"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்"
என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் டி எம் எஸ் அவர்கள்...!
அவரும் பி. சுசீலா அம்மாவும் இணைந்து பாடிய டூயட் பாடல்களை மச்சான் கேட்காத நாளே இல்லை எனலாம். நண்பர் கே அவர்கள் சொன்னதுபோல புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஏற்ற மாதிரி தனது குரலை மாற்றி மாற்றி பாடுவதில் வல்லவர். அவரின் மறைவு தமிழ்த்திரை உலகுக்கு பெரும் இழப்பு. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
|