<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தங்கமான நண்பர் தங்கர்.சி-யின் 3000 பதிப்புகள்: வாழ்த்துவோம்!
தங்கமான நண்பர் தங்கர்.சி.-யின் 3000 பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள்!!! தங்கர்.சி. அவர்கள் காமலோகத்தில் 2007-ஆம் ஆண்டு இணைந்தவர். தொடர்ந்து... பல படைப்புகள் மூலம் அடுத்தடுத்த வாசலை அடைந்ததோடு, லோகத்தில் தன்னை யார் என்று அடையாளம் காட்டிய சிறந்த எழுத்தாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த தமிழ் ஆர்வலர். சுய விபரம் < thangar.c > படைப்பாளி அறிமுக திரி ஆரம்பத்தில்... இவரது பயனாளர் பெயரான 'thangasi' என்பதை பலரும் தங்கசி, தங்கச்சி என ஒவ்வொரு விதமாக அழைத்து வந்தார்கள். நான் இவரை எப்படி அழைப்பது என குழம்பி.. பின் பொதுவாக 'தங்கமே' என்று தான் அழைத்து வந்தேன். அதே தரமான 'தங்கமாக'' இன்று வரை தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார் என்பது பெருமையான விஷயம். பழகுவதற்கும் தங்கமான மனிதர் 'தங்கர்' என்பது அவருடன் பழகும் அனைவருக்குமே தெரியும். அதனால் தான் 'தங்கமான நண்பர் தங்கர்' என்று இந்த திரிக்கு தலைப்பு வைத்திருக்கிறேன். எனது இனிய நண்பரான தங்கர்.சி., நான், மற்றும் சில 2007-ஆம் ஆண்டு இணைந்த நண்பர்கள் எல்லாம் ஒரு குழுவாகவே அந்த நேரத்தில் இந்த தளத்தை சுற்றித் திரிந்தது மறக்க முடியாதவை. படைப்புகள், பதிப்புகள், நி.சவால்கள் என தொடர்ந்து ஒன்றாய் பங்களித்து வந்த நாட்களும் எங்களுக்கு இனிமையானவையே. என்னை ஆரம்பத்தில் இருந்து உற்சாகப்படுத்தியவர்களில் தங்கரும் குறிப்பிடத்தக்கவர். அதற்கு இந்த திரி மூலம் இந்நேரத்தில் எனது நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன். தங்கர்.சி. அவர்கள் காமக் கதைகள், வா.சவால் கதைகள், நி.சவால் தொடர்ச்சிகள், உல்டா பாடல்கள் என நிறைய பங்களிப்புகளை தருவதோடு, மற்றவர்கள் படைப்புகளுக்கும் பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்து வருபவர். நிர்வாக உறுப்பினராக நம் தளத்தில் சில காலம் செவ்வனே பணி ஆற்றியவர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மீது அவர் கொண்டிருக்கும் பற்று, காதல் அவரது படைப்புகளின் மூலம் நாம் அறியலாம். இவரது எழுத்திற்கும், தமிழுக்கும் என்றே இங்கே பல வாசக ரசிகர்கள் உண்டு என்பதையும் நான் தனியே சொல்ல வேண்டியதில்லை. இவரது கதைகள் என்றும் மனதில் நிற்பவை! இடையில்.. சொந்த பணியின் காரணமாக தளத்திற்கு வர இயலாமல் போய் விட்டாலும் இப்போது மீண்டும் அவ்வப்போது தளம் வந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தங்கர்.சி. அவர்கள் தற்போது பதித்திருக்கும் 3000 பதிப்புகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மேலும் பல சிறந்த படைப்புகளையும், பதிப்புகளையும் தருமாறும் அவரை கேட்டுக் கொள்கிறேன்.
__________________
Last edited by பச்சி; 11-06-11 at 09:14 AM. |
#2
|
|||
|
|||
தங்கருக்கு வாழ்து திரி ஆரம்பித்த பச்சிக்கு நன்றிகள். நண்பர் தங்கர் பல நாட்களாக தளத்துக்கு வாராதது வருத்தமாக இருந்தாலும் அவர் மீண்டும் வந்தது மிகவும் மகிழ்சியாக உள்ளது. காபிக் கடையில் அவரின் பங்களிப்பு மறக்க முடியாதது. அவரின் கதைகளுக்கு நான் தீவிர வாசகன். இன்னும் பல கதைகளை எழுதி நம்மை எல்லாம் மகிழ்விக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளுகிறேன்.
|
#3
|
|||
|
|||
என்னுடைய முதல்கதைக்கு முதல் பின்னூட்டமிட்டு என்னை தொடர்ந்து பயணிக்க வைத்த அற்புதமான படைப்பாளி. இவரின் அணுக்கி கதை என்னை வெகுவாக கட்டிப்போட்டு மனதுக்கு நெருக்கமான கதைகளில் முத்தான கதையாக சம்மணமிட்டு இன்றுவரைக்கும் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது. அந்தக்கதையை அவர் தொடரும் நாளுக்காக ஆர்வமாக காத்திருக்கும் அன்பு நெஞ்சங்களில் நானும் ஒருவன்.
தங்கரின் தமிழ் மற்றும் சொல்லாட்சி, பக்குவமான பின்னூட்டங்கள் எல்லாம் எப்போதும் சுகமான வாசிப்புக்கு கியாரண்டி கொடுப்பவை. அவர் மீண்டும் லோகத்தில் வலம் வருவதை பார்க்க சந்தோஷமாகவும், அந்த நேரத்தில் என்னால் வர முடியாமல் இருப்பதை நினைத்து வருத்தமாகவும், இன்றைக்கு எட்டிப்பார்த்த நேரத்தில் அவரின் வாழ்த்து திரியில் கருத்து பதிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமையும் கொள்கிறேன். இன்னும் பல கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் தங்கர்ஜி. அணுக்கியை கண்டுக்கோங்க ப்ளீஸ்.. திரி ஆரம்பித்த பச்சிக்கு நன்றிகள் பல. |
#4
|
|||
|
|||
லோகத்தில் மச்சான் இணைந்தபோது தங்கர் சி அவர்கள் வனவாசம் சென்றிருந்தார். அதனால் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவ்வளவாக எனக்கு கிட்டவில்லை. ஆனாலும் அவரின் கதைகள் சிலவற்றையும் பின்னூட்டங்கள் சிலவற்றையும் கண்டு மிகவும் வியந்திருக்கிறேன். நிர்வாக உறுப்பினராக பணியாற்றியதை குறித்தும் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் அவதாரை பார்த்து ரொம்பவே அதிசயத்திருக்கிறேன். ( நம்ம வாத்தியாரை விட இம்புட்டு வயதானவராக இருக்காரே என...! )
மச்சான் நடத்திய கிளுகிளு சவால் போட்டியில் பழம்பெரும் படைப்பாளிகளையெல்லாம் மீண்டும் லோகத்தில் கதை எழுத வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த வகையில் தங்கர் சி அவர்களையும் தொடர்பு கொள்ள நினைத்தேன். ஆனால் அவரோ வனவாசத்தில் இருந்தபடியால் மச்சானால் அவரை எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தநிலையில்தான் சமீபத்தில் ஒருநாள் நள்ளிரவு திடீரென மச்சானின் கண்களில் அவர் தென்பட்டார். அதனை பார்த்து மிகவும் சந்தோஷமானேன். உடனேயே அவரை அன்போடு வரவேற்று தனிமடலும் அனுப்பினேன். அதற்கு அவரும் பதில் அனுப்பி இருந்தார். மீண்டும் லோகத்தில் அவரின் படைப்புகளையும், பின்னூட்டங்களையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்கர் ஜி.....! உங்களுக்கு பின் லோகத்தில் இணைந்த பிஸ்கோத்து மச்சானெல்லாம் 3000 கடந்து சென்று விட்ட நிலையில் தாங்கள் தற்போதுதான் 3000 த்தை எட்டி இருக்கிறீர்கள்...! இட்ஸ் டூ லேட்....! இருந்தாலும் பழைய வேகத்துடன் மீண்டும் தாங்கள் லோகத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என மச்சான் வாழ்த்துகிறேன். தங்கமான நண்பருக்காக தங்கமான நண்பர் பச்சியே திரியை தொடங்கியமைக்கு மச்சானின் பாராட்டுக்கள். |
#5
|
|||
|
|||
அன்பு நண்பர் தங்கர்..அவரின் பல கதைகளை,,அவரின் தமிழ் புலமையை எண்ணி பலமுறை வியப்படைந்து,,அவரின் எழுத்திலே உருவான சில கதைகளை படிக்கும் பாக்கியமும் பெற்றவன்.. 3000 பதிவிற்கு பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மேலும், பல சிகரங்களை அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. |
#6
|
|||
|
|||
'அணுக்கி-4' கதையைத் தற்செயலாகப் படித்தபின் நண்பர் தங்கர்.சி அவர்களின் படைப்புகளைத் தேடிதேடிப் படித்தேன். இப்போதுதான் அவரை அடிக்கடி லோகத்தில் காணமுடிகிறது. இனி அவர் படைப்புப்பணி தொடரும் என்று நம்புகிறேன். மறுபடியும் என் வேண்டுகோள்: எட்டாம் பாகத்தைத் 'தொடரும்' போட்டு நிறுத்தியுள்ள 'அணுக்கி'யின் பிற பாகங்களை விரைவில் பதியுங்கள் நண்பரே.
|
#7
|
||||
|
||||
3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. 3000 வது பதிவு எனது கதைக்கு விழுந்ததில் பெருமிதமும், நன்றியும்.
லோகத்தில் 3 ஆன்டுகளுக்கு முன்னர் மீண்டும் எழுத ஆரம்பித்தபோது தன்னுடைய தொடர் பின்னூட்டங்களால் ஆதரவளித்து "அட நம்மளையும் இந்த லோகம் நம்புதுப்பா" என தொடர்ந்து எழுதவைத்தவர். படைப்புகளில் நேர்த்தி, பின்னூட்டங்களில் தெளிவு, நிறைகளை பளிச்சென சொல்லும் பாணி என அயராது தொடர் பின்னூட்டங்களினால் பல புதியவர்களையும், படைப்பாளி என நம்பிக் கொண்டிருப்பவர்களையும் தொடர்ந்து எழுதவைத்த படிப்பாளி நண்பர் தங்கர். மைனஸ்: கதையின் குறைகளை மென்மையாக சொல்வது அல்லது சொல்லாமல் விடுவது இன்னமும் ஒரு குறையே. இவர் உருவாக்கிய சாமிநாதன் கதாபாத்திரம் கூல் அனுவினால் படச் சிரிப்புகள் பகுதியில் குதூகலமாய் கொண்டாடப்பட்ட பழைய லோக நினைவுகள் என்றும் உற்சாகம் அளிப்பவை. படைப்புகளும், பின்னூட்டங்களும் தொடரட்டும் நண்பரே. (முதிர்கன்னி நிறைய சொல்ல விரும்புவதால் நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் ) திரி தொடங்கிய நண்பர் பச்சிக்கும் நன்றி. |
#8
|
||||
|
||||
தங்கர்.சி சிறந்த படைப்பாளி கிராமத்து சூழல் மற்றும் ஏழைகளின் கோனத்திலிருந்தெல்லாம் பல கதைகள் கொடுத்து அசத்தி வந்தவர். எனக்கு இவரை படைப்பாளி என்ற பெருமையை விட சிறந்த பின்னூட்டவாதி என்ற விசயம் ரொம்ப பிடிக்கும். ஆம் இவர் வந்து போன காலத்தில் படித்த கதைகளுக்கு இவரின் பின்னூட்டம் சில வரிகளே இருந்தாலும் அதில் கொஞ்சம் ஆழமாக டச் பன்னுவார் படைப்பை தான்டி படைப்பாளியின் மனநிலை கூட பின்னூட்டத்தில் எழுதுவார். இடையில் சில நாட்கள் லீவிலிருந்ததால் லேட்டாக 3000 இல்லாவிட்டால் இவர் 10000 எட்டி இருப்பார்.
அடிகடி வர வேன்டும் என்பது என் அவா
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#9
|
|||
|
|||
மதிப்புக்குரிய நண்பர் தங்கர்.சி. அவர்களின் 3000 பதிப்புக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நண்பர் மச்சான் சொன்னது போல நான் லோகத்தில் இணைந்த போது சொந்த பணியின் காரணமாக தளத்திற்கு வராமல் இருந்தார். இருந்தாலும் நண்பர்கள் மூலமாக இவரை பற்றி கேள்வி பட்டிருந்தேன். இவருடைய பின்னூட்டத்தை என் கதையில் முதல் முதலாக பார்த்த போது என் வியப்பிற்கும் சந்தோஷத்திற்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. Quote:
3,000 பதிப்புக்கள் 30,000 பதிப்புகளாக ஆகட்டும், அதுவும் மிகவும் விரைவாக! |
#10
|
|||
|
|||
தங்கர்.சி. அவர்களின் 3000 பதிப்புக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
Tags |
தங்கர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|