<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
இந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல், பல செய்தித் தளங்களில் சென்று இது உண்மையாக என்று உறுதி செய்த பின்பே இங்கே பதிக்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை. இலக்கிய உலகில் ஒரு சகாப்தமே முடிந்தது போல உள்ளது.
எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள் தான் எனக்கு முதன் முதலில் தமிழ்க் கதைகளை படிக்க ஆர்வத்தை ஊட்டியவை, தமிழ் இலக்கியம், தமிழில் விஞ்ஞானம் என்று அனைத்தையும் பாமரனுக்கு புரியும்படி பிட்டு பிட்டு வைத்தவர். அவர் தொடாத துறைகளே கிடையாது எனலாம். தனிக்கென ஒரு தனிப் பாணியை உறுவாக்கியவர். இன்றைய எழுத்தாளர்கள் பலர் அவர் பாணியைக் காப்பி அடித்து உயந்தவர்களே. எனது மலரும் நினைவுகளில், பல இடங்களில் சுஜாதாவே ஆழ்ந்திருந்தார். கதை எழுத தீம் கிடைக்காமல், அவரது புத்தகங்களை தலைக்கு வைத்து படுத்துக் கொண்ட நாட்கள் உண்டு. அவரது பெயர் கொடுத்த உந்துதல்களில், சுஜாதா தாசன் என்ற பெயரில் எழுதிய கதை வெற்றி பெற்ற போது அவரே வந்து ஆசீர்வதித்தது போல் இருந்தது. இன்று அந்த ஞாபகங்களுடனேயே வாழ்ந்து வருகிறேம். தனது எழுத்தின் கவர்ச்சியால் இலக்கியத்துறையை மட்டுமல்லாது, தமிழ் திறையுலகையும் ஈர்த்தவர், இன்று யமதூதனையும் தன் வசம் இழுத்துள்ளான். தமிழ் இலக்கியத்தில் புதுமைக்கு வித்திட்ட புயலுக்கு என் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-02-08 at 11:34 AM. |
#32
|
||||
|
||||
எழுத்துலகின் சித்தர் சுஜாதா அவர்களின் மறைவு தமிழ் பேசும் அனைவருக்கும் சொல்லொண்ணா துயரம்தான் என்பதில் சந்தேகமில்லை...
சுஜாதாவின் கதைகளை தேடித்தேடி படித்திருக்கிறேன், அவரின் " கடவுள் இருக்கிறாரா ? "என்ற புத்தகத்தை அசோவின் உதவியால் தமிழ்மன்றத்திலிருந்து பதிவிறக்கி படித்தபோது பிரமிப்பாக இருந்தது .என்ன ஒரு எழுத்து நடை !! இவர் எழுதிய புத்தகத்தை எடுத்தால் அதனை ஒரே மூச்சில் படித்து முடிக்காமல் வைப்பதில்லை, அந்தளவுக்கு இவரின் எழுத்தாற்றல் என்னையும் நம் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#33
|
|||
|
|||
உண்மையில் ஒரு நல்ல படைப்பாளியை இழந்து விட்டது தமிழுலகம்.
|
#34
|
|||
|
|||
அவரின் அறிவியல் கற்பனை நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழறிவியலுக்கு மிகவும் பாடுபட்டவர். அவரின் மறைவு மனதிற்கு துன்பத்தை தருகிறது. என்ன செய்வது மரணத்தை வென்றவர் யாருமில்லையே. ஆனாலும் அவரின் படைப்புகள் மூலம் இன்னும் பலதலைமுறை நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
|
#35
|
||||
|
||||
தலைமை நிர்வாகி அவர்களே...
உங்கள் கீழ்கண்ட வரி சுஜாதா அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது என்னை மிகவும் கவர்ந்தது... Quote:
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 28-02-08 at 12:22 PM. |
#36
|
|||
|
|||
தமிழ் பத்திரிக்கை உலகிற்கு மிக பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.
|
#37
|
|||
|
|||
சுஜாதாவின் மரணம் தமிழ் படைப்புலகுக்கு ஒரு கடுமையான இழப்பு..
சகலகலா வல்லவனாய் - எழுத்துலகின் ஒரு அஷ்டாவதனியாய் வலம் வந்த சுஜாதாவின் மரணம் இலக்கிய உலகிற்கு ஜீரணிக்க முடியாத செய்தி... |
#38
|
|||
|
|||
ஜீரணித்துதான் ஆகவேண்டும்
காலை எழுந்து பத்திரிக்கை பார்த்தவுடன் எனது கண்ணில் பட்ட முதல் செய்தி,
அடுத்து ஏதும் படிக்கமுடியாமல், மனம் கனத்து சிறிது நேரம் கண்களை மூடி அவர் எழுதிய கதைகள, கட்டுரைகளை அசைபோட்டவாறு., அப்புறம் அவர் பாணியிலேயே உண்மைகளை எப்போதும் ஜீரணித்துதான் ஆகவேண்டும் எனஒருவாறு மனம் தேற்றினாலும், இன்றைய பொழுது மனம் கனமாகவே இருக்கும்தானே! |
#39
|
|||
|
|||
செய்தியை பத்திரிகையில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விட்டது. தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாத்தாவுக்கு இவ்வளவு சீக்கிரமா ஆயுள் முடிய வேண்டும். அவரின் மனித உடலுக்கு தான் முடிவு உண்டு, அவரது எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.
|
#40
|
||||
|
||||
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பயணக் கட்டுறைகளை விரும்பி படிப்பேன், சுஜாதாவின் மறணம் அதிர்ச்சி அளிக்க கூடியது.
|
Tags |
சுஜாதா , மரணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|