தம்பி மதனின் ஆதங்கம் நியாயமானதுதான். கையொடிய எழுதிய கதைகளுக்குப் பொத்தாம் பொதுவாகப் பின்னூட்டம் தருவது படைப்பை / படைப்பாளியை அவமானப்படுத்தும் செயலே.
Quote:
Originally Posted by asho
....குறை தெரிந்தால் பொதுவிலே தெரிவிப்பதற்கு பதில் சம்பந்தப்பட்ட நண்பருக்கு தனிமடலில் தெரிவியுங்கள். அவர் அதனை (போதிய கால அளவில்)கண்டுகொள்ளவில்லை என்றால், அந்த திரியிலே முதலில் நிறைகள் ஏதாவது இருந்தால் அதனை பதிந்து பின் குறையை பதியுங்கள்.
இதனால் நட்பு வளரும். நம் தளத்திலே படைப்புகள் பெருகும்.
|
கரெக்ட். அசோ சொன்ன இந்த வழிமுறையைத்தான் நான் முதலில் இருந்தே பின்பற்றி வருகிறேன். மனம் புண்படாமல், அதே சமயம் நாம் நினைக்கும் கருத்துகளையும் சொல்லிவிடலாம்.
Quote:
Originally Posted by PUTHUMALAR
.......மொத்தமாக நேரம் கிடைக்கும் போது திரிகளைப் படித்து அதற்கு பின்னூட்டக் குறிப்புகளையும் நோட்பேடில் குறித்து வைத்துக் கொண்டு பிறகு வேறொரு சமயம் வரும் போது அந்த திரிகளை வரிசையாக எடுத்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இடுவதும் உண்டு.. ......
|
தோழி புதுமலர் சொல்வதுபோல், இதையும் அடிக்கடி செய்து வருகிறேன். கதைகளை/படைப்புகளை உள்வாங்காமல், பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்ட, பெயருக்குப் பின்னூட்டம் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நான் செய்வதும் இல்லை.