அன்பு நண்பர் மௌனி அவர்கள் காலமாகிவிட்டார் என்பதைக் கேட்டு மிகவும் வருந்தினேன். என்னைப்போன்ற பல படைப்பாளிகளுக்கு மௌனி அவர்களின் எழுத்துக்கள் தான் ஆதர்சம். அவரின் நேர்த்தியான எழுத்து நடையும், வித்தியாசமான கதை களங்களும் என்றுமே எனக்கு பிரமிப்பு தான். என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு அவர் எழுத்துக்கள் தான் ஆதர்சம் என்பதை அவரிடமே பகிர்ந்திருக்கிறேன். அவரைப் போன்று இன்னொரு படைப்பாளி கிடையவே கிடையாது.
எத்துணை எத்துணை கதைகள்! காம கதைகளில் அவரைப் போன்று கோலோச்சியவர்கள் ஒருவருமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் காம கதைகளின் அரசி நண்பர் மறைந்த மௌனி அவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. பல நண்பர்கள் கூறியதைப் போல, மறைந்த நண்பர் மௌனி அவர்கள் ஒரு பெண் என்பதை அறிந்த கணத்தில் மிகவும் ஆச்சரியம் உற்றேன். காமமும் காதலும் கொப்பளிக்க சரிவிகிதத்தில் படைப்புகளை அளிக்க நண்பர் மௌனி அவர்களால் மட்டுமே முடியும். நண்பரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நண்பர் மௌனி அவர்களின் மறைவு, நம் தளத்திற்கு பேரிழப்பு. என்னைப் போன்று எத்தனையோ வாசக நெஞ்சங்ககளை தன் வசிய எழுத்தால் , கட்டிப்போட்ட நண்பர் மௌனியின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு.நண்பர் மௌனியின் எழுத்துக்களை பார்த்துத்தான், நான் கதைகளை படைக்க ஆரம்பித்தேன். என்றென்றும் எனக்கு அவரின் எழுத்துக்கள் தான் ஆதர்சம்! எல்லாம் வல்ல இறைவனின் அருளால், விண்ணுலகில் அவர் இளைப்பார பிரார்த்திக்கிறேன்.
|