Quote:
Originally Posted by bj
செந்தமிழ் செல்வரே... தாய்த் தமிழின் தவப் புதல்வரே... தமிழாசானே... இப்பேதையின் வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. உமது தமிங்கில முகமூடியை சற்று விலக்கி உம் செவிகளை சற்று எம் பக்கம் சாய்ப்பீர்களா? இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்...!!!
|
அது முக்கியமல்ல எங்கள் விவாதமே தமிழைப்பற்றித்தானே சரி நண்பியே
தமிங்கில முக மூடியை நீக்கிற்றேன் ..................
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா என்றுதானே கேட்டேன் அதற்கு இவ்வளவு கோபமா?
இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்
பண்டைக்கால புலவர்களும் எழுத்துப்பிழைகள் விட்டாங்களோ - அதை தமிழ் படித்த பண்டித மாமேதை செந்தமிழ் செல்வியுமா அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுவதா?