View Single Post
  #9  
Old 13-05-11, 06:32 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,991
My Threads  
அய்யாமார்களே , அம்மாமார்களே, அம்மணிமார்களே,
இப்படியா ஓர் அப்பாவிப் படைப்பாளியைத் துரத்தித் துரத்தி அடிப்பது! அதுவும் அன்பு வார்த்தைகளால் ! திக்குமுக்காடிப் போன என்னால் இந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரண்டு நாள் நீங்கள் தந்த அந்த போதை வார்த்தைகள் தலைக்கு ஏறி என் நிலைப்பாட்டைக் குலைத்தன. என் நிலை உணர இவ்வளவு காலம் பிடித்தது. அந்தக் காரணங்களால் உடனுக்குடன் பதில் எழுத வேண்டிய அந்த அடிப்படைப் பண்பாடு கூட இல்லாமல் மெத்தனமாக இருந்து விட்டேன் அய்யாமார்களே , அம்மாமார்களே, அம்மணிமார்களே,

இன்றுதான் சற்று நிதானத்திற்கு வந்தேன்.

உங்களின் இந்த பெருந்தன்மை பொருந்திய செயல்பாட்டுக்கு- முகம் அறியாத ஒருவருக்கு ஓர் அன்னியருக்கு எந்தவித சின்ன எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் வெள்ளை உள்ளங்களைத் திறந்துவிட்டீர்கள். நீங்கள் அனைவரும் நெடு நாள் வாழ என்னுடைய இறை வணக்கத்தைச் சொல்லி வேண்டுகிறேன்.

எனக்கு சற்று நேரம் தாருங்கள், இரண்டொரு நாட்கள். என்னைப்பற்றி கொஞ்சம் விவரமாகக் சொல்லி அறிமுகப் படித்திக் கொள்கிறேன். அதற்கு முன்னர் ஒவ்வொருவருக்கும் தனி மடலில் என்னுடைய நன்றியை தெரிவிக்க முற்படுவேன்.

1. முக்கியமாக எனக்கென்று ஒரு புதிய பாராட்டுத் திரியை ஆரமபித்த அன்பர் தமிழா அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு! நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது என்னுடைய முன் வினைப் பயனாக இருக்குமோ! இல்லை, இல்லை. அன்பர் தமிழா அவர்களின் உயர்ந்த உள்ளமே காரணம் !

2. சுருக்கமாக மனமாற வாழ்த்திவிட்டு அன்பர் gemini அவர்கள் சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள் என்று சற்றுப் பேராசையுடன் கூறி விட்டார்.

3. என்னைப் பற்றி முன் பின் அறியாத அனபர் RasaRasan கர்ணன் வழியில் வந்தவர் .நான் எழுதியதோ வெறும் மூன்று பாகங்கள்.

ஆனால், ஒவ்வொரு பாகத்திற்கும் இவரிடமிருந்து மின் பணங்கள தவறாமல் வரவு! “ அப்பா எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று சொல்லி அய்யா, அம்மா, அம்மணி என ஆரம்பித்து கதை படிப்பவரின் மனங்களில் தன் இடத்தையும் பதித்து விட்டார்” என்று சற்று உயர்வாகப் புகழ்ந்துவிட்டார் என்னிடம் கதை அளக்கும் திறன் நன்கு உள்ளது. “இன்னும் பல சுவாரஸ்யமான கதை விடுங்கள்” என்று உற்சாகப் படுத்தி விட்டார்.

அறியாத நண்பர்களை இனம் கண்டு அவர்களையும் வாழ்த்த திரி தொடங்கிய அந்த நெடுதுயர்ந்த நண்பர் தமிழாவுக்கு வாழ்த்துக்கள் என்று அவரையும் வாழ்த்திவிட்டார், இந்த கர்ணன்.

4. இந்தக் குறும்புக்கார அன்பர் bedroom_salak அவர்கள் "சத்தமேயில்லாமல், 4000பதிவுகளை கண்டு அசத்திட்டீங்க..." என்று சிலாக்கிறார்.

5. பல சிகரங்களை தொடச் சொல்லி, உற்சாகப்படுத்துகிறார் பேராசைக்காரர் வரிசையில் இருக்கும் இந்த அன்பர். கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் சென்ற கதைதான் அய்யா, அம்மா, அம்மணி இவர் சொல்வது! இவருக்கும் என்னுடைய வணக்கம் !

6. நம்முடைய கனவுலக சஞ்சாரியான அன்பர் dreamer "நான் எது எழுதினாலும் எழுதின அன்றே ஒரு பின்னூட்டம் எழுதிவிடுவார். ஆரம்பத்தில் வரிக்கு வரி 'அய்யா, அய்யா என்று அழைத்துக்கொண்டிருந்தார்"
"நீங்கள் எழுதுவதை அம்மாக்கள் படிக்கறதில்லையா?' என்று நான் ஒரு முறை கேட்டபிறகு எங்கும் 'அய்யா, அம்மா' தான்!"
" இப்போது கல்யாணத்தின் கல்யாணத்தில் பிஸியாக இருந்தாலும் பின்னூட்டம் இடுவதில் எப்போதும்போல் வேகம்தான்" .

"நாலாயிரம் விரைவில் வளர்ந்து ஐந்தாயிரம், ஆறாயிரம் என்று சிகரங்களைக் கடந்து பத்தாயிரத்தை அடைய என் ஆசிகள்."
இப்படி எல்லாம் எழுதி என்னை மேல் நிலைக்கு தள்ளிவிட பிரயத்தனம் செய்யும் செய்யும் இந்த நல்லவருக்கு என் நன்றி கலந்த வணக்கம்
7. "விஜகனின் 4000 பதிப்புக்கு வாழ்த்துகள்.வரும் போது புயலாக வருவார். நிறைய பதிப்புகள் பதிப்பார்.படைப்பாளியாக உரு மாறியதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்"

"திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கும் நன்றிகள்"
என்று எழுதி உற்சாகம் தருகிறார். இவருக்கு என் நன்றியும் வணக்கமும்.

8. அன்பர் tdrajesh வித்தியாசமான நடையில் கதையை கொடுத்ததற்கு அவர்களோ பல மடங்கு மின் பணத்தை ஒரே தவணையில் அமைதியாக அனுப்பிவிட்டு காரணத்தையும் சொல்கிறார்: "வித்தியாசமான நடையில் கதையை கொடுத்ததற்கு", என்று ரத்தின சுருக்கமாக! வள்ளல்களின் வழி வந்தவர் ஐவரும் ஒருவர் அய்யா, அம்மா, அம்மணி! இவருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். முத்தல் பாகத்தில் நிறைய பிழைகள் உள்ளன. அவைகளைத் திருத்தினால்தான் பின்னூட்டம் இடுவேன் என்று காத்து இருந்தார். திருத்திய பிறகே அந்தப் பெருந்தொகையையை வரவில் அனுப்பினார்.. இன்ப அதிர்ச்சி தந்தவருள் ஐவரும் ஒருவர்.

9. அன்பர் tamizhan_chennai நான் முன்பு எழதிய கரும்புக்காரன் கதைக்கு மின் பணத்தை அமைதியாக அனுப்பிவிட்டு காரணத்தையும் சொல்கிறார்: "கரும்பு கதையை கொடுத்ததற்கு", என்று.

கரும்புக்காரன் கதை http://www.kamalogam.com/new/showthread.php?t=54396 தீ த உ சிரிப்புகள் பகுதியில் வெளியிட்ட முதல் கன்னி முயற்சி அது.

என் காமலோக வாழ்க்கையில் ௦01-03-2010 அன்று முதல் முதலாக இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இவர். இவருக்கு என் நெஞ்சில் நீங்கா இடம் உண்டு.

இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே இருக்கலாம். இன்னும் நிறைய சொல்லவேண்டும். அவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து என் அறிமுகம் பகுதியல் வெளியிடுவேன். எனக்கு கொஞ்ச கால அவகாசம் தாருங்கள்.


இடையில் இந்த வீணாய்ப் போன கல்யாணாம் வேறு என் கதவைத் தட்டிக் கொண்டு தொல்லை தருகிறார். அவரை ஒரு வழிக்கு கொண்டு வருவதே பெரும் பாடாய் இருக்கிறது, அய்யாமார்களே , அம்மாமார்களே, அம்மணிமார்களே. அதுவரை என்னை சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்.
Reply With Quote