<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கிரிக்கெட் திறமையாக விளையாடினார். கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இவரால் இந்தியாவில் ஒரு ஏழைக்காவது உணவு கிடைத்ததா? மதர் தெரேசாவும் இவரும் சரிசமமா? எம்,எஸ்.சுப்புலக்ஷ்மியும் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அதில் பெரும்பகுதியை சமூகசேவை செய்யும் சங்க்கக்களுக்கு வழங்கினார். டெண்டுல்கார் அப்படி ஏதும் செய்தாத எனக்கு தெரியவில்லை. BCCI தேர்வு செய்வும் கிரிக்கட் அணி இந்திய அணி என்று அனைவரும் நம்புகின்றனர். உண்மை அதுவல்ல. BCCI தனக்கு வரும் கோடிக்கணக்கான வருமானத்தில் ஒரு ரூபா கூட வரி கட்டுவதில்லை. நாம்தான் முட்டாள்தனமாய் இந்த விளையாட்டை பார்த்து நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறோம்.
|
#12
|
|||
|
|||
விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பல சாதனைகள் புரிந்தவர் இவருக்கி கன்டிப்பா பாரத ரத்னா பட்டம் குடுக்கனும் நல்ல செய்தி
|
#13
|
|||
|
|||
Quote:
சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு மாத வாடகை மொத்தமாக பத்தாயிரம் கூட கிடையாது. ஏனென்றால் பொதுமக்களின் கேளிக்கைக்கானதாம்.. எனவே வரிவிலக்கு வேண்டுமாம். நம்மால் ஒரு பத்துக்குப் பத்து ரூமையாவது சேப்பாக்கத்தில் சில ஆயிரம் மாத வாடகையில் பெற முடியுமா..? இங்கிலாந்தில் தமிழரின் விளையாட்டான ஒலிம்பிக்கில் பங்குபெற்ற கபடி விளையாட்டை எந்த ஆங்கிலேயராவது ஆடி நம்மால் பார்க்கக்கூடுமா...? அல்லது ஆங்கிலேயரின் காலனி ஆட்சியில் சிக்காத மற்ற நாடுகளில் கிரிக்கெட்டைத்தான் பார்க்க முடியுமா..? இதுவும் ஒரு விளையாட்டு... இதுவும் ஒரு சாதனைதான் என்று ஒரு வாதத்திற்காக நாம் எடுத்துக்கொண்டாலும் பாரத் ரத்னா விருது என்பது டூ மச்.. அதற்கான தகுதி பெற்றவர்கள் நிறைய இருக்கும்போது வெறும் ஊடகங்களால் உயர்த்திவிடப்பட்ட நபர் பெறுவது தவறான முன்னுதாரணமாகும் என்பது எனது கருத்து.. லோக நண்பர்களே... இதில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் நான் என் கருத்தைத்தான் கூறியுள்ளேனே தவிர.. கண்டிப்பாக எவரையும் மனம் புண்படுத்த அல்ல.. |
#14
|
|||
|
|||
லிட்டில் மாஸ்டரின் சாதனையை முறியடிப்பது நிச்சயமாக ஒரு கடினமான வேலை... அவருக்கு மற்றுமொருமுறை ஆல் தி பெஸ்ட்... பாமிலி லைபுக்கு..
|
#15
|
|||
|
|||
சச்சினுக்கு வாழ்த்து திரி ஆரம்பிக்க நானும் நேரம் பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மச்சான் சரியான நேரத்தில் வாழ்த்து திரி ஆரம்பித்தமைக்கு மச்சானுக்கு நன்றி.
சச்சினின் சாதனையின் பின்னால் பல வித விமர்சனங்கள் இருந்தாலும் அதனையெல்லாம் தனது முன்னேற்ற படியாக்கி உலக சாதனைகள் பலவும் தன்னில் கொண்டவர் சச்சின். கிரிக்கெட் போட்டியில் ஒரு சதம் அடித்து விட்டாலே காலை கீழே வைக்காமல் பல நடிகைகளின் பின்னாலே சுற்றிய பல விளையாட்டு வீரர்கள் சில கிரிக்கெட் வீரர்கள் தண்ணீர் குமிழி போல் வந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் மேல் உள்ள ஈடுபாடு காரணம்மாய் கிரிக்கெட்டை தவிர வேறு எந்த சமாச்சாரங்களிலும் தலையை நுழைக்காதவர் சச்சின். கழிந்த 24 வருடங்களில் இவர் மேல் எந்த கிசு கிசுவும் வந்தது கிடையாது என்பதும் ஒரு மகத்தான சாதனையாகும். Quote:
ஊழலை ஒழிக்க ஒரு புது கட்சியை தொடங்கினால் சச்சின் பின்னால் அணி வகுக்க நான் ரெடி. ஆனா ஊழலின் அஸ்திவார கட்சிகளுடன் இவர் சேர்ந்தால் சச்சினின் பெயருக்குத்தான் களங்கம் ஏற்படும். இத்தனை நாள் சம்பாத்தித்த பெயரை சச்சின் காவு கொடுக்க மாட்டார் என நினைக்கிரேன். ஆனால் இவருக்கு கிடைக்கும் பல டைமிங் விருதுகளை பார்க்கும் போது சச்சினின் தூண்டிலில் சிக்கிய மீனாகி விடுவார் போலிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும். |
#16
|
|||
|
|||
மை டியர் ப்ரதர்ஸ் / சிஸ்டர்ஸ்..!!
திரியின் தலைப்பு "வாழ்த்துவோம்" என்பதுதானே அல்லாமல் "தூற்றுவோம்" என்பது அல்ல...!! முதலில் அதனை நன்கு புரிந்து கொள்ளுங்கள். திரியின் தலைப்பை உணர்ந்து இதுவரை வாழ்த்திச்சென்ற நல்ல உள்ளங்களுக்கு மச்சானின் மனமார்ந்த நன்றிகள். மாற்றுக்கருத்துகள் வெளியிட்ட சில நண்பர்களுக்கு புள்ளி விவரங்களுடன் என்னால் விளக்கமாக பதில் தர இயலும். ஆனால் அது இந்த திரியின் நோக்கத்தை மாற்றி விடும் என்பதால் தற்போது பொத்திக்கொண்டு செல்கிறேன். அந்த நண்பர்களுக்கு அடிப்படையிலேயே கிரிக்கெட் விளையாட்டின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதும் அவர்களின் பதிவிலிருந்து தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. சோ.. விளக்கம் கொடுத்தாலும் வேஸ்ட் ஆஃப் டைம்..!! அவர்களில் சிலர், சாதனையாளர் சச்சினை வாழ்த்தா விட்டாலும்கூட தூற்றாமலாவது சென்றிருக்கலாம் என்பதுதான் மச்சானின் தாழ்மையான கருத்தாகும். |
#17
|
||||
|
||||
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் தலை சிறந்த கிரிக்கெட் விளையாட்டுக்காரர்! தேசிய மனம் படைத்தவர்! கிரிக்கெட் போர்டின் பொறுக்கித்தனங்களை மீறி நாட்டுக்காக விளையாடிப் பெரும் புகழும் உச்ச கட்ட ரிகார்டுகளும் புரிந்தவர். அவருடைய திறமை அவரைப் பெரும் பணக்காரர் ஆக்கியது! பாரத ரத்னா வாஙிய முதல் விளையாட்டுக்காரரும் ஆகி விட்டார்! அவரை நாடு வாழ்த்துகிறது! நாமும் வாழ்த்துவோம்! ஓய்வுக்குப் பின்பும் அவர் நல்ல இந்தியராகவே இருப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை! ஜெய் ஹிந்த்!
திரி துவக்கிய மச்சானுக்கு நன்றி! |
#18
|
|||
|
|||
''பாரதரத்னா'' விருது வாங்கிய சச்சினுக்கு என் வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்
திரி தொடங்கிய மச்சானுக்கு பாராட்டுகள் |
#19
|
||||
|
||||
நல்ல ஒரு விளையாட்டு வீரர்.
பலர் பெரும், புகழும் கிடைத்தவுடன் அரசியலிலும் தலையிடுவார்கள். ஆனார் சச்சின் அப்படியொன்றும் இல்லாமல் விளையாட்டே கெதி என்று இருந்து பல விளையாட்டு வீரர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்வித்தவர்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#20
|
||||
|
||||
வாழ்த்துக்கள் சச்சின்.
அரசன். |
|
|
|