பி.பீ. ஸ்ரீனிவாஸ், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியைத் தொடர்ந்து டி.எம்.சௌந்தரராஜனும் தமது 91ஆவது வயதில் இன்று 25 - 5- 2013 மறைந்து விட்டார்! எம் ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தன் குரலை மாற்றிக் கொண்டு அவர்கள் பாடுவதைப் போலவே பின்னணி பாடுவார். அவர்
பாடிய பாடல்கள் ஏராளம். மதன் அவரைப் பற்றித் தனியாகக்
கட்டுரை எழுத வேண்டும்! அவர் பாடிய முருகன் பாடலில் தவத்திரு ஆண்டவன் பிச்சை அம்மையார் இயற்றிய "உள்ளம் உருகுதையா" தனித்துவம் வாய்ந்தது! டி.எம்.எஸ்ஸுக்கு என் அஞ்சலி! அவர் ஆத்மா முருகனிடம் தஞ்சம் கொள்ள அவனிடமே பிரார்த்திக்கிறேன்! அவர் குடும்பத்துக்குக் காமலோக நண்பர்கள் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!