தமிழ் திரைப்படங்களுக்கு ஐந்து தேசிய விருதுகள்
இன்று அறிவிக்கப்பட்டுள்ள 63ஆம் தேசிய விருதுகள் பட்டியலில் தமிழ் திரைப்படங்களுக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த தமிழ் படம் ; விசாரணை.
சிறந்த பின்னணி இசை : தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு.
சிறந்த இணை நடிகர் விருது : சமுத்திரக்கனி - விசாரணை படத்திற்காக.
சிறந்த படத் தொகுப்பாளர் விருது: கிஷோர்- விசாரணை படத்திற்காக.
சிறப்பு சான்றிதழ்: இறுதி சுற்று படத்தில் நடித்த குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங் அவர்களுக்கு.
இசைஞானி இதற்கு முன்பே பலமுறை வாங்கி இருந்தாலும் , பின்னணி இசைக்காக முதல் முறையாக விருது பெறுகிறார் என்று நினைக்கிறேன்.
கிஷோர் அவர்கள் மரணம் அடைந்தபின் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. இறந்தும் பெருமை பெறுகிறார்.
சமுத்திரக்கனி இயக்கத்துக்காக விரைவில் விருது பெறுவார். இது அவருக்கு ஒரு அட்வான்ஸ் ஆக இருக்கட்டும்.
விருது பெற்று தமிழ் திரை உலகுக்கு பெருமை சேர்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கூடவே கிஷோர் அவர்களுக்கு அஞ்சலிகளும் .
பின் குறிப்பு: முதலில் நான்கு விருதுகள் என நினைத்து தலைப்பு இட்டு பதிவிட்டு விட்டேன்..பின்பு எடிட் செய்தபொழுது , செய்தி எடிட் ஆனாலும் தலைப்பு எடிட் ஆகவில்லை. அதை எப்படி பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் யாராவது தலைப்பில் நான்கு என்று உள்ளதை ஐந்து என மாற்றும்படி அன்போடு வேண்டுகிறேன்.
Last edited by tamilplus; 29-03-16 at 01:05 AM.
Reason: correction
|