View Single Post
  #4  
Old 22-07-12, 01:58 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
தூய தமிழில் எழுதுவது ஒரு கலை நண்பர் விஜெகன் அவர்களே! அது உங்களுக்கு நன்றாகக் கைகூடி வருகிறது என்பதை உங்கள் கதைகளில் கண்டு வியப்பவன் நான்! எனக்கும் அப்படி எழுதப் பிடிக்கும்தான்.

ஆனால், ’உண்மை வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கதைகளில் எழுதினால் இயல்பாக இருக்குமே’ என்ற நோக்கத்தில் அவ்வாறு ஆங்கிலக் கலப்பில் எழுத நேர்கிறது. இல்லையென்றால், படிப்பவர்களிடம் இருந்து நம் கதை அந்நியப்பட்டுவிடுமோ என்ற சிறு அச்சமும் (அது தேவையற்ற அச்சமாக இருக்கலாம்) அவ்வப்போது எழுந்து தூய தமிழ்நடையிலிருந்து இயல்பு நடைக்குத் தாவ நேர்கிறது.

வாத்தியார் குறிப்பிட்டதுபோல் சமஸ்கிருதக் கலப்பும் நம்மில் தவிர்க்க இயலாததாகவே ஆகிவிட்டது.

எடுத்துக்காட்டாக, ”வாசகம்”, ”மந்திரம்”, ”நிர்ப்பந்தம்”, ”ஆதங்கம்” முதலியவை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்குத் தாவியவை என நினைக்கிறேன்.

நல்ல திரிக்கு 5 விண்மீன் பாராட்டுகள் நண்பர் விஜெகன் அவர்களே! உங்கள் தமிழுக்கு ரசிகன் நான்!
Reply With Quote