View Single Post
  #20  
Old 15-01-06, 02:52 PM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2005
Location: நுங்கம்பாக்கம்,
Posts: 388
My Threads  
தை முதல் நாள் பொங்கல். இதுவே மற்ற மாநிலங்களிலும் அவ்வாறே கொண்டாடப்படுகிறது.

கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கூட புதுபானை வைத்து புது அரிசி போட்டு கரும்புடன் நம்மைப்போன்றே பொங்கல் கொண்டாடுகிறார்கள். கர்நாடகாவில் அவரைக்காய் போட்ட கூட்டும் இந்நாளில் முக்கியம் என்பதே அவர்களின் ஒரு வித்தியாசம்.

இது சூரியக்கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள். முந்தைய போகி மழைக்கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள்.

நான் வழக்கம்போல பொங்கலுக்காக என் ஊர் (நன்னிலம், திருவாரூர் மாவட்டம்) வந்து மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன்.

இப்பண்டிகை தமிழர்களின் தனித்துவம் இருக்கிறது என்பதே தவிர, இந்துக்களின் மிக முக்கிய திருவிழா.

இப்பண்டிகை (தை முதல் நாள் புனித தினம்) இந்தியா முழுதும் வெவ்வேறு மாதிரி கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று ஒரு லட்சம் பேராவது கங்கையில் நீராடி புனித பூசை செய்வார்கள்.

தமிழனின் வாழ்வும் இறையாண்மையும் இணை பிரியாமல் ஆயிரமாயிரம் வருடங்கள் இருந்திருக்கின்றன. இதை இப்போது ம(று)றக்க முயன்றாலும் இப்பொரும் உண்மை மறையாது. தமிழ் மாதங்களும், தமிழ் வருட பெயர்களுமே இந்து வடமொழியை தழுவிய பெயர்களும் அமைப்பும்தான்.

இன்னொரு விழயம். முஸ்லிம்கள் இப்பண்டிகை கொண்டாடுவதில்லை. அவர்கள் மத குருமார்கள் இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால், இது "தமிழர் திருநாள்" என்று கூறுவதில் ஆபத்து இருக்கிறது.

அதனால், இம்மாதிரி விசயங்களில் அதிகம் விமர்சிக்காமல், பண்டிகையை அவரவர் மனம் மகிழ கொண்டாடுவோம்.


பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றி!!
Reply With Quote