எல்லோருக்கும் அப்படித்தான். உங்களுக்கு மட்டுமில்லை. தளத்திலே உள்ளடங்கிய கூகிள் தமிழ்தட்டச்சு கூகிள் நிறுவனத்தின் கட்டுப்பாடு காரணமாக செயலிழந்து விட்டது.
தளத்திலே சொந்தக்கணினி வைத்திருப்போர் ஏதாவது தமிழ் உள்ளீட்டு கருவி (எகலப்பை அல்லது அழகி அல்லது என் எச் எம் எடிட்டர்) மூலமாகவும் பொதுக்கணினி உள்ளவர்கள் நீங்கள் சொன்னது போல கூகிள் தமிழ் உள்ளீடு பக்கத்தை இன்னொரு சாளரத்தின் திறந்து அதில் ட தட்டச்சி பின் நகலெடுத்து இங்கே பதிப்பது மூலமாகவே தளத்திலே தமிழ் பதிவுகள் செய்து வருகின்றனர்.
இது தவிர மொபைல் மூலம் தளம் வருபவர் கருத்து பதிப்பவர் ஒரு சிலர் கதையே பதிக்கின்றனர், மொபைல் போனில் உள்ள தமிழ் இடைமுகம் மூலம் தட்டச்சி வருகின்றனர்.
எனவே இந்த பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் தான். சாலையின் ஒரு பக்கம் வேலை நடக்கும் போது மாற்றுப்பாதையில் செல்வதைப்போல எல்லோரும் பயனிக்கின்றனர்.
ஆனால் சிலர் 3 மாதங்களாக கதைகளை மட்டும் படித்து விட்டு ஒரு பங்களிப்பும் செய்யாமல் தடை படுபவர்கள், இதனை ஒரு காரணமாக சொல்லி வருவது ஏற்புடையதன்று. நிறைய பேர் சிரமப்பட்டு பங்களித்தே இந்த தளம் நடக்கின்றது என்னும் போது சிலர் கதை படித்து மனமகிழ்ந்து ஆனால் தத்தம் சிறு பங்களிப்பு (கருத்து பதிவது) கூட செய்யாதது ஏற்புடையதன்று. அம்மாதிரி பதில்களை நாங்கள் (நிர்வாகம்) ஒரு போதும் ஏற்பதில்லை.
__________________
|