<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பேண்ட்(Banned) யூஸர்ஸ்
நான் சமீபத்தில் காரோட்டி சென்றுக்கொண்டு இருக்கும்போது ஒரு விபத்தை கண்டேன். நான் உடனே காரை நிறுத்தி சென்று பார்த்தேன். ஆனால் பலர் தனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பது போல போய்க்கொண்டே இருந்தார்கள். இதில் வருத்தப்ப்பட்டேன். நம்முடைய பிரச்சனை என்னவென்றால் ஒரு இண்டிஃப்ரன்ஸ் (Indifference) வந்து விட்டது. யாருக்கு என்ன வந்தால் என்ன? - நம் வாழ்க்கை ஒழுங்காக போனால் போதும் என்று! இது சுயநலம். சமீப காலத்தில் நான் பார்ப்பது என்னவென்றால் பலர் பேண்ட் ஆகி இருக்கிறார்கள். பல நண்பர்கள்....இவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை...கொஞ்சம் கன்சயன்ஸ் இடிக்கிறது! - அவர்களும் காமலோகத்தில் பல காலம் உழைத்தவர்கள் அல்லவா? 1. நான் நிர்வாகத்தை குறை சொல்லவில்லை....ஆனால் அவர்களை கொஞ்சம் லிபரலாக ஹேண்டில் செய்ய கேட்டுக்கொள்கிறேன். 2. நியாயமான காரணங்களுக்காக பேண் ஆகி இருக்கலாம் - ஆனால் அதிலிருந்து மீள அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் அல்லவா? கடைசியாக நான் சொல்ல வருவது என்னவென்றால் - நான் சொல்வதை குறையாக எடுத்துக்கொள்ளாமல் - பேண்ட் யூஸர்ஸும் மீண்டு வர ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்....!
|
#2
|
|||
|
|||
என் பெரு மதிப்புக்குரிய படைப்பாளர், பேரும் புகழும் பெற்றவர், ஆசிரியர் mouni, அவர்களின் கூற்றில் மென்மையான ஆனால் படிப்போர் அனவைரின் நெஞ்சங்களைத் தொடும் மிகவும் உறுதியான வேண்டுகோள்கள் இருக்கின்றன!
அவைகளைப் பற்றி நானே எழதி வெளிப்படுத்தலாம் என்று வெகுநாட்களாக மனதில் எண்ணம் கொண்டு வந்தேன் ! ஆனால் அவைகளை நிர்வாகத்திற்கு எடுத்துச் சொல்லும் அளவு எனக்குத் தகுதிகள் மிக மிகக் குறைவு ! அதையும் விட எனக்கு மனத் திண்மை அதினினும் குறைவு ! ஆனால் மிகுந்த சொல் ஆற்றல் மிக்க ஒரு படைப்பாளர் ஒருவர் முன்வந்து அந்தக் கருத்தினை எழுதி வெளியிட்ட பின்னரே; நான் அதைப் படித்த பிறகே,நானும் ஆமோதிக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு எனக்கும் ஒரு துணிச்சல் வந்து விட்டது! அப்படி நான் ஆமோத்தித்தது தவறு என்றால் நிர்வாகம் என்னைப் பிழை பொறுக்க வேண்டுகிறேன் ! சரியென்றால், நான் ஆமோதித்த நம்முடைய பெருமதிப்புக்குரிய ஆசிரியர் mouni ,அவர்களின் கருத்தினை உள் வாங்கிக் கொண்டு ஆவன செய்ய வேண்டுகிறேன்,அவ்வளவே ! நம்முடைய பெருமதிப்புக்குரிய ஆசிரியர்mouni ,அவர்களின் இந்த விண்ணப்பம் மிகவும் மென்மையானது. ஆனால் இது, கல்லையும் கரைய வைக்கும் கனிந்த வார்த்தைச் சிலம்பம் போடும், சிறிய ஆனால் வலிய, விண்ணப்பம்! இந்த பண்பான, ஆனால் அன்பான ஒரு திரியை வெளியிட்ட புகழ் மிக்க ஆசிரியர் mouni, அவருக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் ! Last edited by vjagan; 11-07-12 at 11:37 AM. |
#3
|
||||
|
||||
டியர் மவுனி நீங்கள் இதனை தனிமடலில் நிர்வாக உறுப்பினர் அல்லது தலைமை நிர்வாகி அவர்களுக்கு தந்திருக்கலாம். பொதுவில் பதிப்பதால் அநேக சங்கடங்கள் அனைவருக்கும் வரலாம். நீங்கள் பொதுவில் பதிந்ததால் நான் பதில் பதிக்கிறேன். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
நீங்கள் சொல்லும் தடைபட்ட நண்பர்கள் எவரெவர் என்று பெயர் குறிப்பிட்டு சொல்லுங்கள். அது பற்றி பதில் தரப்பார்க்கிறேன். பொத்தாம் பொதுவாக தடை செய்யப்பட்டவர் எல்லோரும் தளத்து நண்பர்கள் என்றால் பதில் ஒன்றே ஒன்று தான். நம் தளம் கட்டுக்கோப்பாக இருப்பதால் தான் இவ்வளவு நாள் தொடர்ந்து இயங்கி வருகிறது. பெண் உறுப்பினர்களும் எந்த பிரச்சினையுமில்லாமல் இனைந்து இருக்கிறார்கள். எந்த ஒரு உறுப்பினரையும் நிர்வாகம் தன்னிச்சையாக முழுமையாக நீக்குவதில்லை. சில காலம் தடை செய்யப்பட்டிருப்பார்கள் அவ்வளவே. அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின் திரும்ப வருவர். அந்த கால அளவு தடை செய்யப்பட்டவருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மட்டுமே தெரியும். மேலே சொன்னது தவிர, காமலோகத்தின் அடிப்படை விதிகளை மீறி திருட்டுத்தனமாக கதை பதிக்கும் அனைவரும் நிரந்தரமாக தடைசெய்யப்படுவர். ஒருவரை தடை செய்யும் முன் தனிமடலில்/திரியில் எச்சரிக்கை செய்யப்படும். பின்னர் குறைந்த அளவு எச்சரிக்கை புள்ளிகள் தரப்படும். திரும்ப அதே தவறை அவர் செய்தால் எச்சரிக்கை புள்ளிகள் கூடும், முன்னர் செய்த தவறை புரிந்து கொண்டு இனி செய்ய மாட்டேன் என்ற உத்திரவாதமும், அந்த தவறால் ஏற்பட்ட இன்னல்களுக்கு வருத்தமும் தெரிவித்தால் எச்சரிக்கை புள்ளிகள் குறைக்க வாய்ப்புண்டு. உறுப்பினர் ஒருவர் எந்த விதமான விதிமிறல்களும் இல்லாமல் முறையாக பங்களித்து வந்தால் அவருக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது, மாறாக அடுத்தவரை நேரடியாகவோ/மறைமுகமாகவோ அவருக்கு தெரியும் வண்ணம் நக்கல் செய்வது, அடுத்தவரை திரியிலோ/பதிப்பிலே வம்பிழுத்து அவர்கள் மனம் நோகும்படி படைப்புகள் செய்தால் நிச்சயம் எச்சரிக்கை வந்து சேரும். தளம் அனைவரும் இன்புறவே அன்றி ஒருவரை துன்புறுத்தி மற்றொருவர் இன்புறுவதற்கு அல்ல. உங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கு நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது, அப்போது தடை செய்யப்பட்டவர்களுக்கு நீங்கள் ஏன் இது போல ஒரு திரி எழுப்பவில்லை என்பதையும் சொல்லுங்கள். நீங்கள் காரை நிறுத்தி சென்று பார்த்ததில் பாதி சொன்னீர்கள் மீதி சொல்லவில்லை, அங்கே என்ன கண்டீர்கள் என்ன மனதிருப்திக்காக செய்தீர்கள் என்று சொல்லுங்களேன். இதனால் உங்களுக்கு / அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு என்ன கிடைத்தது.
__________________
Last edited by asho; 11-07-12 at 11:59 AM. |
#4
|
|||
|
|||
தள விதிமுறைகள் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் நாம் விதிமுறைகளை நன்றாக புரிந்துகொண்டுதானே தளத்துக்குள் நுழைகின்றோம் அப்படி இருக்கும்போது நிர்வாகம் எச்சரித்த பின்பும் அதை மறுபடியும் மீறுவது சரி அல்ல
மௌனி அவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் சில நாட்களுக்கு முன் நான் இரண்டு பெண் உறுப்பினர்களின் திரியில் நான் பதித்த பொதுவான கருத்திற்கு அந்த உறுப்பினர்கள் எனக்கு தனி மடல் மூலம் தொடர்ப்பு கொண்டார்கள் நான் எனது பதிலை அவர்களின் visitor massage பகுதியில் பதித்தது என் தவறு அவர்களாகவே தொடர்ப்பு கொண்டவர்கள் நான் அவர்களை தொந்தரவு செய்வதாக நிர்வாகத்திடம் புகார் அளித்தார்கள் அதனால் நிர்வாகம் எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்தது நான் நிர்வாகத்திடம் நடந்ததை விபரமாக தலைமை நிர்வாகிக்கு தனி மடல் அனுப்பினேன் ஆனால் எச்ச்சரிக்கைப்புள்ளிகள் நீக்கப்படவில்லை சரி என்று இருந்துவிட்டேன் எனக்கு புள்ளிகள் கிடைக்க செய்த உறுப்பினர்களுக்கு இதனால் என்ன ஆதாயமோ நான் அறியேன் அதனால் பாரபட்சம் இன்றி விதிமுறைகளை அமல்படுத்துவது சரியே என நினைக்கின்றேன் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் என்னைப்பற்றி புகாரளித்தவர்கள் தானாக முன் வந்து ஏன் அப்படி செய்தார்கள் என்று இதே இடத்தில் பதிந்தால் (அவர்களுக்கு மனசாட்சி இருந்தால்) சிறிது ஆறுதலாக இருக்கும் இந்த என் கருத்தை பதிக்க உதவியாக திரியை துவக்கிய மௌனிக்கும் அசோ அவர்களின் பதிலுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் மேலும் அசோ எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு பதில் தர மௌனி அவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதையும் மௌனி அவசியம் பதில் பதிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றேன் பின் குறிப்பு:என்னைப்பற்றி புகார் செய்த உறுப்பினர்களில் ஒருவர் என் இ-மெயில் அட்ரசில் மறுபடியும் தொடர்ப்பு கொண்டார் என்பதையும் இதுவரை தொடர்பில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிட தக்கது |
#5
|
|||
|
|||
நான் குறை சொல்லவில்லை...சமீபத்தில் நிறைய பேரை அந்த லிஸ்டில் பார்க்க முடிந்தது....உதாரணம் காமராஜன், ரீடர், ஜெயேரா....! நான் சொன்னது அவர்கள் மீண்டு வர வாய்ப்பு இருக்கிறதா என்று....அதற்கு வழி இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி! அஷோ கேள்விக்கு - அந்த விபத்தில் மாட்டிக்கொண்டவரை மீட்டு இப்போது அவர் நன்றாக இருக்கிறார்...ஏதோ என்னால் ஆன சின்ன உதவி......ஏன் மற்றவர்கள் உதவவில்லை என்று கேட்டதற்கு போலீஸ் பிரச்சனை இருக்கும் என்று மற்றவர்கள் நம்புகிறார்கள் என்று சொன்னார்கள்...ஆனால் ஒரு தடவை போலீஸ் கமிஷனர் விபத்தில் இருப்பவர்களை ஒரு டி.வி பேட்டியில் மீட்பவர்களை போலீஸ் எந்த விதத்திலும் சிரமப்படுத்தாது என்று சொன்னதாக ஞாபகம்...இந்த விபத்து நடந்த இடம் டெல்லி. இது வரை எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை!
|
#6
|
|||
|
|||
Quote:
|
#7
|
|||
|
|||
அஷோ சொன்ன பதில் எனக்கு பூரண திருப்தி!
மேலும் இது பற்றி விவாதிப்பது தேவையில்லை. ப்ளீஸ்...இந்த திரியை பூட்டி விடுமாறு அஷோவை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மௌனி |
#8
|
||||
|
||||
புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி, இந்த திரி ஆரம்பித்தவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பூட்டப்படுகிறது.
__________________
Last edited by asho; 27-07-12 at 01:55 PM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|