<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
15 கதைகள் என்றில்லாமல் 15 படைப்புகள்(பாடல்) என்ன வைக்கலாம்
|
#12
|
||||
|
||||
தாங்கள் கருத்து கிட்டதட்ட சரிதான்
ஆனால் பலருக்கு அலுவல் காரணமாக படைப்புகளை அளிக்கமுடியாமல் இருக்கலாம் என்னை பொருத்தவரை விமர்சனம் எழுதுபவர்களை நிச்சயம் பாரட்டதான் வேண்டும் எல்லோரும் எழுதவேண்டும் என்று எதிர்பார்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று.... Last edited by x_wala; 03-09-05 at 07:31 AM. |
#13
|
||||
|
||||
கருத்தில் பிழை உள்ளது என்பதே எனது கருத்து
எல்லோராலும் கதை எழுத முடியாது. எல்லோராலும் விமரிசனம் எழுத முடியாது, எல்லோராலும் கவிதை புனைய முடியாது. அவரவர்கள் தத்தம் பங்களிப்பை அளிப்பதுவரை தளம் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். துப்பாக்கி முனையில் யாரையும் கதை எழுத வைக்க முடியாது.......... |
#14
|
||||
|
||||
ஐந்து விரலும் ஒன்று போல் இல்லை நண்பரே. எல்லாரும் சிறந்த காதாசிரியர்கலாக ஆக முடியாது. சிலர் சிறந்த எழுத்தாளர்கலாக இருப்பார்கள். நல்ல கதைகளை படைப்பாவர்கள், பாடல்களை எழுத முடியாதவர்கலாக இருக்கலாம். கவிதைகள் எழுதுபவர்கள் நகைச்சுவை துணுக்குகள் எழுத முடியாதவர்கலாக இருக்கலாம். சிலர் இவைகளை தவிற வேறு பயன் உள்ள ஆக்க பூர்வமான துணுக்குகள் Threadகளை படைக்கலாம்.
கா.தா சார் மாதிரியான ஒரு சிலர் தான் ஓயிவு இல்லாமல் எந்த ஒரு சோர்வும் இல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களின் தனிச்சிறப்பு. அவர்களை போல் எல்லாரும் ஆக முடியாது. அவர்களை இன்னும் ஊக்குவிக்க வேண்டும், மணம் திறந்து பாராட்ட வேண்டும். இங்கு வரும் பெரும் அங்கத்தினர்கள் கதைகள் படிக்கவே வருகிறார்கள். அவர்களும் தளத்தின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு பதவிகளை எதிர்பார்த்து அல்லது கிடைத்த பதவிகளை தக்க வைத்து கொள்ள தன்னால் இயன்ற பங்களிப்புகளை அளிக்கின்றார்கள். அனைவரும் கட்டாயம் கதைகள் எழுத வேண்டும் என்று நிர்பனித்தால் மேலே ஒரு நண்பர் சொல்லியது போல் இங்கு குப்பைகள் தான் அதிகரிக்கும். பின் நிர்வாகத்துக்கு அதுவே அதிக வேளையையும் வீன் சிரமத்தையும் கொடுக்கும். |
#15
|
||||
|
||||
நண்பர்கள் கூறியது போல் அனைவருக்கும் வேலைப்பளு இருக்கும் நிலையில் (இதில் வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையும் உள்ளவர்கள் பாடு மிகவும் சிரமம் தான்) சிவா சொல்வது போல் கட்டாயபடுத்தி பதிப்புகள் மற்றும் கதையை பதிக்க சொன்னால் தரமான கதைகள் தளத்திற்கு கிடைக்காது....வெறும் குப்பைகளை பதித்து நானும் பதிக்கிறேன் என்று சொல்பவர்கள் தான் மிஞ்சுவார்கள்....
தலைவர் ஏற்கனவே சாட்டையை எடுத்துவிட்டார்... கண்டிப்பாக கதைகள் பதித்து தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதற்கு பதிலாக மாதம்தோறும் தங்களால் இயன்ற பதிப்புகளை அது பாராட்டாகட்டும், கவிதையாகட்டும், துணுக்கு ஆகட்டும் பதிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி இத்தளம் சிறக்கவும் இதன் துணைதளமான kamalogam.org மூலம் தளத்திற்கு வருமானம் வந்து தலைவருக்கு சிரமத்தை குறைக்கவும் எல்லோரும் உதவ வேண்டும்.... மூன்று மாதங்களுக்கு ஒரு கதையாவது பதிக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் பழைய உறுப்பினர்களுக்கு கட்டாயமாக்கலாம்....புதிய உறுப்பினர்களுக்கு 15 கதைகள் எழுத வேண்டும் என்பது மிகவும் கடினமான காரியம்...அது போல் 4 வரி கதைகளை எழுதுவதை கட்டாயம் தடைவிதிக்க வேண்டும்....அல்லது 4 வரி கதை எழுதி பதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு அவர்களுடைய முழு கதையையும் சேர்த்து ஒரு பதிப்பாக கருத வேண்டும்... |
#16
|
||||
|
||||
சிவா_மதுரை,
உங்கள் கருத்துக்கள் படி நடந்தால் நல்லது தான். ஆனால், கதை எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. நாம் கதை எழுதினால் முன்னுரிமை என்று கூறுவதனால் பலர் கதை எழுத ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஒரு சிலராலேயே நன்றாக எழுத முடிகிறது, பலர் அனுமதி கிடைத்தவுடன், கருத்துக்கள் கூறியே தங்கள் தகுதிகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள். யாருமே தனக்கு எதுவுமே வராது என்றும் இருந்துவிடக் கூடாது. முயற்சி செய்து பார்க்கவேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது. ஆனால், அவரவருக்கு என்று ஒரு திறமை உண்டு. அதை செய்தாலே போதும் கதைகள் மட்டும் தான் படைக்க வேண்டுமென்பதல்ல. குறைந்த பட்சம் சிறந்த கருத்துக்கள் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தாலே போதும். ஆனால், அனுமதிகள் கிடைத்தவுடன், அதுவும் கூட செய்யாமல் நிறைய பேர் இருந்து விடுகிறார்களே அவர்களுக்கு தான் விதிமுறைகளை இனி கடுமையாக்க வேண்டும். நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும். நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த தலைப்பால் பலர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். "வந்துட்டான்யா... வந்துட்டான்யா..." என்று வடிவேல் பாணியில் பலர் கூறியிருப்பார்கள்". "ஏற்கனவே, இங்கே அதிக கெடுபிடி, இந்த ஆளு வேரையா?" என்று சிலர் முணுமுணுத்திருப்பார்கள். நாமும் அவர்களை முதலிலேயே ரொம்பவும் மிரட்ட வேண்டாம். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் தானாகவே எழுதுவார்கள், நாம் கத்தியை காட்டி மிரட்டி எழுத வைக்க தேவையில்லை. மேலும், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு படைப்புகளையும், அதைப் படைப்பவர்களையும், கருத்துகள் கூறுபவர்களையும், கருத்துக்கள் கூறாமல் செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்கு ஏற்ப அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப் படும், படைப்பாளிகள் ஊக்கம் கொடுக்கப் படும், கதைகளின் தரம் காக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-09-05 at 07:02 PM. |
#17
|
||||
|
||||
தளம் சிறப்பாக செயல்பட தலைவருக்கு ஒத்துழை
நண்பர் சிவாவின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அனுமதி பெறுவதற்காக மட்டுமே கதை பதிப்பது என்பது தவறாகும். இத்தளமே நமக்குள் காமகலையின் பரிணாமங்களை, அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காக சுயநலமின்றி தலைவர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தலைவர் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று சொந்த பணத்தை போட்டு நிர்வகித்து வருகிறார் என அறியும்போது . . . தலைவர் உண்மையிலே பாராட்டத்தகுந்தவர். நம் தாய் தமிழில் இவ்வாறு ஒரு தளத்தை காணுவேன் என்று உண்மையிலேயே நினைத்துப் பார்க்கவில்லை. நாம் அனைவரும் முழு முச்சுடன் தலைவருக்கு ஒத்துழைப்பு அளிப்போம். தளம் மென்மேலும் சிறப்பாக செயல்பட வழி வகுப்போம். இது எழுதுவதில் மட்டும் நின்று விடாமல் செயலில் கடைப்பிடிப்போம். தலைவர் கூறியது போல் முயற்சித்தால் முடியாதது இல்லை. |
#18
|
||||
|
||||
அன்பு நண்பர்களே,
நான் எனது கருத்தையும், கோரிக்கையையும்தான் வைத்துள்ளேன். நானும் எல்லோரையும் போல் உறுப்பினர்தான். தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.எனவே தலைவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். மற்றபடி என் கருத்தில் எந்த உள் நோக்கமுமில்லை. அன்புடன் சிவா - மதுரை
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#19
|
|||
|
|||
வேலைப் பளு எல்லாருக்கும் உண்டு. கதை எழுதுவோருக்குத்தான் அதன் கடினம் தெரியும். 15 என்பது அதிகம். இப்போது உள்ள சட்டங்களே போதும். அனைவரும் கருத்து பதிவு செய்தாலே கதைகளின் உயரும் என்பது என் கருத்து. சிறந்த கருத்து என்பதே சிறிது கடினமாகத் தான் உள்ளது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், சில கதைகளுக்கு படித்த உடன் கருத்து எழுத முடிவதில்லை. யோசித்து பதிய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகிறது. காரணம் அலுவலகத்தில் இருந்து தளத்தினை பார்ப்பதுதான்...
|
#20
|
||||
|
||||
தல நீங்க சொன்னது முற்றிலும் சரியே.
இருப்பினும் நாலு பத்திகலில் கதை சொல்லும் போக்கு அதிகரிப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம். இப்படியான "குறுந்தொகை" களால் கதை ஆர்வமே குண்றிபோகவும் கூடும். |
|
|
|