<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பிரபல திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் காலமானார்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சி வி ஸ்ரீதர் அவர்கள் 20.10.08 அன்று சென்னையில் காலமானார்
அவருக்கு வயது 75. கடந்த சில வருடங்களாகவே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கைய கழித்து வந்தார். காலஞ்சென்ற ஸ்ரீதர் அவர்களுக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். மாரடைப்பின் காரணமாக அவர் மரணமடைந்தர் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொட்டதெல்லாம் பொன்னாகும் கைகளை உடையவர் ஸ்ரீதர் என்று திரைத்துறையினரால் போற்றப்பட்டவர். புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் வல்லவர் என்று புகழப்பட்ட ஸ்ரீதர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே வெற்றி பெற்றனர் என்பது சிறப்பாகும். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கல்யாண்குமார், ரவிச்சந்திரன், காஞ்சனா, வெண்ணிறாடை நிர்மலா, வெண்ணிறாடை மூர்த்தி, ஸ்ரீகாந்த் என்று அடிக்கிக் கொண்டே போகலாம். ஸ்ரீதர் இயக்கிய படங்களில் எது சிறப்பானது என்று சொல்லுவது மிகவும் கடினம். நவீன தமிழ் சினிமாவை உருவாக்கியவர் ஸ்ரீதர் என்கிற பெருமை அவருக்கு உண்டு. சமூகப் படங்கள், குடும்ப உறவுகளை எடுத்துக் கூறும் படங்கள் நகைச்சுவை படங்கள் சரித்திர படங்கள் என்று எந்த வகையான பரிமாணங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் ஸ்ரீதரின் பங்களிப்பு இருக்கும். ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்களும் படப்பிடிப்பும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தமிழ் திரைப்படங்களில் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார். உதாரணமாக ஒளிப்பதிவாளர் வின்செண்ட், பி என் சுந்தரம், ஒலிப்பதிவாளர் டி எஸ் ரங்கசாமி, இசையமப்பாளர்கள் எம் எஸ் வி, கே வி மகாதேவன், படத்தொகுப்பாளர்கள் கிட்டு. கே எஸ் மோனி, என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவர் இயக்கிய முதல் படமான கல்யாணப் பரிசு அமோக வெற்றி பெற்றாலும் காதலிக்க நேரமில்லை படமே அவருக்கு பெரிய அளவில் பெயரை ஏற்படுத்தி கொடுதது என்றும் கூறப்படுவதுண்டு....அந்தப் படத்தில் நாகேஷ் அவர்களின் பாத்திரப் படைப்பு, அவரது நடை உடை பாவனை, ஓஹோ தயாரிப்பு எனும் அந்தச் சொற்றொடர், பாலையா அவர்களுக்கு கதை சொலலும் படலம், ஆழியாறு அனை, அங்குள்ள அந்த சுற்றுலா விடுதி அனைத்தும் அமரத்துவம் பெற்றவை. முக்கோண காதல் கதைகளை சொல்வதில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தார் ஸ்ரீதர் அவர்கள்...அவரது பல படங்கள் அமெரிக்காவின் கலிஃபோர்ணியா பல்கலைகழகத்திலும், பென்சில்வேனியா மற்றும் ஹாவர்டு பல்கலைகழகத்திலும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. அவரிடைய போலீஸ்காரன் மகள் மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் ஆகியப் படங்களை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன் தன்னை வைத்து இதே போன்ற ஒரு கதையம்சம் கொண்ட படத்தை எடுத்தால் எந்த பணமும் வாங்காமல் நடித்துக் கொடுக்க தயார் என்றும், ஸ்ரீதர் அவர்கள் விரும்பினால் ஹாலிவுட்டில் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஸ்ரீதர் அவர்களை பற்றி கூறிக் கொண்டே போகலாம்..அவ்வளவு புதுமைகள்..நெஞ்சில் ஓர் ஆலையம் ஒரே ஷெட்யூலில் எடுக்கப்பட்ட படம், அதில் ஒரு உள்ளரங்கு ஒரு வெளிப்புறம் அவ்வளவே(செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் எடுக்கப்பட்டது).காஷ்மீரில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்படம் தேனிலிவு. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் சிவந்த மண்.... அவரது சில படங்கள்: கல்யாணப் பரிசி, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை, பொலீஸ்காரன் மகள், ஆலயமணி, வெண்ணிறாடை, சிவந்த மண், மீண்ட சொர்கம், தேனிலவு, விடிவெள்ளி, கலாட்டா கல்யாணம், சாந்தி, சுமைதாங்கி, ஊட்டி வரை உறவு, உரிமைக் குரல், மீனவ நன்பன், அவளுக்கென்று ஓர் மனம், இளமை ஊஞ்சலாடுகிறது, ஒரு ஓடை நதியாகிறது, நினைவெல்லாம் நித்யா..அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களான மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகிய இருவரையும் இயக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்... அவர் குறித்து மேலும் பல செய்திகள் பின்னர். Last edited by muthuveeran; 22-10-08 at 02:47 AM. |
#2
|
|||
|
|||
Last edited by BILLA; 21-10-08 at 04:21 PM. |
#3
|
||||
|
||||
தமிழ் திரை உலகில் ஒரு ட்ரெண்ட் செட்டராக விளங்கிய ஸ்ரீதர் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமான செய்தி..பழய வசன முறையை கல்யாணபரிசு படம் மூலம் தகர்த்து எறிந்தார்..அவர் மறைந்தாலும் அவர் அளித்த திரைகாவியங்கள் காலத்தை வென்று என்றென்றும் வாழும்..
|
#4
|
|||
|
|||
"மன்னார் அண்ட் கம்பெனி" யை என்றென்றும் நினைவில் நிறுத்திய இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ...
இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் படைப்புகள்.... 1959 கல்யாணப்பரிசு 1960 விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம் 1961 தேன் நிலவு 1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், ஆலயமணி 1963 நெஞ்சம் மறப்பதில்லை 1964 காதலிக்க நேரமில்லை 1965 சுமை தாங்கி, வெண்ணிற ஆடை 1967 ஊட்டி வரை உறவு 1969 சிவந்த மண் 1971 உத்தரவின்றி உள்ளே வா 1972 அவளுக்கென்று ஒரு மனம் 1974 உரிமைக்குரல் 1978 இளமை ஊஞ்சலாடுகிறது 1979 அழகே உன்னை ஆராதிக்கிரேன் 1983 ஓடை நதியாகிறது 1984 ஆலய தீபம் 1985 தென்றலே என்னை தொடு 1986 யாரோ எழுதிய கவிதை, நானும் ஒரு தொழிலாளி 1991 தந்து விட்டேன் என்னை நன்றி : தமிழ் இணையம் Last edited by agupass; 21-10-08 at 09:28 PM. |
#5
|
|||
|
|||
தமிழ் திரையுலகுக்கு நல்ல பல படைப்புக்களை தந்து அமரருள் அமரரான ஸ்ரீதரின் ஆத்மா சாந்தியடைய நானும் பிராத்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
|
#6
|
|||
|
|||
தமிழ் திரைப்படங்களுக்கு புதிய பரிமாணம் அளித்த, நெஞ்சில் குடி கொண்ட நல்ல படங்களை தந்த திரு ஸ்ரீதர் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
#7
|
|||
|
|||
மனிதர்கள் மறையலாம்....அவர்கள் சாதனைகள் மறைவதில்லை...மறைந்தும்,மறையாமல் வாழும் மகத்தான இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி...அவரது ஆன்மா சாந்தியடைவதாக!!
|
#8
|
||||
|
||||
தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் ஒரு சகாப்தம்.
அவரின் மறைவுக்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!
__________________
|
#9
|
|||
|
|||
கலையுலகிற்கு இன்னுமொரு பேரிழப்பு. மறைந்த அண்ணாரின் குடும்பத்தாருக்கும், மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்.
|
#10
|
|||
|
|||
திரு,ஸ்ரீதரின் சில படங்களை வாய்ப்பு எனக்கும் கிட்டியது..
அவரின் படங்கள் உண்மையிலேயே ஒரு முன்மாதிரிதான்.. ஆபாசமில்லாத நல்ல குடும்ப பாங்கான படங்களை வழங்கிய அவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாதது.... அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..... |
Tags |
திரைப்பட , பிரபல , ஸ்ரீதர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|