<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
செல்வன்செல்வி
செல்வன்செல்வி என்பது கணவன்மனைவி இரண்டு பேர் ஓரே உறுப்பினர் பெயரில் இருக்கிறார்கள் என்று நினைத்தேனே, அப்படி இல்லையா?
இணையத்தில் கதை எழுதுவதற்கும் பத்திரிக்கைகளில் கதை எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமுண்டு. பத்திரிக்கைகளுக்கு வரும் மிக சில வாசகர் கடிதங்களை தவிர நம்மை சுற்றி இருக்கும் வட்டம் தான் நமக்கு நம் படைப்பை பற்றி விமர்சனம் கொடுக்கும். ஆனால் இணையத்தில் முக்கியமாக நம்மை போன்ற கூட்டு குழுக்களில் பதிக்கும் போது நமது படைப்பிற்கான விமர்சனம் உடனே சூட்டோடு சூடாக கிடைக்கும். அதாவது எழுதி முடித்த ஐந்தாவது நிமிடம் நமக்கு விமர்சனங்கள் வர தொடங்கி விடும். இணையத்தின் இந்த பண்புக்கு உறுதுணையாக இருப்பவர்கள் செல்வன்செல்வி போன்றவர்களே. என்னுடைய கதைகளை எழுதி பதித்தவுடன் வரும் முதலிரண்டு பின்னூட்டங்களிலே எனக்கு கதை சுமார் ரகமா அல்லது பரவாயில்லையா என தெளிவு கிடைத்து விடும். 1967 கதையின் பதினொரு பாகங்களை முன்னரே எழுதி நான் 11 நாட்களுக்கு ஒவ்வொரு பாகமாய் பதித்தேன். அப்போதெல்லாம் ஓடோடி வந்து கருத்து சொல்பவர்களில் செல்வன்செல்வியும் ஒருவர். அவருடைய கருத்துகள் சுருக்கமாக இருந்தாலும், நம்ம கதையின் குறிப்பிட்ட பாகம் தேறிச்சா இல்லையா என்பதை சட்டென உணர்த்தி விடுவார். இப்படியாக காமலோகத்தில் பதிக்கும் அனைவருக்கும் உற்சாகமூட்டுவதில் முன்னிலையில் இருக்கும் செல்வன்செல்வியை மனமார பாராட்டுகிறேன். "♪♫♪♫♪♫♪♫ நீங்க நல்லா இருக்கணும், லோகம் முன்னேற ♪♫♪♫♪♫♪♫
♪♫♪♫♪♫ இந்த லோகத்தில் உள்ளோர் கதைகள் முன்னேற ♪♫♪♫♪♫♪♫"
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#12
|
||||
|
||||
ஆரம்பகாலத்தில் நான் கதைகளை பதிக்கும்போதே தவறாமல் படித்து கருத்து தெரிவித்தவர் செல்வன்செல்வி. இன்றுவரைக்கும் அது குறையாமல் உடனுக்குடன் கருத்து தெரிவித்து ஆதரவு தரும் நண்பர்களூள் ஒருவர்.
சுருக்கமாக அதேசமயம் தரமான கருத்துகளை பதிப்பதில் வல்லவர். ஒருகட்டத்திற்கு பின்னர் ஆவலோடு அவரின் கருத்துகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அந்தளவுக்கு சிறந்த விமர்சகர். அவரின் விமர்சனத்தை முதலில் படித்துவிட்டு சில கதைகளை படித்த அனுபவமும் உண்டு. 5000 பதிப்புகளை தாண்டிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் விரைவில் 10000 பதிப்புகளை தாண்டியும் தொடர்ந்து உலாவர அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அன்புடன் லலிதாதாசன் |
#13
|
||||
|
||||
நறுக்குத்தெறித்தாற் போல ஓரிரு வரிகளில் தன் விமரிசனத்தை தெரிவிப்பதில் வல்லவர்.....ஆரவாரமின்றி சைலண்டா லோகத்தில் இத்தனை பதிப்புகள் பதித்து விட்டாரே...வாழ்த்துவதா பொறாமைப்படுவதா? பாராட்டுக்கள்...விரைவில் 5இலக்க பதிப்புகள் பதிக்க வாழ்த்துக்கள்...
|
#14
|
||||
|
||||
அன்பின் நண்பர்களுக்கு,
வணக்கம். முதலில் அனைவருக்கும் எனது நன்றிகள். ஒரு கால கட்டத்தில் தேடு பொறி மூலம் நம் தளத்திற்க்கு வந்தடைந்தேன் 06 டிசம்பர் 2002. கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஓடி விட்டது. தளம் தகுதரத்தில் (TSCII) ஆரம்பித்து யுனிக்கு மாறி என பல்வேறு வளர்ச்சிகள். பெரும்பாலும் ஓரிரு வரிகளில் விமர்சனம் அளிக்க காரணம் சூழ்நிலைதான் காரணம். விரிவாக உள்ளீடு செய்ய இயலா சூழல். மற்றபடி கதை படித்தல் என்பது எனக்கு மிகவும் விருப்பமான வேலை. அதனாலேயே சில விமர்சனங்களில் தேவையின்றி மூக்கை நீட்டியிருப்பேன். கதாசிரியரின் கதை கொண்டு செல்லும் போக்கு மாறும போது மட்டும். தளத்தின் மூலம் பல மறக்க இயலா கதாசிரியர்களை நான் கண்டு ஆனந்தப் பட்டது. எடுத்துக்காட்டாக ராதிகா, வாசன், காஞ்சனதாசன், மாயகிருஷ்ணன், போத்தன் ராசா போன்றவர்கள். நிர்வாகத்தில் அசோ. என்னை போலவே உள்ளூர் இரசிகராகவும் பல்வேறு கருத்து ரீதியாக கிட்டதட்ட ஒத்துபோகும் ஓல்வாத்தியார். இன்னமும் ஒளிபடப் பிரிவில் படம் துலக்கி வித்தை காட்டும் (ஆமா பளிச்சுனு பண்ணுவது பேரு துலக்குதல் தானே..? ) ஸ்மார்ட் மேன் போன்ற பற்பல நண்பர்கள். கிட்டதட்ட அனைவரும் தனிச்செய்திகள் மூலம் நட்புறவு கொண்டுள்ளது தெரிகிறது. ஏனோ எனக்கு அது எட்டாக்கனியாகவே சென்று வருகிறது. யாரிடமும் தனிப்பட்டு அறிமுகமும், தொடர்பும் கிடையாது. இருப்பினும் எனக்கு என்று தனியிழை ஆரம்பித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியே. இந்த இழையை ஆரம்பித்த அசோ அவர்களுக்கும் இங்கு பின்னூட்டமிட்டு என்னை எதிர்பாரா ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்த பிற நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இவ்வளவு தூரம் பேசி தளநிர்வாகியவர்களுக்கும் மிக்க நன்றி. சமீப காலமாக நீண்ட விடுப்பில் இருப்பார் போல. அவருக்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன், செல்வன்செல்வி (குறிப்பு : மேலே குறிப்பிட படாத பல நண்பர்கள் உள்ளனர். என் நினைவாற்றல் குறித்து வருந்துகிறேன். மறதி அதிகம்.) |
#15
|
||||
|
||||
Quote:
|
#16
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பா... இது போல இன்னும் பல பதிவுகள் படைத்திட வாழ்த்துக்கள்...
|
#17
|
|||
|
|||
நண்பரே.. தாங்கள் 5000 பதிவு எண்ணிக்கையை கடந்ததற்க்காக மனதார பாராட்டுகிறேன்.
சப்தம் இல்லாமல் ஒரு புரட்சி, அலட்டிக்கொள்ளாமல் அட்டகசமான ஆட்டம் , - தொடரட்டும் தாங்களின் பணி இந்த லோகத்தில். அசோ சார் சொல்லியது போல, தாங்கள் கருத்து இல்லாத திரியே இல்லை என் எண்ணத்தோன்றுகிறது நண்பரே.. தாங்களின் இந்த சாதனை, என்னை போன்றோருக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது என்பதையும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன் தாங்களுக்கு அன்புடன் ஹபிப் |
#18
|
|||
|
|||
இப்பொழுது தான் எனது ஒரு திரிக்கு அவரின் கருத்துக்கு எனது நன்றியினை இப்படி பதிவு செய்துவிட்டு வருகிறேன்.....
"ஒரு வாசகமாக இருந்தாலும் திருவாசகமாகப் போட்டுத் தாக்கிவிட்டீர், நன்றி"... அதுதான் செல்வன்செல்வி... நண்பர் மா.கி சொன்னது போல நம்ம கதை தேறி இருக்கா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்து கொள்ள உதவும் பின்னூட்டங்களில் இவரதும் ஒன்று. சென்ற மாத (ஜூலை'0 சவால் கதையின் இரண்டாம் பாகத்திற்கு பின்னூட்டமிட்டவர் எனது தொடர்ச்சியின் போக்கு தவறு என்பதை இப்படி நயமாகச் சொல்லியிருந்தார்.... அதான் எல்லாமே முடிஞ்சிருச்சே...இனி என்ன இருக்கு? அப்போதே எனக்கும் முடிவு தெரிந்துவிட்டது. நான் அவ்வளவு சிறப்பாக கதையை முன்னெடுத்துச் செல்லவில்லை என்பது. அக்கதையின் இறுதி பாகத்தில் அவர் பெயரையும் வேடிக்கையாகக் குறிப்பிடவே செய்திருந்தேன். ஒரு நல்ல விமர்சகரை சிறப்பித்து திரி துவங்கிய நண்பர் அசோவிற்குப் பாராட்டுக்கள். நண்பர் செல்வன்செல்வி அவர்களே, 5000க்கு வாழ்த்துக்கள்...தொடரட்டும் தங்கள் சேவை... |
#19
|
||||
|
||||
இவர் இருப்பதே பலருக்கு தெரியாது. ஆம் காரனம் இவரிடம் இருக்கும் தன்னடக்கம், கலாய்க்கவே மாட்டார், ஆனால் அனைத்து பகுதியிலும் சென்று அனைவரையும் ஊக்குவித்து பாராட்டியே 5000 எட்டி இருக்கிறார். அதுவும் எனக்கு தெரிந்து இவர் எந்த திரியிலும் ஒரு முரைக்கு மேல் பதிக்க மாட்டார். அப்ப*டி என்றால் பார்த்து கொள்ளுங்க*ள் இவ*ர் அனைத்து திரியிலும் நேராக* ஒரே திசையில் சென்று கொன்டே இருப்பார். சில பகுதியில் நுழைந்தாள் கன்டின்யூசாக இவர் பெயர் லாஸ்ட் போஸ்டில் இடம் பெற்றிருக்கும். இவரை துரத்துவதற்க்குள் வேறு பகுதிக்கு போய் விடுவார்.
ஒரு இடத்தில் கூட முகம் சுழிக்கும் பதிவு செய்ததாக நினைவு இல்லை. மென்மையான அவதார் மூலம் கவர்கிறார். பாராட்டுகள் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளித்து வாருங்கள்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#20
|
|||
|
|||
5000 பதிவுகளா? ஆச்சரியத்தில் மூழ வைத்து விட்டார். நாலு வரி எழுதுமுன் தலை கிறு கிறு என சுற்றுகிறது. பதிவுகள் அதிகம் பதித்து மனதில் ப்திந்த இவருக்கு பாராட்டு அவசியம் உண்டு.
|
|
|
|