் ஆத்மா சாந்தியடைய எனது கண்ணீர் அஞ்சலி !! தலைவா நீயும் போய்விட்டாயா ?! மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும் நீ என்றும் இந்த பூமியில் காற்றோடு காற்றாக வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பாய் தலைவா உனக்கு அழிவென்பதே கிடையாது !! |
#6
|
|||
|
|||
அமர கவி வாலியின் இழப்பு பேரிழப்பு தான் இலக்கியவாதிகளுக்கும் திரையுலகினற்கும். எனக்கு சிலேடையின் மேல் ஈர்ப்பு வந்ததே வாலியின் கவிதைகளை படித்த பின் தான். சிறு வயதில் மாலியை போல் ஓவியராக ஆசைப்பட்டு ரங்கராஜன் என்னும் தன் பெயரை வாலி என்று மாற்றிக்கொண்ட வாலியால் சித்திரத்தில் பெயரெடுக்க முடியவில்லையெனினும் இலக்கியத்தில் ஒரு சிம்மாசனத்தை தமிழ்த்தாய் அமைத்துக் கொடுத்தாள்.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் என்ற பாடலை ஒரு போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ் க்கு அனுப்ப அவர் வாலியை திரையுலகிற்கு கொண்டு வந்தார். வாலி கடைசிவரை அந்த நன்றியை மறக்காமல் பல இடங்களிலும் சொல்வதுண்டு. எழுத்துலக வாத்தியார் சுஜாதாவும் வாலியும் பால்ய கால நண்பர்கள். (இருவருமே ரங்கராஜன்கள் தான்) தமிழ்த்தாயின் தவப்புதல்வனின் உடல் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் தமிழுள்ளவரை இருக்கும். அவதார புருஷனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். |
#7
|
|||
|
|||
எம்.ஜி.ஆர்.-வாலி கூட்டில் உருவான பல புரட்சிகரமான கருத்துள்ள பாடல்கள் மறக்க முடியாதவை.
'கற்பனை என்றாலும்..' வாலியின் வரிகளா! |
#8
|
||||
|
||||
இவரின் உலக வாழ்வை பற்றிய எளிய பாடல் வரிகள்...எத்துனை நிதர்சனம்..!
எல்லோரும் சொல்லும் பாட்டு..! சொல்வேனே உன்னை பார்த்து...! மேடையே..வையகம் ஒரு மேடையே..! வேஷமே..அன்பெல்லாம் வெறும் வேஷமே..! மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்...! நாம் கூத்தாடும் கூட்டமே...! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..! இறுதியாக, 'நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்..! ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன...! காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மலரெல்லாம் அவள் கூடலாய் மலர்ந்தது...!' என்ற அருமையான 2013 - 'மரியான்' திரைபாடல் வரை அருமையான பாடல் வரிகளை தந்த 'எவர்-க்ரீன்' பாடலாசிரியர் அவர்.! தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் கவிதை வரிகளில் பாடல்களுக்கு உயிர் தந்த, கவிஞர். வாலியின் மறைவு திரை உலகிற்கும், தமிழ் உலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.! அண்ணாரின் ஆன்மா நித்திய சாந்தி அடைவதாக.! அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..! வாலி அவர்களுக்கு திரி தொடங்கிய நண்பர் ஜெயக் அவர்களுக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Last edited by HERMI; 19-07-13 at 07:01 AM. |
#9
|
|||
|
|||
தமிழ் மீது ஆர்வம் உடைய அனைவருக்கும் திரு.கண்ணதாசன் மற்றும் வாலிபர் வாலியின் தாக்கம் நிச்சயம் உண்டு.
இதை நம் தள படைப்பாளிகளின் பதிவுகளும் இங்கு உறுதி செய்கிறது இத்திரியில் என்றென்றும் நம் மனதில் வாழ்ந்திருக்கும் 82 அகவை கண்ட வாலிப கவியின் படைபில் நமக்கு மனதில் தொட்டதை பகிர்ந்து வருவோமே |
#10
|
|||
|
|||
Quote:
Quote:
மறைந்த அந்த அரிய மாமேதை கவியரசருக்கு லோக நண்பர்களுடன் இணைந்து எனது அஞ்சலியை சமர்பிக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|