யப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆ..
ஒரு கலக்கு கலக்கிப்புட்டார் வரிப்புலி. பின்னே..புலியல்லவா?
இப்பத்தான் இந்தத் திரியைப் பார்த்தேன்.
பார்த்தவுடனே பதில் தர வேண்டுமெனத் தோன்றியது.
இதோ..என் flashback..
முதலில் "மேற்படி" சமாச்சாரங்களை வலைத்தளத்தில் பார்ப்பதற்காக 2002-ல் ஒரு பெயர் தேர்ந்தெடுத்து ஒரு email ID-create பண்ணினேன். அது lambaboy2002 (நான் 6 அடி உயரம் இருப்பதால் என் நண்ப..நண்பிகள் என்னை விளிப்பது lambaboy-என்று).
பின்னர் அதே பெயரில் நம் காமலோகத்தில் பதிந்தேன். உள்ளே வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது,
இது சாதாரண...XYZ..வலைத்தளமல்ல..தமிழ் வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு அற்புதமான தளம் என்று.
அதனால் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என் உண்மைப்பெயரைக் கூறியும்..கூறாமலும் ஒரு பெயர் தேர்ந்தெடுத்து மாற்றி வைத்துக் கொண்டது தான் "சூரியத்தமிழன்". "சூரியன்" என்பது என் உண்மைப் பெயரின் முதல் பாதி(அதாவது சூரியன் என்று அர்த்தம் வரக்கூடிய என் உண்மைப்பெயரின் முதல் பாதி). "தமிழன்" என்று சேர்த்துக்கொண்டது..என்னதான் வயிற்றுப் பிழைப்புக்காக ஐரோப்பாவில் 2 வருடங்கள் அலைந்து, பின் இப்போது அமெரிக்காவில் இருந்தாலும், என் தாய் மொழியாம் தமிழின்பால் யான் கொண்ட அளவு கடந்த பாசத்தால்.
என் உண்மையான பெயர்..(தொலைபேசிஎண் உள்பட..) நம் லோகத்தில் இருவருக்கு மட்டுமே தெரியும். அவர்கள் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள்(அதற்காக மற்ற நண்பர்கள் அப்படி இல்லை என்று அர்த்தமில்லை).
என் "avatar"....வலைத்தளத்தில் தேடி, ஒரு படத்தைத் தெரிவு செய்து(சூரியன்-நடுவில்..மற்ற கோள்கள் அதைச்சுற்றி...), பின் அதில் என் பெயர் பதித்து நானே உருவாக்கியது.
இந்தப் பெயரும்..avatar-ம், நான் நம் லோகத்தில் இருக்கும் வரை மாறாது..மாற்றும் எண்ணமும் எனக்கில்லை.
போதுமா வரிப்புலியாரே..இல்லை இன்னும்..வேணுமா???
அப்படின்னா..எனக்கு தனிமடல் அனுப்பவும்.