<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
என் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமான ஆசிரியர் திரு(மதி):"mouni" அவர்களின் மேலான பார்வைக்கு என் இந்த கருத்தை மன வருத்தத்தோடு வைக்கிறேன்...
ஆசிரியரே......! உங்களின் எழுத்தால் கவரப்பட்ட லோகத்தின் பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்...என் இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு அவைகள் செயல் இழந்துபோய் மரணத்தின் வாசலைத்தட்டியவன் நான்...என் மரியாதைக்குரிய அண்ணன் திரு:"dreamer" அவர்களை முந்திக் கொள்வேன் என் நினைத்தேன் ..ஆனால் அண்ணன் வழக்கம் போல என்னை முந்திக் கொண்டு விட்டார்...என் மனைவி போராடி இருக்கிற சேமிப்பு நகைகள் எல்லாம் விற்று லட்ஷங்கள் செலவு செய்து என்னை மீட்டுக் கொண்டு வந்து விட்டாள்..இப்போ படுத்த படுக்கையில் நாட்களை எண்ணிக்கொடு இருக்கிறேன்..நான் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த போது திரு:"ராசு" அவர்களும் திரு"Tdr" அவர்களும் லோகத்தில் எழுதி இருந்ததைப் படித்த விட்டு பலரும் எனக்கு ஆறுதல் செய்திகள் அனுப்பி இருந்தார்கள் ..தொழில் அதிபர் திரு:"ராசு" அவர்களும் என் மரியாதைக்குரிய திரு:"Tdr" அவர்களும் மருத்துவ மனைக்கு நேரில்வந்து ஆறுதல் சொன்னதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்...நம் மரியாதைக்குரிய "தலைமையையும்" எனக்கு ஆறுதல் சொன்னது...இப்படி லோகத்தில் கிடைத்த அன்பு உள்ளங்கள் நட்பு வட்டாரங்கள் தான் நொந்து போன எனக்கு ஆறுதல் தந்து கொண்டு இருக்கின்றன... இந்நிலையில்............ இன்று லோகத்தில் நுழைந்தபோது "விடை பெறுகிறேன் நண்பர்களே !" என்கிற தலைப்பை பார்த்தேன்...திகைத்துப் போய் சம்பந்தப் பட்ட திரிக்கு வந்து "யாரு?" என்று பார்த்தால்....அது தாங்கள்....அதிர்ச்சியாகிப் போனேன் ..என் மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஆசிரியரான தாங்கள் போவது எனக்கு ரொம்ப மனவருத்தத்தை தருகிறது... இரவில் ஊரும் உலகமும் உறங்கிக் கொண்டு இருக்கும்போது உடம்பு டையாலிசிஸ்க்கு உள்ளாவதால் கரும்புச் சக்கையாபிழியப்பட்டு படுக்கையில் கிடைக்கும் எனக்கு "TV யும் கணணியும்" தான். இருக்கும் ஒரே ஆறுதல் ...அதிலும் "உங்கள் கதைகள்" என்றால் முதலில் படித்து விடுவேன்...உங்களின் கதைகளை படிக்கும்போது நான் "என் இருபதுகளுக்குப்போய் சஞ்சரிக்கிறேன்"..என் வலி நோயின் பாதிப்பு எல்லாம் "மறக்கிறது"...அதுதான் உங்களின் "எழுத்தின் சக்தி".... .. அன்பு ஆசிரியரே...! நீங்கள் போவது என்று முடிவு செய்து விட்டீர்கள் ..ஆனால உங்களின் எழுத்தால் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒரு வயதான வாசகனை சந்தோஷமாக வைத்து இருந்தீர்கள் என்பதை மட்டும் மறக்காதீர்கள்...கர்த்தர் உங்களோடு இருப்பாராக............. "jaya6" ("ramjee786") |
#22
|
|||
|
|||
மெளனி, உங்களின் முடிவை மீண்டும் ஒரு முறை பரீசிலியுங்கள். கதை எழுதிப் பதிக்க நேரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் லோகத்தைவிட்டு ஒருபோதும் போகாதீர்கள்.
|
#23
|
||||
|
||||
இது ஒரு தற்காலிக முடிவாக மட்டும் இருக்க நினைக்கிறனே
|
#24
|
|||
|
|||
மிகவும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. உங்களின் முடிவை மதிக்கிறேன், ஆனாலும் நீங்கள் இந்த லோகத்தில் எங்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசையை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
|
#25
|
||||
|
||||
தோழி மௌனி ஒரு சிறந்த காமலோக படைப்பாளி.
பல கதைகளை, கவிதைகளை, மற்றும் இன்னும் பலவற்றை தந்தவர். ஏன் இந்த முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் மீள் பரிசீலனை செய்து, மீண்டும் காமலோகத்திலில் தென்படுவார் என நினைக்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#26
|
|||
|
|||
உங்களுக்கு ஒரு உல்லாச பயணம் தேவைபடுகிறது போல தெரிகிறது. நயாகரா நீர் வீழ்ச்சி வரை ஒரு ட்ரைவ் போய்டு வாங்க. அங்கேயும் வடை கிடைக்கும் என்ரால் பெற்று சாப்டுங்கள். விடை பெறுவதெல்லாம் சரிப்படாது. இன்னும் ஒரு விருது * பாக்கி இருக்குல்ல...
|
#27
|
|||
|
|||
அன்பு தோழியே, உங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறேன். உங்களுக்கு தேவையான மன அமைதி கிடைத்த பிறகு, மீண்டும் திரும்பி வர அழைக்கிறேன். வாழ்த்துக்களும்... நன்றிகளும்...!!
|
#28
|
||||
|
||||
Last Activity: 19-07-16 04:02 AM
அவர் புரபைல் பார்த்ததில் மேலே உள்ள நேரத்தில் திரும்ப வந்து விட்டதால் இந்த திரியை இப்போதைக்கு பூட்டி வைக்கிறேன்.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|