<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இதோ ஒரு சுனாமி அஞ்சலி செய்திகள்
மீனவ கிராமங்களில் கண்ணீர் அஞ்சலி சென்னை, டிச. 26- தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சுனாமி தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடலின் கோர பசிக்கு பலியானவர்களுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலைகள் தாக்கியதில் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பலியாயினர். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பல லட்சம் பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். உலகையே நிலைகுலையச் செய்த இந்த கோர தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையட்டி தமிழக கடலோர கிராமங்களில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுனாமிக்கு உறவினர்களை பலி கொடுத்தவர்கள், கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதலியார்குப்பம், புதுக்குப்பம், அனுச்சன்குப்பம், கூனிமேடுகுப்பம், நொஞ்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 29 பேர் இறந்தனர். அவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் பாரதியார் பல்கலைக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வீராம்பட்டினம் மக்கள் சுனாமியின் சோகத்தை சித்தரிக்கும் வண்ணம் மணல் சிற்பங்களை உருவாக்கி இருந்தனர். அதன் அருகே இன்று காலை மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து நினைவஞ்சலி செலுத்தினர். 800-க்கும் மேற்பட்டவர்களை சுனாமிக்கு பறிகொடுத்த கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்கள் இன்று சோகத்தில் மூழ்கின. இறந்தவர்களின் உறவினர்கள், இந்தப் பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களில் மலர் தூவியும், விளக்கேற்றி வைத்தும் அஞ்சலி செலுத்தினர். மேலமணக்குடியில் 165 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று காலை கூடி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை. நன்றி தினகரன் வாழ்க தமிழ் Last edited by udhayasuriyan; 26-12-07 at 09:42 PM. |
#12
|
|||
|
|||
மன்னிக்கவும்...சரியாக வரமாட்டுது
வாழ்க தமிழ் Last edited by udhayasuriyan; 26-12-07 at 09:44 PM. |
#13
|
|||
|
|||
காலையில் னடை சென்றவர்கள், கடல் கண்டு களிக்க வந்த வாண்டுகள்
மீன் தேடி சென்றவர்கள்... மீன் தேடி வந்தவர்கள்..... ஒராயிரம் கனவு கண்டவர்கள்....கனவு மட்டும் பாக்கியானவர்கள். இந்த சுனாமி தான் எத்தனை கல் னெஞம் படைத்தது. உலர்ந்தவர்களுக்காக ஒரு சொட்டு கன்னீர். |
#14
|
|||
|
|||
அது ரொம்ப சோகமான துக்கமான தினம்
|
|
|
|