Quote:
Originally Posted by asho
எதற்கெடுத்தாலும் திரி ஆரம்பித்து சந்தேகம் கேட்டால், உங்களுக்கு எப்படி நிர்வாக உறுப்பினர் உடனே உதவி செய்வார்கள்?. தனிமடலில் நிர்வாக உறுப்பினரிடம் கேட்டால் என்ன வந்தது?
உங்களுக்கு தமிழ்வாசல் அனுமதி தந்தபின்னரே உங்கள் திரி உரிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தந்த வாசலில் பதிக்க வேண்டியதை அந்தந்த வாசலுக்கு சென்று பதிக்க வேண்டுமே அன்றி தலைவாசலில் அல்ல. தலைவாசல் தற்காலிகமாக ஒரு உறுப்பினர் தமிழில் பதிக்கிறாரா என்று பார்க்கவே 20 போஸ்ட் என ஒரு குறைந்த எண்ணிக்கை அளவு வைத்து சோதித்து அடுத்தடுத்த வாசல் அனுமதி தருகிறோம், 2018ல் ரீ ஆக்டிவேட் செய்த உங்கள் கணக்கு 2020 டிசம்பரில் அந்த வாசலுக்கு அடுத்த வாசல் அனுமதி கேட்டு பதிகிறீர்கள் என்றால் உங்கள் செயல்பாடு மந்த கதியில் உள்ளது என்று அர்த்தம். தலைமை நிர்வாகி விடுப்பில் இருப்பதால் அடுத்த வாசல் அனுமதி செய்வதில் நிர்வாக உறுப்பினர் குழு முடிவுப்படியே அனுமதி கிடைக்க கூடும். நீங்கள் பல மாதம் சும்மா இருந்து விட்டு திடிரென வேகம் எடுத்து எல்லோரும் அதற்கேற்றாற் போல் இருக்க வேண்டும் என்றால் எப்படி?.
சோதித்து பார்த்ததில் உங்களுக்கு தமிழ்வாசல் அனுமதி தரப்பட்டுள்ளது, உங்கள் ப்ரவ்சர் குக்கீஸ் பிரச்சினை உள்ளது, உங்களை Forum Rules NOT accepted ரீ செட் செய்துள்ளோம், அதனை அக்சப்ட் செய்த பின் இந்த பிரச்சினை இருக்காது.
|
நீங்க பழைய உறுப்பினர், இது போன்று எண்ணற்ற விண்ணப்பங்களை பார்த்து இருப்பிர்கள், உங்கள் கோபம் நியமானது. என் பக்கம் இவை அனைத்தும் புதியது, நீங்க மேலே குறிப்பிட்ட அனைத்துக்கும் என்னால விளக்கங்கள் கொடுக்க முடியும், தளத்தின் மேற்பார்வையாளர் என்ற முறையில் உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.
எனக்கு முழு அனுமதி சரியாக செயல்படுத்தும் முன்னர், நான் பதித்த திரி வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது அதை நான் திறக்க முயற்சித்தால் அனுமதி இல்லை என்று சொல்லும்போது நான் என்ன செய்வது.
இந்த திரி தொடங்கியபிறகு இப்போது என் பெயருக்கு கீழே தமிழ்வாசல் மெம்பர் என்று காட்டுகின்றது, இருந்தும் தமிழ் வாசலில் உள்ள எந்த பகுதியிலும் சென்று பார்க்கவோ பாதிக்கவோ முடியவில்லை.
நீங்கள் சொன்னது போன்று தளத்தின் விதிமுறைகள் ஏற்றுக்கொண்டு சரி என்றும் சொல்லிவிட்டேன் அப்போதும் தமிழ்வாசல் பகுதியில் இன்னும் என்னால் எதுவும் பதிக்கமுடியவில்லை, அனுமதி இல்லை என்றே வருகின்றது.
பாயர்பாஸ், கிறோம் இரு செயலிகளிலும் திறந்து பார்த்துவிட்டேன் அனுமதி இல்லை என்று தான் வருகின்றது
தலைவாசலில் நான் பதித்த கதைக்கு இறுதி பகுதி ஒன்று உள்ளது அதை முடிக்காமல் செல்ல மனம் இல்லை அதனால் அதை மட்டுமாவது அங்கு பாதிக்க அனுமதியுங்கள்.