திறமையான எதார்த்தமான எழுத்து நடையில் கலக்கிய நண்பர் கலேஷன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நிறைய இடங்கள் மிகவும் ரசிக்க வைத்தவை......அவைகளில் சிலவற்றை எடுத்து சொல்வது சிறப்பென்று கருதுகிறேன்....
ஒரு பாமரத்தனமான போஸ்ட்மன்.....மச்சானை எண்ணி ஏங்கி கிடக்கும் சின்னத்தாயி.....காமத்துக்கு ஒத்துக்கொள்ளும் காரணம் எதிர்பாராதது ....சிந்திக்க வைத்தது....அதிலும் ஒரு பாமரத்தனம்
ட்ரைவர் கேரெக்டர் புதுமை....அவர்களின் காமவேட்டை யதார்த்தம்......இப்படித்தான் இருக்கிறார்கள் சிலர்.
மிக உருக வைத்தவள் இன்னொரு நாயகி.....காதல் காட்சிகள் எல்லாம் இவளிடம் தான் எடுபட்டது.
நண்பர் நைஸ் கை அவர்கள் இப்படி காமம் ததும்ப கதை எழுதுவார் என்று சத்தியமாய் என்னவே இல்லை. அவர் தவறாமல் பின்னுட்டமிடுவார் ஆனால் ஒரு வரிதான் இருக்கும்......பட்டென சொல்லிவிட்டு போவார் அவரா இவர் என்று எண்ணவைத்தது அவரின் நீண்ட காம உரையாடல்கள் நிறைந்த இந்த கதை.
எனது பார்வையில் போட்டி என்பதெல்லாம் கதை எழுத கற்பனையை தட்டிவிட ஒரு சாக்கு.....ரசிகர்கள் நிறைந்து இருக்கும் இந்த சபையில் எழுத்து பிராக்டிஸ் பண்ணாவிடில் வேறு எங்கே போய் பண்ணமுடியும்.....ஆனாலும் குறைந்த அளவே கலந்து கொள்கிறார்கள்.....குறைந்த அளவே வாக்களிக்கிறார்கள்......குறைந்த அளவே பின்னுட்டமிடுகிரார்கள் .....இது தான் மனதை சிரமபடுத்துகிறது....என் ஒவ்வொரு கதைகளுக்கும் கீழே படித்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டினாலும் பின்னுட்டம் என்னவோ பத்து கூட இருக்காது.....பாராட்ட மனமில்லையா, நேரமில்லையா, வசதியில்லையா என்று தான் கேட்க தோன்றுகிறது ஆனாலும் கேட்டு கேட்டு பெற்றால் அது அசிங்கமில்லையா.....? ஆகவே மவுனமே.
அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் நிறைய பேர் கலந்துகொள்ள வேண்டுமென்றும்.....இன்னும் நிறைய பேர் பின்னுட்டமலைக்க வேண்டுமென்றும் வேண்டி கேட்டு கொள்கிறேன்....
கதைகளுக்கு பின்னுட்டமிட்டு மறவாமல் வாக்கு அளித்து பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றிகள்
ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....படிப்பாளிகள் படைப்பாளிகளை தட்டி தட்டி உருவாக்கவில்லை என்றால் உங்களுக்கு மொக்கை சிற்பங்களும், சிற்ப்பிகளும் தான் கிடைப்பார்கள்......ஏன்னா எளவைடா எழுதுறானுங்க என்று நீங்கள் கதைக்கு வேறு இடத்தை தான் தேட வேண்டும்.....நான் தேடி விட்டேன் .....ம்ஹீம் .....தெரியவில்லை
இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....கதை ஒன்றும் தொட்டனைத்துரும் மணற்கேணி அல்ல.....உள்ளே இருக்கும் சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டால் அடுத்ததர்க்காக தவம் கிடக்க வேண்டும் .....அப்படி தவம் கிடக்கும் சினிமா கதையாசிரியர்களை நீங்கள் அறிவீர்கள் .....அதே நேரம் உங்கள் தட்டிகொடுத்தல் எழுத்தாளர்களின் மணற்கேணியை தூர் வாரி விடுவது போல இருக்கும்....சில நண்பர்கள் பின்னுட்டங்களில் ஐடியா கொடுப்பார்கள், ஆஹா என்பார்கள் இதெல்லாம் எழுத்தாளர்களுக்கு படிப்பவனின் ரசனை புரியும்.....அவர்களுக்காக எழுத தூண்டும்....யோசிக்க தோன்றும், கடவுள் புண்ணியத்தில் எனக்கு சின்ன வயதில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.....எழுதியவுடன் அந்த பேபரை பிடுங்கி கொண்டு ஓடுவார்கள் ....அதுபோல நீங்களும் வளரும் எழுத்தாளர்களை வளர்த்து விட வேண்டும் என்று வேண்டுகிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000
Last edited by subbu2000; 15-11-14 at 02:06 PM.
|