Quote:
Originally Posted by asho
சேர்ந்த 2 நாட்களுக்குள் பதில் அனுப்ப கால அவகாசம் தரப்படுகிறது, அதற்கு பின் வரும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இன்னும் 2 நாட்களுக்குப்பின் (16-02-22) வரும் எந்த பதில்களும், எந்த காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்படாது.
17-02-22 க்கு பின், இதுவரை சேர்ந்து நுழைவு தேர்வு கேள்விக்கான பதில் அனுப்பாதவர்கள் அனைவர் கணக்கும் முடக்கப்படும்.
|
இதுவரை பதில் அனுப்பியவர்கள் அனைவருக்கும் குறித்த காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது, பதில் அனுப்பாதவர்கள் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது.
Quote:
Originally Posted by asho
5) சேரும் போதே இரண்டு மூன்று கணக்கு துவங்கியவர்கள் அனைவரும், தனிமடலில் அல்லது இமெயிலில் தெரிவித்து ஒரே ஒரு கணக்கை காப்பாற்றி கொள்ள இன்னும் 7 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. 21-02-22க்கு பின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்திருக்கும் நபர்களின் அனைத்து கணக்குகளும் எந்த முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்ப்டும். இது அம்மாதிரி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிய போட்டு வாங்கும் வழிமுறையல்ல, எங்கள் மென்பொருள் தேடி தந்திருக்கும் பட்டியல் படி 42 கணக்குகள் இம்மாதிரி உள்ளது. அதில் சிலர் 2 கணக்குகளுக்கு மேல் துவங்கியுள்ளனர். எப்படியிருந்தாலும் (முன்னாள் உறுப்பினரை நிர்வாகமே திரும்ப புது உறுப்பினராக வரச்சொல்லியிருந்தாலும்), தகவல் தனிமடலில் தந்து கணக்கை காப்பாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் இரட்டை கணக்கு இங்கே எப்போதும் கதைகளை திருடுபவர்களாலே அதிகம் கையாளப்பட்டு வருகிறது என்பதாலே இந்த கறார் நடவடிக்கை.
|
இரட்டை கணக்கு தொடங்கியவர்களில் ஒரிருவரை தவிர மற்றவர் யாரும் தனிமடலில்/இமெயிலில் தெரிவித்து கணக்கை காப்பாற்றிக்கொள்ளவில்லை. ரெம்ப மிதப்பாக இருந்தவர்கள் இரட்டை கணக்கு, இருவர் மூன்று கணக்கு, ஒரே ஒருவர் நான்கு கணக்கு தொடங்கியிருந்தார். அனைத்தும் முடக்கப்பட்டது.
Quote:
Originally Posted by asho
இங்கே பங்களிப்பு முறையில் சேர்வதாக சொல்லி, பங்களிக்காமலே இருந்தால் கணக்கு முடக்கப்படலாம், எனவே இன்னும் 13 நாட்களுக்குள் தலைவாசலில் இருக்கும் அனைவரும் குறைந்தபட்ச பதிப்புகள் 10 பதிப்புகளாவது செய்து விட வேண்டும். 28ந்தேதிக்கு பின் தலைவாசலில் 10 பதிவுகள் செய்யாதவர் கணக்கு அனைத்தும் இயங்காநிலைக்கு சென்று விடும்
|
தளத்திலே பங்களிப்பு உறுப்பினராக சேர்ந்து பங்களிக்காமல் வெறுமனே கதைகள் மட்டும் தினமும் படித்து சென்ற 15க்கு மேற்பட்டவரகள் தடை செய்யப்பட்டனர். ஒன்றிரண்டு பதிவுகள் பதிந்து காலத்தை கழித்தவர்கள், அனைவர் கணக்கும் முடக்கப்பட்டது. திரும்ப பங்களிப்பதாக உறுதி சொன்னாலும் கணக்கு திரும்ப தரப்படாது, முதலில் கொடுத்த 30 நாளில் 10 பதிவுகள் கூட பதிக்காதவர்கள் பின்னர் எப்படி பதிப்பார்கள். இத்தனைக்கும் 15 நாள் இருக்கையிலே விரைந்து பதிக்க சொல்லி தனிமடலும் தந்தாயிற்று. அதன் பின்னர் சோம்பியிருந்தால் நாம் செய்வது.
Quote:
Originally Posted by asho
3)புது உறுப்பினராக சேர்ந்து ஒன்றிரண்டு பதிவுகள் செய்து வந்தவர்கள் இன்னும் 30 தினங்களுக்குள் தினம் ஒரு பதிவு இனியாவது செய்து தமிழ்வாசலுக்கு சென்று விட வேண்டும். அடுத்த மாதம் மார்ச் 14க்கு பின் தலைவாசலில் எந்த உறுப்பினரும் இருக்க கூடாது என்றே நினைக்கிறோம். மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்கு போடாதவர்களுக்கு இயங்கா நிலைக்கு கணக்கு சென்றால் கூட இனி தமிழ்வாசலில் இருந்தே அனுமதி தர இருக்கிறோம். அப்படி மார்ச் 14ந்தேதிக்கு பின் தலைவாசலிலே தங்கியிருக்கும் உறுப்பினர்கள் கணக்கு இயங்கா நிலை செய்யப்படும்.
|
இப்போதும் தலைவாசலில் இருக்கும் அன்பர்கள் 30 பதிவுகள் அல்லது ஒரிரு கதைகள் என்றால் 20 பதிப்புகள் ஓரிரு கதைகளுக்கு மேல் என்றால் 10 பதிப்புகள் பதிந்து தமிழ்வாசலுக்கு சென்று விடுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் கணக்கும் மார்ச் 14க்கு பிறகு முடக்கப்படலாம்.
தலைவாசலில் இருந்து தமிழ்வாசல் வந்த பின் உறுப்பினர்கள் அவரவர் இஸ்டம் போல மெதுவாகவோ வேகமாகவோ பங்களித்து கொள்ளலாம். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
இதெல்லாம் எதற்கு என்றால் தளம் சுறுசுறுப்புடன், கதை பதிப்பவரும் அதனை படிப்பவரும் உற்சாகத்துடன் இயங்கவே. இல்லாவிட்டால் தொற்று நோய்/சொந்த வேலைகள்/ சொந்த பிரச்சினைகள்/ நாட்டு நடப்புகளை சொல்லி அவர்கள் ஒன்றும் பதிக்காமல் இருப்பவர்களையும் தளத்தையும் உற்சாகமிழக்க செய்துவிடுவார்கள்.
நூறு சோம்பேறிகளா அல்லது பத்து சுறுசுறுப்பானவர்கள் தேவையா என்றால் பத்து சுறுசுறுப்பாளர்களே நமக்கு வேண்டும். இந்த சோம்பேறிகளால் பெரிய பிரச்சினை என்னவென்றால் அவர்கள் ஒருவேலையும் செய்யாமல் பலனடைந்து, சுறுசுறுப்பாக வேலை செய்பவர்களையும் சோம்பலாக்கி விடுவார்கள்.
இதுவரை தளத்தில் சில சுறுசுறுப்பான நண்பர்களை உற்சாகப்படுத்த முன் கூட்டியே அனுமதி கேட்காமலே கூட தரப்பட்டது. இனி அவரவர் விதிமுறைகள் திரிகளை பின்பற்றி அனுமதி கேட்டு எங்கே பதிக்க வேண்டுமோ அங்கே முறையாக அனுமதி மட்டும் கேட்டு பதிந்து பெற்றுக்கொள்ள வேண்டியது தான். ஏனென்றால் விதிவிலக்காக செய்யும் சில சலுகைகளை சிலர் வேதமாக நினைத்து தனிமடலில் அனுமதி கேட்டு விடுகின்றனர்.
அனுமதிகள் தனிமடலில் கேட்டால் பதில் தரப்படாது, பின்னர் அவர்கள் அனுமதி கேட்டு தளத்திலே உரிய இடத்திலேபதிக்கும் கோரிக்கைகளும் மூன்று நாட்களுக்கு கவனிக்கப்படாது. விதிவிலக்காக ஒரே ஒரு பிரிவினர்(முன்னாள் உறுப்பினர்கள், தகுதி இறக்கம் செய்யப்பட்டவர்கள்) தவிர சென்ற வருடம் சேர்ந்தவர்கள் தவிர்த்து, அதுவும் மார்ச் 14, 2022 வரை மட்டுமே தனிமடலில் முன்னரே சொன்னபடி அனுமதி கேட்டுக்கொள்ளலாம்.