எனக்குள் நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் மனதில் இருந்து வந்தது. மாதாந்திர சிறந்த கதைகள் போட்டியில் எப்போதும் (பெரும்பாலும்) தொடர்கதைகள் மட்டுமே முதலிடத்தை பிடிக்கின்றனவே, ஒரே பாகமாக இருந்தாலும் முத்திரைக் கதைகள் கூட முகவரி இழந்துவிடுகிறதே ஏன்? என்பது தான் அது. அந்த நடைமுறையை முறியடித்து நண்பர் முதலிடம் பெற்றிருப்பது லோகத்தில் என்றுமே 'திறமைக்கு'த் தான் வாக்கு என்பதை புரிய வைத்து படைப்பாளிகளுக்கு நம்பிக்கையை, உற்சாகத்தை, உத்வேகத்தை அளிக்கிறது. இதற்காகவே ஒரு சிறப்பு பாராட்டுக்கள் கண்ணன். இந்த வெற்றி எத்தனை பெரியது என்பது என்னைப் போல ஏக்கத்துடன் காத்திருப்பவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்....
தோழி முதிர்கன்னியின் கதைக்கு வந்திருந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எண்ணி எனக்கெ கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் வாக்கெடுப்பு என வந்த பொழுது ஒரு வாக்கில் இரண்டாமிடம் பெற்றாலும் வாக்காளர்கள் அவர் உழைப்பிற்கு, திறமைக்கு ஏற்ற பெருமையைத் தேடித் தந்திருப்பது கண்டும் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் தோழி...
நண்பர் ராசுவின் இந்த வென்ற கதையும் வெற்றி வரிசைக்கு தகுதியான ஒன்றாக இருந்தது. பொதுவாகவே சமூக நடப்புகளை, பாலியல் சார்ந்த விசயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கு நண்பர் ராசு தவறியதே இல்லை. ஒரு சமூக அக்கறை கொண்டவரின் கதை வென்றதில் மகிழ்கிறேன்...
முதல் பத்து இடங்களைப் பிடித்த கதைகளின் ஆசிரியர்கள் விரைவில் முதலிடம் நோக்கி முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும் முடிவு. அவர்களுக்கும், பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
|