8000 பதிப்புகளை கடந்த நண்பர் வி ஜெகன் அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்...! அய்யா, அம்மணி என்று லோக நண்பர்கள் எல்லோரையும் வாய் நிறைய அன்போடும் பாசத்தோடும் அழைத்து பழக்கப்பட்டவரான அவர், கடந்த சில மாதங்களாக ஏதோ ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றே கருதுகிறேன்.
அதனால்தான் மச்சான் நடத்திய 'ரகசிய உறவு' வாசகர் சவாலில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாமல் அதில் பதிக்கப்பட்ட கதைகள் ஒன்றுக்குமே பின்னூட்டங்களும் பதிக்க இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். தற்போது அவரின் பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். இல்லாவிட்டால் என்றோ 9000 த்தை கடந்து பத்தாயிரத்தையும் நெருங்கி இருப்பார்.
எது எப்படியாகினும் தொடர்ந்து உங்களின் பதிவுகளை கொடுத்து முன்பு போல் எல்லோரையும் அய்யா அம்மணி என்று பாசத்துடன் அழைக்க மச்சான் வேண்டுகோள் வைக்கிறேன் நண்பரே.
|