Quote:
Originally Posted by RasaRasan
அன்பு நண்பன் மதனின் 4000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.
நாடு விட்டு நாடு சென்றவுடன் மீண்டும் மதன் லோகம் பக்கம் வரவில்லை என்றவுடன் அங்கே ஏதாவது சைனா கிளியியிடம் காதல் பாடம் படித்து கொண்டிருக்கிறாறோ!!!! என என் மனதில் ஐயம் எழுந்த நேரத்தில், இதோ நான் இருக்கிறேன் என கட கட வென லோகத்திற்குள் ஓடி வந்தவர் வந்த வேகத்தில் மாதாந்திர வாசகர் சவாலில் சவால் ராஜாவாக முடி சூடி, இபோது சுடும் தேனிலவிலும் பங்கு பெற்று லோகத்தில் பிசியாகி விட்டார்.
|
மிக்க நன்றி நண்பா உங்களின் வாழ்த்திற்கும் பாராட்டுதலுக்கும்.
நான் இங்கே பிசியான பிறகு நீங்கள் காணாமல் போய்விட்டீர்களே என்ன செய்தி ?
Quote:
Originally Posted by RasaRasan
Originally Posted by venkat8
அந்த கதை யாருக்குமே ஏமாற்றம் அளிக்காது! கதையை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ராட்சத புயல் நம்மை கடந்ததைபோல் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். ஆனால் அவசரமாக அந்த கதையை படிக்காமல் ஆற அமர படித்தால் அதன் முழுச்சுவையையும் உணர முடியும்.
மதனின் கதையில் தொடக்கத்தில் வந்த தென்றலை பார்த்த நான் தென்றல் மாறி புயலாய் சுழன்றடித்ததை படிக்க முடியவில்லை. மதனின் புயல் கரையை கடந்த கதையை நானும் இன்னும் முழும்மையாய் படித்து முடிக்கவில்லை. நிதானமாக நேரம் கிடைக்கும் போது கதையை படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இன்னும் அதற்கான நேரம் கிடைக்காமலே போகிறது.
|
நேரம் கிடைக்கும் பொழுது தவறாமல் படியுங்கள் நண்பா !
Quote:
Originally Posted by kay
4000 பதிவுகள் தாண்டி வேகம் எடுக்கும் தம்பி மதனுக்கு என் இனிய, அன்பு வாழ்த்துக்கள்! மேலும் மேலும் நல்ல படைப்புக்கள் தந்து அனைவருக்கும் மகிழ்ச்சி தரத் தம்பி மதனைக் கேட்டுக் கொள்கிறேன்!
|
அண்ணனின் வாழ்த்திற்கு நான் நன்றியுடையவனாவேன்.
Quote:
Originally Posted by Nallavan1010
நாலாயிரத்து பதினொன்னு. இன்னிக்கு இந்த நேரத்தில் தம்பி mathan கணக்கிலிருக்கும் தமிழ் பதிவு எண்ணிக்கை. இப்படி வாழ்த்த எனக்கு லேட் ஆகும்னு தெரிஞ்சுதான் அன்னிக்கே சொல்லிட்டேன். இப்போ இந்த திரிய பாத்து மீண்டும் வாழ்த்துகின்றேன்.
|
உங்களைப்போன்ற தமிழறிஞர்களின் வாழ்த்திற்கு நான் நன்றியுடையவனாவேன் அண்ணா !
Quote:
Originally Posted by MACHAN
இவர்களைப்போன்ற பல ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் பாராட்டுப்பெற்ற தங்களின் "புயல் கரையை கடந்தது" என்ற காவியம் மச்சானின் வாசகர் சவாலில் இடம்பெற்றது என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் நண்பரே.
|
உங்களின் போட்டிக்காக பதித்த கதையை நான் அப்பொழுதே உங்களுக்கே சமர்ப்பித்துவிட்டேன் மச்சான் !
Quote:
Originally Posted by MACHAN
தங்களின் குணநலன்களை குறித்து என் மனதில் நினைத்ததை அப்படியே படம்பிடித்துக்காட்டி விட்டார் நண்பர் ராரா.
4000 பதிவுகளுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் பல்லாயிரம் பதிவுகள் பதித்திட வேண்டும். அதில் தங்களின் பல காவியங்களும் இடம் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா.
|
உங்களின் வாழ்த்திற்கும் பாராட்டுதலுக்கும் நான் நன்றியுடையவனாவேன் மச்சான்.
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி !!