<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பெரியவர் நம்பியாரின் மரண செய்தி தமிழ் சினிமாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு
அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்தனை ஏறெடுப்போம் |
#12
|
|||
|
|||
மிக்க வருத்தமான செய்தி, துக்கத்தை பகிர்ந்துக்கொள்ள முடியாவிட்டாலும், அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்
|
#13
|
|||
|
|||
நான் செய்யவிருந்த பணியை ராம்வா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.
உண்மை உழைப்பு உயர்வு என்பது முற்றிலும் நம்பியார் அவர்களுக்கு பொருந்தும். எந்த விதமான வதந்ததிகள் கிசு கிசுக்களிலும் சிக்காமல் தனது இறுதி நாள் வரை வாழ்ந்தார். யாரிடமும் கடிந்து பேசமாட்டார், திரைப்படத்தை தவிர குரலைக் கூட உயர்த்திப் பேச மாட்டார். திரையுலகில் மிக மிக அபூர்வமான மனிதர்களில் ஒருவர் மறைந்த நம்பியார் அவர்கள். ஒரு ஆங்கிலப் படத்திலும் சிறிய வேடமொன்றில் நடித்துள்ளார். திகம்பர சாமியார் என்ற படத்தில் 11 வேடங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு. அமரர் எம் ஜி ஆர் அவர்களுடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமே தனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார் நம்பியார். மந்திரி குமாரியில் அவர் ஏற்றிருந்த ராஜ குரு வேடம், உலகம் சுற்றும் வாலிபனில் போலி புத்த பிக்கு வேடம் போன்றவை காவியங்கள்... அவர் ஒரு மேதை...இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்.... அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.. |
#14
|
|||
|
|||
ஆழ்மணம் கண்ணீரால் நிரம்பிவிட்டது முதன்முறையாக இந்த செய்தியை நான் தெரிந்து கொண்டது லோகத்தில்தான் செய்திக்கு நன்றி
எம் என் நம்பியாரின் தீவிர ரசிகனான நான் அவரது நெஞ்சம் மறப்பதில்லை படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்து ரசித்திருக்கின்றேன் அவரது பிரிவு சினிமாத்துறையின் களங்கமற்ற நல்லுள்ளம் ஒன்றின் மறைவு என்தில்'சந்தேகமில்லை இனியும் ஒரு நடிகர் இவர்பொல் இல்லவே இல்லை அவரது ஆத்மா சாந்தியடைய மணப்பூர்வமாக இறைவனை பிராத்திக்கின்றேன் |
#15
|
|||
|
|||
தாங்க முடியவில்லை. முதலில் சுஜாதா, பிறகு குன்னக்குடி, பூர்ணம். இப்போது நம்பியார். திரையுலகில் எனக்கு பிடித்தவர்கள் எல்லாம் மறைந்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் இவரை மிமிக்ரி பண்ணுவார்கள். தூறல் நின்னு போச்சு படத்தில் அற்புதமாக நடித்தார்.
|
#16
|
|||
|
|||
மிகவும் வருந்த தக்க செய்தி, நல்ல நடிகர், நல்ல பண்புள்ள மணிதர், பக்தர் என பல நல்ல குணங்களுக்கு சொந்தகாரர். ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீர் அஞ்சலிகள்.
அன்புடன் ராஜண் டை |
#17
|
|||
|
|||
வருத்தமான செய்தி. ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம்
|
#18
|
|||
|
|||
கார்த்திகை மாதம் நம்பியாருக்கு மிகவும் பிடித்த மாதம்...
ஆழ்ந்த இரங்கல்கள் |
#19
|
|||
|
|||
இந்த செய்தியை நேற்று திடிரென்று தினமலர் வெப்சைட் ஓபன் செய்தவுடன் கண்டேன். கண்ணீர் மல்க நின்றேன். மாபெரும் உன்னதமான மனிதர். அசோ சொன்னமாதிரியே இந்த மாதத்தில் இறந்தது நெஞ்சை நெகிழச்செய்கிறது. இது ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவாக புரியும். இப்போதுதான் சபரிமலை நடை திறந்து மண்டல பூசை ஆரம்பமாகி உள்ளது.
அதே நேரத்தில் இவரின் பிரிவு செய்தி. கன்டிப்பாக சபரிமலை வாசன் ஐயப்பன் இவரை ஆட்கொண்டுவிட்டான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரைபோல பக்திமான் பலரிருந்தாலும் திரை உலகில் இவர் ஒரு சான்று. இவரை குருசாமியாக ஏற்று ஐயப்பனை திரிசனம் செய்தால் ஐயனின் அருள் கன்டிப்பாக கிட்டிவிடும். ரஜினிகாந்தையே ஒரு முறை சரியாக விரத முறையை செய்யவில்லை என்று தன் குழுவில் இருந்து நீக்கியவர். அவ்வளவு நேரான விரத முறையை கடைபிடிப்பவர் எம் என் நம்பியார். அதனாலேயே ஐயப்பன் அவரை இந்த மாதத்தில் அழைத்து சொர்க்கத்தில் இடம் கொடுத்து அவரோட மலரடியில் சேர்த்துக்கொண்டார். அனைவரும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தித்தாலும் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். ஏன் என்றால் அவர் அடைந்திருப்பது ஐயப்பனின் மலரடி. மிகவும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார். அன்புடன் சூர புலி |
#20
|
|||
|
|||
கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறேன்.
பழைய படங்களை அதிகம் விருபிப் பார்க்கின்ற முறையிலும், சினிமா பிரபலங்களின் (உண்மையான) அந்தரங்கங்களை சற்று தெரிந்து வைத்திருப்பதாலும், ஒரு மாமனிதர், சிறந்த நடிகரை இழந்தது பெரும் இழப்புதான். ஏழு தலைமுறை நாயகர்களுடனும் நடித்தவர், மேடை தேடாத, புகழ் விரும்பாத மனம், எந்த தீய பழக்கங்களும் இல்லாத ஒழுக்கம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி. திரை உலக வாரிசுகள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இவர் அப்போதிருந்தே பிஸியான நடிகராக இருந்தும், பணம் அதிகம் சம்பாரித்தவராக இருந்தாலும், எந்த தவறான பெண்பழக்கம் இல்லாமல், சரியாக குடுபத்தை கவனித்து, பிள்ளைகளை சமூகத்தில் எல்லாரும் மதிக்கும் படி வளர்த்தவர். அவர் இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்பு. அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள ஐய்யப்பனுக்கு மனு அளிக்கிறேன். நன்றி |
|
|
|